Tuesday, July 8

ஆன்மீகப் பதிவு

மனிதனுக்கும், கடவுளுக்கும் உள்ள வித்தியாசம்? / Different b/w Human & God?

மனிதனுக்கும், கடவுளுக்கும் உள்ள வித்தியாசம்? / Different b/w Human & God?

ஆன்மீகப் பதிவு, ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
பொதுவாக மாயாவதிகள் என்பவர்கள் 'எல்லாம் மாயை, மற்றும் கிருஷ்ணரும் மாயை' என்று கூறுவார்கள். கிருஷ்ணர் செயல்முறையில் இதெல்லாம் மாயை அல்ல என்று காட்டினாலும், இது முழுமையாக ஆன்மீகமானது என்று கூறினாலும் அவர்களுடைய மந்த புத்தி 'கிருஷ்ணர் தலையாய பூரண உண்மை' என்று ஏற்றுக் கொள்ளாது.கிருஷ்ணர் 'மன்மனாபவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு' (ப.கீ. 18.65) 'என்னுடைய பக்தன் ஆவாய். எனக்கு உன் வந்தனைகளை சமர்ப்பிப்பாய். எப்போதும் என்னை நினைத்து இரு' என்று கூறுகிறார்.இதற்கு அந்த அறிஞர்கள் என்று கூறப்படுபவர்கள், "இது கிருஷ்ணர் என்ற நபருக்கு அல்ல. இது அவருள் பொதிந்திருக்கும் ஒன்று'' என்று கூறுவர். இந்த மூடர்களுக்கு கிருஷ்ணரின் அகத்திற்கும் புறத்திற்கும் வித்தியாசம் இல்லை என்று தெரியாது.நமக்கும், கிருஷ்ணருக்கும் வித்தியாசம்?கிருஷ்ணர் பூரணமானவர். இருமைக்கு அங்கு இடமில்லை, இந்த அறிவு அவர்களுக்கு கிடையாத...
மின்னுவதெல்லாம் பொன் அல்ல! வேஷதாரிகள் எல்லாம் சாதுக்கள் அல்ல!! / All that glitters is not gold

மின்னுவதெல்லாம் பொன் அல்ல! வேஷதாரிகள் எல்லாம் சாதுக்கள் அல்ல!! / All that glitters is not gold

ஆன்மீகப் பதிவு, கதைகள்
மஹாபாரதப் போர் ஆரம்பிக்கும் முன், மன்னன் துரியோதனன், தன்னுடைய பாசறையில் கர்ணன், துச்சாதனன், சகுனி மற்றும் சகுனியின் மகனான சுவாலா ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினான். பின் சகுனியின் மற்றொரு மகனான உலுக்காவை அழைத்து, பாண்டவரிடம் தூது செல்லக் கூறினான். மேலும் தான் கூறும் பின்வரும் வார்த்தைகளை மாறாமல் அப்படியே யுதிஷ்டிரரிடம் கூறுமாறும் கேட்டுக் கொண்டான்.“ஓ பரத குலத் தோன்றலே, யுதிஷ்டிரா! எவ்வாறு உன்னுடைய இதயத்தை, அதர்மத்தில் நிலை நாட்டி உள்ளாய். நீ எல்லா ஜீவன்களின் துன்பத்தையும் நீக்குவதற்கு பதிலாக, பிரபஞ்சத்தின் அழிவை நீ எவ்வாறு விரும்பலாம்?" என்று கூறுமாறு துரியோதனன் உலுக்காவை கேட்டுக் கொண்டான்.மேலும், "தேவர்களால் அவருடைய ராஜ்யம் கைப்பற்றப்பட்ட போது, பிரகலாத மகாராஜா பாடிய பாடல் ஒன்று நான் கேட்டுள்ளேன்" என்று மேலும் பின்வரும் வரலாறை கூறினான்.பிரகலாத மகாராஜா தேவர்களிடம், "தேவர்களே...
உங்கள் இயக்கத்தில் இளம் வயதினர் அதிகம் ஏன்? / Why more young people in ISKCON?

உங்கள் இயக்கத்தில் இளம் வயதினர் அதிகம் ஏன்? / Why more young people in ISKCON?

