Tuesday, April 23

Jayapataka Swami Life History (Tamil) / ஜெயபதாக ஸ்வாமி மஹராஜின் வாழ்க்கை வரலாறு

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸ்ரீல ஜெயபதாக ஸ்வாமி பிரணாம மந்திரம்
“நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண பிரேஸ் தாய பூதலே
ஸ்ரீமதே ஜெயபதாக ஸ்வாமின் இதி நாமினே”

பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவரும், அவரது தாமரைப் பாதங்களில் தஞ்சமடைந்தவருமான, தவத்திரு.ஜெயபதாக ஸ்வாமி அவர்களுக்கு எனது மரியாதை கலந்த வணக்கத்தை செலுத்துகின்றேன்.
—————————————–
“நம ஆச்சார்ய பாதாய நித்தாய் கிருப பிரதாயினே
கெளர கத தாம தாய நகரக் கிராம தாரினே”

‘நான் உங்கள் நாட்டிற்கு தூதுவனாக சென்றேன் மற்றும் மிகச்சிறந்த ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரையும் கிருஷ்ணர் என்னிடம் அனுப்பிவைத்தார்.” ஸ்ரீல பிரபுபாதர் ஸ்ரீ கிருஷ்ணரால் ஸ்ரீல பிரபுபாதரிடம் அனுப்பிவைக்கப்பட்ட மிகச்சிறந்த ஓர் ஆத்மாவே கடந்த 33 வருடங்களாக ஸ்ரீல பிரபுபாதரின் சேவையில் ‘சுய நலமற்ற சேவகராக” இடையறாது பணியாற்றிக் கொண்டிருக்கும் தவத்திரு த்ரிதண்டி பிக்ஷூ ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் ஆவார்.

பிறப்பு, குழந்தைப்பருவம் மற்றும் கல்வி

    ஜான் கோர்தன் எர்ட்மன் என்றழைக்கப்பட்ட ஜெயபதாக ஸ்வாமி அவர்கள் 1949-ல் ஏப்ரல் 9 அன்று (ஸ்ரீ ராம நவமியை அடுத்துவரும் ஏகாதசியில்) அமெரிக்காவில் விஸ்கோன்சினில் உள்ள மில்வொகியில் ஜான் ஹுபர்ட் மற்றும் லாரெய்ன் எர்ட்மன் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். அவர் செல்வவளமிக்க குடும்பத்தில் பிறந்தவராவார். அவர் பிறந்தகாலத்திலேயே மிகப்பெரிய பெயிண்ட் தொழிற்சாலைக்கு அதிபதியாக, கோடீஸ்வரர்களில் ஒருவராக கருதப்பட்டவர் அவரது தாத்தாவார். பின்னாளில் தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் தனது பெயிரினைக் கண்டு – கோர்தன் ஜான் (கெளர் தன் ஜன்) – மிகவும் பூரித்துப் போனார். ஏனெனில் ஏற்கனவே மறைமுகமாக இவரையும் இவருடன் இரு பக்தர்களையும் குறிப்பிட்டு இம்மூவரும் கடந்த காலத்தில் ஸ்ரீ சைதன்யரின் சகாக்களாக இருந்தவர்கள் எனவும், அவர்களே உலகம் முழுவதும் கிருஷ்ண உணர்வை பிரச்சாரம் செய்வதற்கு வசதியாக மேற்கத்திய நாடுகளில் பிறப்பெடுத்துள்ளனர் என்பதையும் ஸ்ரீல பிரபுபாதர் உறுதிபடுத்தியுள்ளார்.

    ஜெயபதாக மஹராஜிற்கு பதினோரு வயதாகும்போது ஏற்பட்ட தோல் வியாதிக்கு அவரது தாத்தாவின் ஆலோசனையின்படி, கடவுளின் பெயரால் அழைக்கப்பட்டவரால் சிகிச்சையளிக்கப்பட்டு நலமுற்றார். 14 வயதில் கிட்டதட்ட சிரமப்படாமலேயே அவர் பல்கலைக்கழகங்களுக்கு தயார்படுத்தும் பள்ளியான செயின்ட் ஜான்ஸ் அகாடமியில் தனது வகுப்பிலேயே முதல் மாணவனாக, சிறந்த மாணவனாக உயர்வுபெற்றார். இதன் காரணமாக அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் படிப்பு, புத்தகங்கள், உணவு, தங்குவது, மற்றும் மருத்துவ செலவுகள் போன்ற அனைத்திற்குமே முழு உதவித்தொகை பெறும் மாணவராக உயர்ந்தார். எனவே அவர் பிரெளன் பல்கலைக்கழகத்தினை மேற்படிப்பு படிப்பதற்கு தேர்ந்தெடுத்தார். புத்தம் புதிய மாணவனாக அங்கே நுழைந்த அவர், உடன் தங்கியிருந்தவரின் மூலமாக புத்தரின் வாழ்க்கை வரலாறுகளை கேள்விப்பட்டதிலிருந்து அவருக்கு படிப்பின் மீதான ஆர்வம் குறைந்து ஆன்மீக குருவை அடைவதில் ஆர்வம் உண்டாகியது. சில குறிப்பிட்ட காலங்களின் தேடல், மற்றும் தவம் காரணமாக இந்தியாவிற்கு சென்று தனது குருவை தேடுவதற்கான முடிவினை மேற்கொண்டார்.

இந்தியாவிற்கு கிளம்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்த நிலையில், பூங்காவில் BTG யின் புத்தகங்களை விநியோகித்துக் கொண்டும், கீர்த்தனங்கள் புரிந்து கொண்டும் இருந்த அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சார்யரான தெய்வத்திரு அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி ஸ்ரீல பிரபபாதரின் சீடர்களை அவர் சந்தித்தார். BTG யின் ஒரு பிரதியை வாங்கிக்கொள்ளும்படி ஒரு பக்தர் அவரை அணுகியபோது அந்த பக்தரின் முகத்தில் இருந்த திலக்கினைக் கண்டு ஸ்தம்பித்துப்போனார். மேலும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கண்டவராய் அவர் ஓடத்தொடங்கினார். சிறிது தூரம் ஓடியநிலையில், திடீரென்று நின்று எதனைக்கண்டதால் நாம் இவ்வாறு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்று சிந்திக்கத் தொடங்கினார். நீண்டநேரத்திற்குப்பிறகு தான் கண்ட புதியஅனுபவத்தினால் தனது நினைவுகளில் செயலற்ற நிலையில் மறைந்திருந்த ஏதோஒன்று எழுச்சிபெற்றுள்ளதைப் போன்று உணர்ந்தார். உடனே அவர் மீண்டும் பூங்காவிற்கு சென்று பார்த்தபோது அந்த பக்தர்கள் அவ்விடத்தில் இல்லை.

அன்றிலிருந்து அவர் ஹரேகிருஷ்ண பக்தர்களைத் தேட தொடங்கிவிட்டார். இஸ்கான் என்பது அப்போது பிரபலமாக இல்லாதிருந்த காரணத்தினால், அவரால் நீண்ட நாட்களுக்கு கண்டறியமுடியாமல் இருந்தது. இறுதியாக சான்பிரான்ஸிஸ்கோவில் நடைபெறவிருந்த ரதயாத்திரை ஏற்பாட்டின்போதுதான் அவர் இஸ்கான் மையத்தின் இருப்பிடத்தைக் கண்டறிந்தார். அவர் ஆலயத்திற்கு வந்தபோது அங்கே ஜெயானந்த பிரபு ஜகந்நாதருக்கான தோpனை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். ஜெயானநந்த பிரபுவின் கருணையினால் தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் அவர்களும் ரதத்தினை தயாரிக்கும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டார். அதன்பிறகு அவர் ஸ்ரீல பிரபுபாதரினால் ஊக்குவிக்கப்பட்டவராய் அவருடன் அமர்ந்து பிரஸாதம் ஏற்பதற்கும் அழைக்கப்பட்டார். அங்கே அவர் மிகவும் சிறப்பாகவும் கவனிக்கப்பட்டார்.

இஸ்கானை தரிசித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் இஸ்கானின் கொள்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதென முடிவுசெய்தார். ஜெயானந்தபிரபு அவரது தலையை மழித்துவிட்டபோது அனைவருமே இஸ்கானின் சம்பந்தம் கிடைத்த இரண்டு மாதங்களிலேயே தலையை மழித்துக் கொண்டு தன்னை இஸ்கானுடன் இணைத்துக்கொண்டு விட்டாரே என்று ஆச்சர்யமடைந்தனர். 1968-ல் கோர்தன் ஜான் கனடாவிலிலுள்ள மான்ட்ரலில் முதலாவது தீக்ஷையைப் பெற்றபோது அவருக்கு ஜெயபதாக தாஸ பிரம்மச்சாரி என்ற ஆன்மீகப்பெயர் சூட்டப்பட்டது. அதன்பிறகு அவர் மிக விரைவிலேயே நியூயார்க்கில் இரண்டாவது தீக்ஷையும் பெற்றார்.

சில வருடங்களுக்குப்பிறகு, மாயாப்பூரின் மிகவும் இக்கட்டான சூழ்நிலையைக் குறித்த விவாதத்தின்போது, ஸ்ரீல பிரபுபாதர் ‘ஜெயபதாகா” என்ற பெயரினைக் குறித்து பின்வருமாறு விமர்சித்தார்:

ஜெயபதாக மஹராஜ் : தாங்களே எனக்கு ஜெயபதாகா என்ற நாமத்தை அளித்தவராவீர். இந்த பெயரானது உண்மையாகும் அதாவது அங்கே வெற்றி கிடைக்கும் என்றே நான் நம்புகின்றேன்.

ஸ்ரீல பிரபுபாதர் : இது ஏற்கனவே நிச்சயக்கப்பட்டதேயாகும்.

ஜெயபதாக மஹராஜ் ( ஜெயபதாக தாஸாவிற்கு பிறகு) இஸ்கானிற்கும், ஸ்ரீல பிரபுபாதருக்கும் கணக்கிலடங்கா சேவையினைப் புரியத் தொடங்கிவிட்டார். முதன்முதலான முக்கியத்துவம் வாய்ந்த சேவை என்பது மான்ட்ரல் இஸ்கானின் தலைவராகியதுதான். ஸ்ரீல பிரபுபாதர் அவருக்கு எழுதிய கடிதத்தில், ‘தற்போதைக்கு மான்ட்ரலை விட்டு வரவேண்டாம் என நான் நினைக்கின்றேன்… ஏனெனில் உனது சேவையானது அங்கே மிகவும் தேவையாக இருக்கின்றது.” என்று எழுதியிருந்தார்.