ஆன்மீகப் பதிவு, பக்தி யோக - Tips
பிரபுபாதாவை யாரெல்லாம் முதல் முறையாக பார்க்கிறார்களோ அவர்களது வாழ்க்கையில் அது மிகவும் முக்கியமான நிகழ்வாக இருக்கும்.அப்படி ஒரு நிகழ்வு, ஸ்ரீல பிரபுபாதா கெய்ன்ஸ்வெல நகரத்திற்கு வந்த போதும் நடந்தது. புளோரிடாவில் உள்ள இந்த 'கெய்ன்ஸ்வெல' நகரம் மிக மிகச் சிறிய இடமாகும். அதே போல் இங்கிருந்த இஸ்கான் மையமும் சிறியது தான்.உலகளவிலான இஸ்கான் கோயில் பட்டியலில் கூட இதன் பெயர் இடம் பெற வில்லை. இருந்தும் பிரபுபாதா வந்தது எங்களுக்கு மிகவும் சந்தோசம்             வந்ததும் பிரபுபாதா ஒரு அறிமுக உரையை அளித்தார்.அந்த உரையில் பிரபுபாதா "ஸ்ரீ சைதன்ய மஹாப்பிரபுவின் பிறப்பிடத் திலிருந்து வெகு தொலைவில் இருக்கும் இந்த இடத்தில் இருப்பது எனக்கு மிகுந்த சந்தோஷம்" என்றார்.தொடர்ந்து பிரபுபாதா பேசுகையில், 'எங்கோ ஒரு மூலையில் இருக்கும் இந்...
இருப்பவனின் கடமை என்ன? இறப்பவனின் கடமை என்ன ? / Duty of  a Person

இருப்பவனின் கடமை என்ன? இறப்பவனின் கடமை என்ன ? / Duty of a Person

ஆன்மீகப் பதிவு, பக்தி யோக - Tips, வாழ்க்கை தத்துவம்
இருப்பவனின் கடமை என்ன? இறப்பவனின் கடமை என்ன ?உயிர் வாழ்பவனின் கடமை என்ன? உயிர் பிரியப் போகிறவனின் கடமை என்ன? என்ற இரண்டு கேள்விகள் மனித சமுதாயத்திற்கு மிகவும் ஆர்வத்தை தூண்டும் இரு கேள்விகளாகும். இந்த இரண்டு கேள்விகளே ஸ்ரீமத் பாகவதத்தின் மூல அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.பரிக்ஷித்து சாபம் பெறுதல்"மரியாதை இன்றி என்னுடைய தந்தையை (கழுத்தில் செத்த பாம்பை மாலையாக இட்டு) அவமதித்த குலத்துரோகியை (பரிக்ஷித்து மகாராஜனை), இன்றிலிருந்து ஏழாவது நாள் தக்ஷகன் கடிக்கட்டும்'' என்று சமீக மகரிஷியின் புத்திரனான சிறுவன் ஸ்ருங்கி தன் தவ வலிமையால் பரிக்ஷித்து மகாராஜனுக்கு சாபம் இட்டான்.ஸ்ருங்கி இட்ட சாபத்தால் தக்ஷகன் தன்னை தீண்டப் போவதையும், அதனால் தனக்கு திடீர் மரணம் விளையப் போவதையும் அறிய வந்த பரிக்ஷித்து மகாராஜா, தான் உலகைத் துறந்து விடுவதற்கு இதுவே சரியான காரணமாக இருக்கப் போகிறது என்பதை உணர...
Jayapataka Swami Life History (Tamil) / ஜெயபதாக ஸ்வாமி மஹராஜின் வாழ்க்கை வரலாறு

Jayapataka Swami Life History (Tamil) / ஜெயபதாக ஸ்வாமி மஹராஜின் வாழ்க்கை வரலாறு

ஆன்மீகப் பதிவு, வாழ்க்கை வரலாறு
https://youtu.be/N-gEP51ndCE ஸ்ரீல ஜெயபதாக ஸ்வாமி பிரணாம மந்திரம்"நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண பிரேஸ் தாய பூதலேஸ்ரீமதே ஜெயபதாக ஸ்வாமின் இதி நாமினே" பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவரும், அவரது தாமரைப் பாதங்களில் தஞ்சமடைந்தவருமான, தவத்திரு.ஜெயபதாக ஸ்வாமி அவர்களுக்கு எனது மரியாதை கலந்த வணக்கத்தை செலுத்துகின்றேன்.-----------------------------------------"நம ஆச்சார்ய பாதாய நித்தாய் கிருப பிரதாயினேகெளர கத தாம தாய நகரக் கிராம தாரினே" ‘நான் உங்கள் நாட்டிற்கு தூதுவனாக சென்றேன் மற்றும் மிகச்சிறந்த ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரையும் கிருஷ்ணர் என்னிடம் அனுப்பிவைத்தார்.” ஸ்ரீல பிரபுபாதர் ஸ்ரீ கிருஷ்ணரால் ஸ்ரீல பிரபுபாதரிடம் அனுப்பிவைக்கப்பட்ட மிகச்சிறந்த ஓர் ஆத்மாவே கடந்த 33 வருடங்களாக ஸ்ரீல பிரபுபாதரின் சேவையில் ‘சுய நலமற்ற சேவகராக” இடையறாது பணியாற்றிக் கொண்டிருக்கும் தவத்திரு த்ரிதண்டி பிக...
Sri Gauranga Mahaprabhu gave darshan to Sri Ramanujacharya – Tamil / ஸ்ரீ வைகுண்டபுரம், ஸ்ரீ கௌரசுந்தரர் இராமனுஜருக்கு காட்சியளித்தல்.