மான்ட்ரலில் இருந்தபோது தவத்திருவானவர்; புத்தகங்களை அச்சடிப்பதிலும், அவைகளை உலகம் முழுவதிலுமுள்ள இஸ்கான் ஆலயங்களுக்கு அனுப்பிவைப்பதிலுமான சேவையில் மும்முரமாக ஈடுபட்டார். 1968 அக்டோபர் 6-ல் ஸ்ரீல பிரபுபாதர் எழுதிய கடிதத்தில், ‘நான் அச்சகத்தினை தொடங்குவதற்கு ஆவலாக இருக்கின்றேன். உன்னால் அதனை நிர்வாகம் செய்ய முடியுமென்றால் அது மிகவும் சிறப்பாகும்” என்று எழுதினார். அவரது சேவையானது இந்தியாவில் பக்தி வேதாந்தா புத்தக கமிட்டியில் தொடரப்பட்டதுடன், இன்றுவரையிலும் அவர் டீடீவு யின் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவராக தொடர்ந்து கொண்டுள்ளார்.

பின்னாட்களில் ஸ்ரீல பிரபுபாதரின் வழிகாட்டுதலின்படி, தவத்திரு ஜெயபதாகஸ்வாமி மஹராஜ் டொரன்டோவிற்குச் சென்று அங்கே ஒரு இஸ்கான் மையத்தினை திறந்துவைத்தார். ஜகதீஷ் டொரன்டோவின் தலைவராக பொறுப்பெடுத்துக் கொண்டபின்னர் தனது சேவையினைக் குறித்து ஸ்ரீல பிரபுபாதருக்கு கடிதம் எழுதினார். ஸ்ரீல பிரபுபாதரும் இந்தியாவிற்கு செல்லுமாறும், ‘அங்கே எங்களுக்கு மிகப்பெரிய பணி உள்ளது” என்றுகூறி நீண்டதான விசாவினை பெற்றிடுமாறும் பதிலளித்தார்.

ஜெயபதாக மஹராஜ் தான் இந்தியாவிற்கு செல்லப் போகும் விமானமே மிகக்குறைந்த செலவில் நீண்டதான பயணத்தினை மேற்கொள்வதற்கு உகந்தது என்பதை அவர் ஏற்கனவே நன்கு அறிந்திருந்தார். அவர் ‘வரலாற்றிலேயே மிகவும் மலிவான விமானம்” என்றழைக்கப்பட்டதில் 48 மணி நேரம் தொடர்ந்து பயணித்து மான்ட்ரல் – லண்டன் – புரூஷெல்ஸ் – பாம்பே – வழியாக கல்கத்தாவினை வந்தடைந்தார்.

கல்கத்தாவில் ஜெயபதாக மஹராஜ் பழங்கள், காய்கறிகளை வாங்குவதற்காக வெளியே செல்லும்போதெல்லாம் வங்காள மொழியை கற்கத்தொடங்கினார். மற்ற பக்தர்களுடன் இணைந்து அவர் இல்லங்களில் நிகழ்ச்சிகளை மேற்கொண்டார், பண்டல் நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்தார், மேலும் அந்நகரத்தில் வன்முறையானது ஓங்கியிருந்த வேளையிலும்கூட அவர் தனிப்பட்ட முறையில் நகர ஸங்கீர்த்தனத்தினையும், புத்தக விநியோகிப்பினையும் மேற்கொண்டார்.

மிக விரைவில் பக்தர்கள் புதிய இடத்தினை மாயாப்பூரில் கண்டறிந்தனர். எனவே ஸ்ரீல பிரபுபாதர் 1970 ஆகஸ்ட் 29 அன்று இந்தியாவினை வந்தடைந்தார். அவர் வந்தபிறகுதான் ஸ்ரீல பிரபுபாதர் ஏற்கனவே அமெரிக்காவில் 9 பேர்களுக்கு சந்நியாசம் வழங்கியுள்ளார் என்பது தெரியவந்தது. அதன்பிறகு ஒருநாள் ஸ்ரீல பிரபுபாதர்; ஜெயபதாகதாஸாவினை அழைத்து நீயும் சந்நியாசத்தினை ஏற்கலாமே என்றதும் அவரும் மிகவும் மாpயாதையுடன், ‘நிச்சயமாக பிரபுபாதா தங்கள் விருப்பம் போலவே” என்று கூறினார்.

இவ்விதமாக கல்கத்தாவில் 1970-ல் மிகவும் புனிதமான ராதாஷ்டமி நன்னாளில் ஸ்ரீல பிரபுபதாரே யக்ஞத்தை செய்ய ஜெயபதாக தாஸா ஸந்நியாச தீக்ஷையை ஏற்றுக்கொண்டார். ஸ்ரீல பிரபுபாதரின் 12வது சந்நியாச சீடரான இவர் அன்றுமுதல் த்ரிதண்டி பிக்ஷூ ஜெயபதாக ஸ்வாமி என்றழைக்கப்பட்டார்.

புனிததாமத்தின் நித்ய சேவைக்காக மாயாப்பூரை வந்தடைந்தனர்.

மாயாப்பூரில் இஸ்கானுக்கு நிலம் கிடைத்தவுடன் ஸ்ரீல பிரபுபாதரின் அறிவுரையின்படி தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் மாயாப்பூருக்கு சென்றார். முதன்முதலாக அவர் மாயாப்பூரை வந்தடைந்ததும் புனித தாமத்தில் தான் இருப்பதை உணர்ந்தவராய், முதலில் தனது பணிவான வணக்கங்களை சமர்ப்பித்தார், அதன்பிறகு குளிர்ந்த கங்கையின் மண்ணிற்குள் தனது தலையை நுழைத்து கங்கையின் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு, எவ்வாறு அக்ரூரார் விருந்தாவனத்திற்குள் நுழைந்ததுமே கிருஷ்ணரின் பாதச்சுவடுகளைக் கண்டு, விருந்தாவன மண்ணினை எடுத்துவைத்துக்கொண்டாரோ, அதனைப்போன்றே கங்கையின் மண்ணினை எடுத்துவைத்துக் கொண்டார்.

மாயாப்பூரில் தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் உடன் மேலும் 5 பக்தர்களும் இருந்தனர். பொருளாதாரப் பற்றாக்குறையின் காரணமாக தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் விவசாயத்தில் ஈடுபடத்தொடங்கினார். அவர் பல்வேறு புத்தகங்களைப் படித்து, பலதரப்பட்ட யுக்திகளைக் கற்று கையாண்டதின் மூலமாக மிகச்சிறந்த விளைச்சலைப் பெற்றார். இதனால் ஆச்சர்யமடைந்த உள்ளூர்வாசிகள் இத்தகைய யுக்திகளை அவரிடமிருந்து கற்றறிய விரும்பினர். உள்ளூர்வாசிகளுடனான இத்தகைய உறவுமுறையானது ஆலயம் எழுப்புவதற்கு மிகவும் உதவியாக இருந்தது. தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் அவர்களுக்கு விவசாயத்தின் நவீன முறைகளைக் கற்றுக்கொடுத்தார். பதிலுக்கு அவர்கள் தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜிற்கு வங்காள மொழியினைக் கற்றுக்கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து அவர் வங்காளமொழில் சொற்பொழிவுகள் அளிக்கத் தொடங்கியபோது அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு தவறுகளை சில பார்வையாளர்கள் திருத்திக் கொடுக்க, அவர் மிக விரைவில் மிக அழகாக வங்காள மொழியினைப் பேசத் தொடங்கிவிட்டார். 1968 ல் தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் மேற்கத்திய நாடுகளில் இருந்தபோதே வங்காளமொழியைக் கற்றுக்கொள்ள விரும்பினார், இருப்பினும் அதற்கான வசதிகள் அங்கே கிடைக்கவில்லை. ஆனால் தற்போதோ அவரது விருப்பமானது ஸ்ரீல பிரபுபாதரால் வங்காளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதின் மூலமாக தன்னிச்சையாகவே நிறைவேறிவிட்டது.

மாயாப்பூரில் வசிக்கத் தொடங்கிய ஆரம்ப நாட்கள் அவருக்கு கடுமையான தவநாட்களாகவும், பல்வேறு வகையான ஆபத்துகள் நிறைந்தவகைளாகவும் இருந்தன. பக்தர்கள் குடிசையின் தரைகளிளேயே படுத்துறங்கினர். அவர்கள் தங்களது விளைச்சலுக்குப் பிறகு தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு அந்த காய்கறிகளையே வைத்துக் கொண்டு உண்டு வாழ்ந்தனர். ஒருமுறை குறியலறையில் நல்ல பாம்பினைக் கண்ட ஸ்ரீல பிரபுபாதர், ஜெயபதாக மஹராஜினை அழைக்க அவரும் உடனடியாக விரைந்து செயல்பட்டு ஸ்ரீல பிரபுபாதரைக் காப்பாற்றினார். அதனைத் தொடர்ந்து முதன்மை வாசலுடனான மூன்று அறைகளுடன் கூடிய கிடங்கினைக் கட்டினர்.

ஜெயபதாக மஹராஜ் மிகவிரைவில் மாயாப்பூரில் கட்டிடப்பணிகளின் மேற்பார்வையில் கவனம் செலுத்தத் தொடங்கி, கலைத்திறன்மிக்க லோட்டஸ் பில்டிங்கினை கட்டினார். இதனால் பொறாமை கொண்டோர் பக்தர்களுக்கு சொல்லொணாத் துயரங்களை அளித்தனர். இதனால் ஸ்ரீல பிரபுபாதர் மற்றும் காவல் துறையினாpன் அனுமதியுடன் ஜெயபதாக மஹராஜ் இஸ்கான் பக்தர்கள் மற்றும் சொத்துக்கள் போன்றவற்றினை பாதுகாக்கும் பொருட்டு துப்பாக்கியை வைத்துக்கொள்ளத் தொடங்கினார். அவருடன் அச்சமயத்தில் இருந்த ஒருபக்தர் குறிப்பிடுகையில், அவர் (ஜெயபதாக மஹராஜ்) துப்பாக்கிச் சுடுவதில் மிகவும் திறமைமிக்கவர்” என்று கூறியுள்ளார்.