Sri Gauranga Mahaprabhu gave darshan to Sri Ramanujacharya – Tamil / ஸ்ரீ வைகுண்டபுரம், ஸ்ரீ கௌரசுந்தரர் இராமனுஜருக்கு காட்சியளித்தல்.

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஆன்மீகப் பதிவு
எல்லாபுகழும் கௌரங்கர் மற்றும் பஞ்சதத்துவங்களுக்கே! எல்லாப்புகழும் ஸ்ரீசைதன்ய மகாபிரபுவின் வாசஸ்தலமான நவத்வீபதாமத்திற்கே!வைகுண்ட புரத்திற்கு வந்தடைந்த நித்யானந்த பிரபு, ஸ்ரீ ஜீவரை மென்மையான புன்னகையுடன் நோக்கினார். "நவத்வீபத்தின் எட்டு இதழ்களின் ஒருபகுதி இந்த வைகுண்டபுரமாகும். சந்தேகத்திற்கிடமின்றி கேட்பாயாக ஸ்ரீமந்நாராயணரின் வாசஸ்தலமான வைகுண்டம் ஆன்மீக வானத்தில்  வ்ரஜா நதிக்கு அப்பால் அமைந்துள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் நீளா தேவியாகிய தமது அந்தரங்க சக்திகளால் சேவை சாதிக்கப்படும் பகவான் நாராயணரின் இருப்பிடத்தில் மாயாவால் ஒருபோதும் நுழையவே முடியாது. இந்த ஆன்மீக தாமத்தின் பரப்பிரம்மனிலிருந்து வெளிவரும் ஜோதியே பிரம்மஜோதியாக பிரகாசிக்கின்றது. பௌதீக நோக்கில் காணும் மக்களுக்கு பௌதீக உலகாகவே காட்சியளிக்கும். ஆனால் ஒருமுறை நாரதர் தனது ஆன்மீக பார்வையுடன் நாராயணரை நோக்கிய போது இத்தாமத்தில...
Sri Madhvacharya (Tamil) / ஸ்ரீ மத்வாச்சார்யர்

Sri Madhvacharya (Tamil) / ஸ்ரீ மத்வாச்சார்யர்

ஆன்மீகப் பதிவு, வாழ்க்கை வரலாறு
ஸ்ரீ மத்வாச்சார்யர் கிபி 1238 இல் தென்னிந்தியாவில், கர்நாடகாவின் உடுப்பிக்கு அருகில் தோன்றினார். அவர் வாயுவின் (காற்றின் கடவுள்) அவதாரமாகக் கருதப்பட்டார். அவர் வழக்கத்திற்கு மாறாக வலுவான உடலமைப்பு மற்றும் அசாதாரண அறிவுசார் ஆற்றலைக் கொண்டிருந்தார். ஒருமுறை மத்வாச்சாரியாரின் சந்நியாச சீடரான சத்ய தீர்த்தரை கடுமையான வங்காளப் புலி தாக்கியது. மத்வாச்சாரியார் புலியுடன் மல்யுத்தம் செய்து அதன் வாலை கால்களுக்கு இடையில் வைத்து அனுப்பி வைத்தார். மத்வாச்சார்யர் ஐந்து வயதில் தீக்ஷையையும், பன்னிரெண்டாவது வயதில் சன்யாசத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். சங்கரரின் மாயாவாத தத்துவத்தை எதிர்த்துப் போராடி தோற்கடிக்கும் நோக்கத்துடன் அவர் தோன்றினார். வேதாந்த-சூத்திரத்தின் தூய விளக்கத்தை அளித்ததன் மூலம் அவர் தூய இறைசக்தியை ஊக்குவித்தார். அவர் தனது புதுமையான சாஸ்திர விளக்கத்திற்கு த்வைத-த்வைத-வாத ...
மோக்ஷத ஏகாதசி