ஜெயபதாக மஹராஜ் பக்தர்களை பல குழுக்களாக நியமித்து ‘கிருஷ்ணா குழுவினர்” அர்ஜீனா குழுவினர்” என்றவாறு பெயரிட்டு இரவின் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தினார். ஜெயபதாக மஹராஜ் மாயாப்பூரின் ஒவ்வொரு பணிகளிலும் மிகவும் நுணுக்கமாகவும், ஆழ்ந்த கவனத்துடனும், விழிப்புடனும் மேற்கொள்வார். ஒரு பைசாவினைக் கூட வீணாக செலவாகாமல் இருப்பதில் அவர் மிகவும் எச்சாpக்கையுடன் நடந்து கொள்வார். இரவும் பகலும் அயராது சேவையில் ஈடுபட்டிருந்த அவர்; தனது பிரஸாத்தினை ஏற்பதற்கு ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் இரண்டுமணி நேரம் கால தாமதமாகிவிடும். அவருடன் பணிபுரிந்த பக்தர்கள் அவரிடம் கண்டறிந்து என்னவென்றால், எப்போது அவர்கள் சில விஷயங்களின் தீர்வுக்காக அவரிடம் சென்றாலும் அவர் அந்த சிக்கல்களுக்கான தீர்வினை அளிப்பதோடு மட்டுமல்லாமல் அதனின் பல்வேறு கோணங்களுக்கான விளக்கங்களையும் தெளிவுபடுத்துவார். அவருடன் பணிபுரிந்த பக்தர் குறிப்பிடுகையில், ‘இஸ்கான் மாயாப்பூரினைக் குறித்து தங்களது இதயத்தின் ஆழ்மனதில் இருந்து உளப்பூர்வமாக அக்கறைகொண்டவர்கள் மிகச்சிலரேயாவர். அதில் ஜெயபதாக மஹராஜின் அனுபவமும், விசுவாசமும், திறமையும் மாயாப்பூரின் சாpத்திரத்தில் ஈடுஇணையற்றதாகும்” என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் பிரச்சாரம்

ஸ்ரீல பிரபுபாதரின் அனுமதியுடன் ஜெயபதாக மஹராஜ் இந்தியக் குடிமகன் எனும் உரிமையை பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார். இதற்கான பொருள் அவர் இந்த நாட்டைவிட்டுச் செல்லஇயலாது என்பதாகும். இச்சமயத்தினைப் பயன்படுத்திக்கொண்ட அவர் வங்காள கிராமங்கள் அனைத்திற்கும் சுற்றுப்பயணம்செய்து பிரச்சாரம் மற்றும் புத்தக விநியோகத்தில் ஈடுபட்டார். ஒவ்வொரு மாதமும் 10,000 பெரிய புத்தகங்களும், 1,00,000 சிறிய புத்தகங்களும் விநியோகிக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் ஜெயபதாக மஹராஜிடம் கூறினார்.

எனவே அவரும் சந்தைகளில், பண்டல் நிகழ்ச்சிகளில், திருவிழாக்களில், மற்றும் நாமஹட்டாக்களில் என பல்வேறு மாறுபட்ட வழிமுறைகளில் புத்தக விநியோகங்களை மேற்கொண்டார்.

பகவானின் பேரரசு

மாயாப்பூரில் வேதகோளரங்கமெனும் ஆலயம் கட்டப்படுவதற்கான தொலைநோக்குப் பார்வையை ஸ்ரீல பிரபுபாதர் கொண்டிருந்தார். எனவே அவர் விஞ்ஞானிகளிடம் வேதகோளரங்கம் கட்டப்படுவதற்கான 5 வது காண்டத்தின் வடிவமைப்புகளை விவரித்தார், மேலும்; ஜெயபதாக மஹராஜிடமும் அதனைப்பற்றி விளக்கினார்.

ஒருமுறை ஜெயபதாக மஹராஜ் ஸ்ரீல பிரபுபாதரைக் காண்பதற்காக அறைக்குள் வந்தபோது, ‘நான் உன்னிடம் பகவானின் பேரரசினைக் கொடுத்துவிட்டேன். இதனை நீ விரிவுபடுத்துவாயாக” என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறினார். ஜெயபதாக மஹராஜ் இதனை மிக முக்கியமான விஷயமாக ஏற்றுக் கொண்ட அதே சமயத்தில் நகைச்சுவையான அறிக்கையாகவும் எண்ணினார்.

ஸ்ரீ மாயாப்பூர் சந்த்ரோதய மந்திர் வளா;ச்சிபெறத் தொடங்கிய ஆரம்ப கால கட்டத்திலேயே, ஆலயத்தின் தலைமை விக்கிரங்களான ஸ்ரீ ஸ்ரீ ராதா மாதவா விக்கிரகங்கள் மாயாப்பூருக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களைக் கண்ட ஜெயபதாக மஹராஜ் ஒருவருடத்திற்கு முன்னர் மேற்கத்திய நாடுகளில் பிரச்சாரப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயத்தில் ஒருமுறை தனது கனவில் வந்தவர்களே இவர்கள் என்பதினை கண்டுகொண்டார்.

1977 ல் மாயாப்பூர் இஸ்கானானது உள்ளூர்வாசிகளால் தாக்கப்பட்டது. அவர்கள் அங்கிருந்த அனைத்தையும் கைப்பற்ற முயற்சித்ததுடன் பக்தர்களையும் கைது செய்தனர். இச்சமயத்தில் தவத்திரு ஜெயபதாக மஹராஜ் உள்ளூர் அமைப்பினர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி பிரம்மாண்டமான மாபெரும் ஊர்வலத்தினை அமைத்து மாயாப்பூரிலிருந்து சந்த்காசி சமாதி மற்றும் அதன்பிறகு ஜகந்நநாதர் ஆலயம் வரை தொடர்ஊர்வலமாக ஏற்பாடுசெய்தார். அந்த ஊர்வலத்தில் 25,000 பொதுமக்கள் 168 கீர்த்தனைக் குழுவினர்களில் உள்ளடங்கியவர்களாக கலந்து கொண்டனர்.

நாமஹட்டா

1970-ல் ஜெயபதாக மஹராஜ் இந்தியாவிற்கு வருவதற்குமுன்னர் லாஸ்ஏஞ்சலில் இருந்தபோது, பிரபுபாதர் அவரை தேவாலயத்திற்கு முன்னர் நிறுத்தி, எதிர்காலத்தில் மிகக்குறைந்த மக்களே ஆலயத்தில் இருப்பர், இருப்பினும் எண்ணற்றோர் தத்தமது இல்லங்களிலேயே பயிற்சியில் ஈடுபடுவர் என்றும் கூறினார். அச்சமயத்தில் அதிக அளவு பக்தர்கள் ஆலயத்தில் வசிப்பவர்களாகவே இருந்த காரணத்தினாலும், கிரகஸ்த பக்தர்களே இல்லாத காரணத்தினாலும் ஜெயபதாக மஹராஜால் இதன் அர்த்தத்தினை எளிதில் புரிந்து கொள்ள இயலவில்லை.

இருப்பினும் உண்மையை வலியுறுத்தும் ஊர்வலத்தில் 168 கீர்த்தனைக் குழுவினர்களை கண்டறிந்தது, மற்றும் புத்தக விநியோகம், பண்டல் நிகழ்ச்சிகள், இல்லற நிகழ்ச்சிகள், ஆயுள் உறுப்பினர்களை சேகரித்தல் போன்றவைகள் கிருஷ்ண உணர்வில் ஆர்வமுள்ளவர்களாக எண்ணற்ற மக்கள் உள்ளனர் என்பதினையும், அவர்களுக்கு அதிக அளவு அக்கறைத் தேவைப்படுகின்றது என்பதினையும் அவருக்குப் புரியவைத்தது.

இவ்வனைத்து பக்தர்களையும் ஊக்குவிப்பதற்காகவும், அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகவும் முதன்முதலில் தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் இஸ்கான் ஸங்கீர்த்தன இயக்கத்தினை அதாவது ISH என்பதினை உருவாக்க எண்ணினார். இத்தகைய திட்டத்திற்கு ஸ்ரீல பிரபுபாதர் தனது ஆசிர்வாதங்களை தந்ததோடல்லாமல், மேலும் கிராம மக்களை ஆலயத்திற்கு வரவழைக்க வேண்டும் எனவும், அவர்களை ஆலயத்தில் சில நாட்கள் தங்கவைத்து, அவர்களுக்கு கிருஷ்ண உணர்;வினைக் குறித்த அனுபவங்களை கற்றுத்தர வேண்டும் எனவும், அதன்பிறகு தங்களது கிராமங்களுக்குத் திரும்பிச்செல்லும் அவர்கள் தத்தமது கிராமங்களில் அதே வழிமுறையினை நிறுவவும் வழிசெய்யவிக்க வேண்டும் என்பதினையும் எடுத்துக் கூறினார்.

ஸ்ரீல பிரபுபாதரின் மறைவுக்குப் பின்னர் தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் பக்தி சாரு மஹராஜிடமிருந்து கெளடீய பத்திரிக்கையைப் பெற்றார். அதில் நாமஹட்டா பிரச்சாரத்தினைக் குறித்த விபரங்கள் விளக்கப்பட்டிருந்தன. இதுவே இத்தகைய முறையிலான பிரச்சாரத்தினை நிறுவுவதற்கும், விரிவடையச் செய்வதற்கும், வளா;ச்சி பெறச்செய்வதற்கும் ஜெயபதாக மஹராஜிற்கு தூண்டுகோலாக அமைந்தது.

சமீப காலமாக ஜெயபதாக மஹராஜ் நாமஹட்டா பிரச்சாரத்திற்கு உதவியாக உள்ள பக்திவிருக்ஷா பிரச்சார அமைப்பில் எண்ணற்ற பிரச்சாரகர்களை ஈடுபாடுக் கொள்ளச்செய்து அவர்களுக்கு தனிப்பட்ட அக்கறையும், பயிற்சியும் அளிப்பதுடன் அவர்கள் ஒவ்வொருவரையும் பிரச்சாரத்தில் பயிற்றுவிப்பதின் மூலமாக ஒவ்வொருவரும் தூய பக்தர்களாக பயிற்சிபெறுவதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு கிடைக்கச் செய்து பக்தி விருக்ஷாவினை வரிவடையச் செய்துகொண்டுள்ளார்.