மோக்ஷத ஏகாதசி

ஆன்மீகப் பதிவு, Videos, ஏகாதசி
https://youtu.be/wN9fehB9AAU மோக்ஷத ஏகாதசி மகிமைகுருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணரால் அர்ஜுனருக்கு கீதை சொல்லப்பட்ட நாள் இது என்பது மோக்ஷத ஏகாதசிக்கு மற்றொரு சிறப்பு.மார்கழி மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசியின் மகிமையை விளக்குமாறு கிருஷ்ணரை வேண்டுகிறார் யுதிஷ்டிரர். அந்த ஆர்வமே பாவங்களைப் போக்கி மோக்ஷம் தரவல்லது என்கிறார் கிருஷ்ணர்.இப்புனித நாளில் தூபம், நெய் தீபம், நறு மலர்கள், மற்றும் துளசி மஞ்சரிகளைக் கொண்டு தாமோதரரை வணங்குதல் வேண்டும்.இதன் மகத்துவத்தைக் கேட்போரது இறந்துபோன மூதாதையர் நரகத்திற்குச் சென்றோராயினும் மீண்டு சுவர்கலோகம் செல்வர்.சம்பக நகரம் எனும் அழகிய நகரை வைக்காணசா என்னும் ஒரு பக்தி நிறைந்த மன்னன் ஆண்டு வந்தான். இறந்து போன அவன் தந்தை நரகத்தில் மிகுந்த வேதனை அனுபவிப்பதுபோல் அவனுக்கு ஒரு நாள் கனவு வந்தது. துக்கத்தால் நெகிழ்ந்து போன மன்னன் தன் ஆலோசகர்களான அ...
Srila Gopala Bhatta Goswami (Tamil) ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி

Srila Gopala Bhatta Goswami (Tamil) ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி

வாழ்க்கை வரலாறு, ஆன்மீகப் பதிவு
   ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி ( வேன்கட பட்டாவின் மகன், ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்) தென்னிந்தியாவின் ஸ்ரீ ரங்கத்தில் தோன்றினார். ஸ்ரீ சைதன்யா மஹாபிரபு வேன்கட பட்டாவின் வீட்டில் நான்கு மாதங்கள் தங்கியிருந்து, குடும்பத்தை கெளடிய வைணவத்திற்கு மாற்றினார். இந்த நேரத்தில் சிறு பாலகனாக கோபால தனிப்பட்ட முறையில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவுக்கு சேவை செய்தார். ஸ்ரீ சைதன்யர் அவரின் எச்சங்களையும் ஆசீர்வாதங்களையும் அன்பாகக் கொடுத்து அவரை ஆச்சார்யாவாக மாற்றினார்.    நான்கு மாதத்தில், சைதன்யா மஹாபிரபு வேன்கட பட்டாவுடன் நெருங்கிய நட்பை வளர்த்துக் கொண்டார், இதை கிருஷ்ணா தாஸ கவிராஜர் "ஷக்ய ரஸா" என்று விவரிக்கிறார். ஒருவருக்கொருவர் சுதந்திரமாக உரையாடுகையில், அவர்கள் பெரும்பாலும் ஒன்றாக சிரிப்பார்கள், கேலி செய்வார்கள். ஒரு நாள் நகைச்சுவையான மனநிலையில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வேன்கடாவிடம் கேட்டார்: ...
Hera Panchami (Tamil) / ஹேரா-பஞ்சமி

Hera Panchami (Tamil) / ஹேரா-பஞ்சமி

ஸ்ரீ ஜெகந்நாத், ஆன்மீகப் பதிவு
"ஜகந்நாதர் கோயிலிலிருந்து குண்டிசாவிற்குச் செல்லும் வீதியை ஒட்டியுள்ள தோட்டத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பல்வேறு லீலைகளை நிகழ்த்தினார். கிருஷ்ணதாஸர் எனும் பிராமணர் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரவிற்கு அபிஷேக நிகழ்ச்சியினை நடத்தினார்.""குண்டிசா கோயிலில் நடனமாடிய பின்னர், மஹாபிரபு தமது பக்தர்களுடன் நீரில் விளையாடினார், ஹேரா-பஞ்சமி தினத்தன்று அவர்கள் அனைவரும் செல்வத் திருமகளான லக்ஷ்மி தேவியின் செயல்களைக் கண்டனர்."- ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் 1.144-145ஹேரா - பஞ்சமி உற்சவம் என்பது ரத யாத்திரைக்கு ஐந்து நாள்களுக்குப் பின்னர் வருகிறது. பகவான் ஜகந்நாதர் தமது மனைவி லக்ஷ்மியினைக் கைவிட்டு குண்டிசா கோயிலான விருந்தாவனத்திற்குச் சென்று விட்டார். பகவானின் பிரிவினால், லக்ஷ்மி தேவி அவரைக் காண்பதற்காக குண்டிசாவிற்கு வர முடிவு செய்கிறாள். லக்ஷ்மி தேவி குண்டிசாவிற்கு வருவது ஹேரா - பஞ்சமி என்று கொண...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.