பிரசாத விநியோகம்

ஸ்ரீல பிரபுபாதர் மாயாப்பூரில் உள்ள பக்தர்களுக்கு கடிதம் எழுதியதாவது, ‘நீங்கள் தினமும் குறைந்தபட்சம் நூறு நபர்களுக்காவது பிரஸாதம் விநியோகிக்க வேண்டும், மேலும் தினமும் மக்கள் இங்கே வருகைதந்து பணம் செலுத்தாமலேயே பிரஸாதம் ஏற்கலாம் என்பதினை நதியா மாவட்டம் முழுவதும் பரவலாக விளம்பரப்படுத்துங்கள்” என்று கூறியிருந்தார். கிட்டத்தட்ட 1973-ல் ஸ்ரீல பிரபுபாதர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் பிரஸாத விநியோக அறிக்கைகளைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியுற்றேன் என்றும் எழுதியிருந்தார். 1974-ல் மாயாப்பூரில் பிரஸாத விநியோகக்கட்டிடத்தினை கட்டவேண்டும் என்றும் இதனால் ஒரே நேரத்தில் 1000 நபர்கள் பிரஸாத ஏற்கஇயலும் என்றும் ஸ்ரீல பிரபுபாதர் விரும்பினார்.

1978-ல் மேற்கு வங்காளத்தில் வெள்ள அழிவின்போது, ஜெயபதாக மஹராஜ் பலமுறை தனது வாழ்வில் அபாயங்களைத் துணிந்து ஏற்றுக்கொண்டு, வெள்ள நீரிலும் அரைகுறையாக இருந்த படகுகளிலும் கூட துணிச்சலாக பிரஸாதங்களை ஏற்றிக்கொண்டுச்சென்று, அங்குமிங்குமாக மரக்கிளைகளிலும், கூரைகளிலும் ஆதரவற்ற நிலையில் நின்றுகொண்டிருந்த கிராமமக்களுக்கு ஆபத்துக்கால உணவு விநியோகத்தினைச் செய்தார். இவ்வாறாக இந்தியாவில் கணக்கிலடங்காத சுயநலமற்ற சேவைகளைப் புரிந்ததின் காரணமாக ஜெயபதாக மஹராஜிற்கு இந்தியக் குடிமகன் உரிமையைத் தரவேண்டி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஒன்றுகூடிமத்திய அரசுக்கு விண்ணணப்பம் செய்தனர். இதனால் 1978ல் ஒருங்கிணைந்த வீட்டு இலாகா அரசினால் அவருக்ரு இந்திய குடிமகன் ஒப்புதல் கிடைத்துவிட்டது.

ஜெயபதாக மஹராஜரே ‘வாழ்வின் உணவு” மற்றும் இஸ்கானின் உணவு உதவி நிகழ்ச்சிகளின் உலகத்தலைவராவார். அத்வைத ஆச்சார்யாரே அவதரித்து வந்துள்ளாதாக கருதியே தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜை வருடாவருடம் நடைபெறும் சாந்திப்பூர் பிரம்மாண்டமான பிரஸாத விநியோகத்திருவிழாவின் நிர்வாகியாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

நிதாய் பாத கமல படகு

ஒருமுறை ஒரு பக்தர் பத்ம கரையிலிருந்து படகின் மூலமாக கங்கைக்கரைக்கு சுற்றுலாப்பயணம் செய்தார். இந்நிகழ்ச்சியானது ஜெயபதாக மஹராஜிற்கு படகு குழுவினர் என்றதான புது யோசனையைத் தந்தது. எனவே அவர் பக்தர்களின் சார்பாக அனுமதிபெற்று நியூயார்க்கிலிருந்து படகினை வாங்குவதற்காக போதிய பணத்தை அனுப்பினார். ஜெயபதாக மஹராஜே நோpல் சென்று டைமண்ட் ஹார்பர், ஹப்ராவிலிருந்து படகினை வாங்கிக்கொண்டு மாயாப்பூருக்கு கொண்டுவந்தார். அப்போது அங்கே நடந்த சுவாரசியமான உரையாடலானது ஸ்ரீல பிரபுபாதரின் பிரச்சார நோக்கத்தில் உள்ள ஆர்வத்தினை வெளிப்படுத்துகின்றது:

ஜெயபதாகா : இன்று தாங்கள் கோஸாலாவினை காண விரும்புகின்றீர்களா? அல்லது படகினைக் காண விரும்புகின்றீர்களா ஸ்ரீல பிரபுபாதா?

பிரபுபாதர் : படகு எந்தப்பக்கம் உள்ளது? நேராகவா?

பவானந்தா : படகு ஹூலார் காட்டில் உள்ளது.

பிரபுபாதர் : அப்படியென்றால்,படகினை பார்ப்பதில் அர்த்தம் உள்ளது. (சிரிப்பு) (இடைவெளி)

காலை நடைபயணம், ஜனவரி 17, 1976, மாயாப்பூர்.

ஸ்ரீல பிரபுபாதர் படகிற்கு ‘நிதாய் பாத கமல்” என்று பெயரிட்டார். மிக விரைவிலேயே ஒரு ஜதை கெளா; நிதாய் விக்கிரங்கள் மாயாப்பூருக்கு வருகைதந்தனர். உடனே ஸ்ரீல பிரபுபாதரும் தானேமுன்நின்று அவர்களை படகில் ஸ்தாபனம் செய்வித்தார்.

மாயாப்பூர் மண்டல பரிக்ரமா மற்றும் புனித ஸ்தல யாத்திரைகள்

ஸ்ரீல பிரபுபாதர் மாயாப்பூரை உலகம் முழுவதிலுமுள்ள பக்தர்கள் அனைவருமாக ஒருங்கிணைந்து இங்குவந்து, தத்தமது இடங்களில் சிறப்பான பிரச்சாரத்தினைப் புரிவதற்குரிய ஆன்மீக பலத்தினை பெற்றுச் செல்வதற்கான மைய இடமாக உருவாக்கினார். இதன்படி 1974 மார்ச்சில் முதன்முறையாக கெளரபூர்ணிமா திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென் அமெரிக்கா, இந்தியா, என உலகின் பலபகுதிகளிலிருந்தும் மொத்தம் நானூறு பக்தர்கள் திரளாக வந்திருந்து கலந்துகொண்டனர்.

இவ்வாறாக முதன்முறையாக 1974ல் தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் உள்ளுர்; புனித இடங்களுக்கு பரிக்ரமா (புனித யாத்திரை) அழைத்துச் செல்வதற்காக பக்தர்குழுவினர்களுக்கு தலைமைவகித்தார். இத்தகைய மாயாப்பூர் தரிசனமானது பக்தர்களின் இந்திய புனிதயாத்திரையின் முதல்பாதியாக இருந்தது. அதற்கடுத்த பத்து நாட்கள் அவர்கள் விருந்தாவனம் செல்வதற்காக திட்டமிடப்பட்டது.

அன்றிலிருந்து நவத்வீப மண்டல பரிக்ரமாவானது தொடர்ந்து வருடாவருடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாpத்தவண்ணம் மிகச்சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த பரிக்ரமாவின் சமயத்தில் தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் கலந்து கொள்ளும் பக்தர்களின் ஆன்மீக முன்னேற்றத்தில் அக்கறைக்கொள்வதோடு மட்டுமல்லாமல் சிறந்த உபசாpப்பாளரைப்போல பக்தர்களுக்கேற்றமுறையில் தக்கவசதிகளைச் செய்து கொடுப்பதிலும் அதிக அக்கறையுடன் செயல்படுகின்றார்.

சமீககாலத்தில் தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் அறிமுகப்படுத்தியுள்ள ‘கங்கா பயணம்” என்பது பிரபு சைதன்யருடன் சம்பந்தப்பட்டுள்ள அத்தகைய புனிதஇடங்களை நதிகளின் வழியாகவே பயணித்து தரிசிப்பதாகும். அதனைப்போலவே இந்தியாவிலும், அக்கம்பக்கத்து நாடுகளிலும் ஆன்மீக சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்தார். இதன்மூலமாக தாய்நாட்டினருக்கு கிருஷ்ண உணர்வின்மூலமாக வெளிநாட்டினர் அடையும் ஆனந்தத்தை கண்டுகளிக்கும் வாய்ப்பினை அளித்தார் மற்றும் புனித இடங்களின் மீதான ஆழ்ந்த பக்தியையும் வெளிக்கொணர்ந்தார். இவையனைத்து ஏற்பாடுகளும் மிகவும் அருமையானதாகவும், பயனள்ளதாகவும் அமைந்துள்ளன.

பக்தி வேதாந்த சுவாமி அறக்கட்டளையின் ஆயுட்கால அவைத்தலைவர்

1977 நவம்பர் 5ல் ஜெயபதாக மஹராஜ் ஸ்ரீல பிபுபாதரை சந்திப்பதற்காக விருந்தாவனத்திற்குச் சென்றார். அப்போது பிரபுபாதர் அவரிடம், ‘நான் பக்தி வேதாந்த சுவாமி தர்ம ஸ்தாபனத்தினை நிறுவியுள்ளேன்” என்று கூறியவர் மேலும் அவரிடம், ‘நீ தான் அதற்கு ஆயுட்;கால அவைத்தiலைவர்” என்றும் கூறினார். இச்சமயத்தில் ஜெயபதாக மஹராஜ் ஸ்ரீல பிரபுபாதரிடம் இருந்து, ஸரஸ்வதி குடும்பத்தை இணைத்தல், பிரபு சைதன்யரின் புனித தாமங்களை பராமரித்தல், மற்றும் புனித தாமங்களுக்கான சேவைகள் போன்றதான உத்தரவுகளையும் பெற்றார்.

முடிவற்ற பயணத்தின் தொடக்கமும் GBC யின் பொறுப்புக்களும்

இந்தியாவிற்கு வந்து ஒன்பது வருடங்களாகியப்பிறகே , இறுதியில் 1979ல், ஜெயபதாக மஹராஜ் இந்தியக் குடியுரிமையைப் பெற்றார். ஸ்யாமனந்த பிரபு தவத்திருவிற்கு ‘உலகை வலம்வருவதற்கான பயணச்சீட்டினை” அளித்து அவரது பயணத்தினை ஊக்குவித்தார். அதன்பிறகு கிட்டத்தட்ட 1980ல் ஹ்ருதயானந்த மஹராஜ் தென் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய அழைப்பு விடுத்தார். அப்போதே அவரது விஜயமானது தென் அமெரிக்கா, சிலே, பெரு, பொலிவியா என்று தொடக்கமாகியது. பின்னாளில் ஈக்வடார் மற்றும் தென் அமெரிக்காவின் மற்ற இடங்களுக்கும் விஜயம் செய்தார்.

1982ல் ஹ்ருதயானந்த மஹராஜ், பலவந்த பிரபு மற்றும் ரூபானுக பிரபுவின் வேண்டுகோளின்படி ஜெயபதாக மஹராஜ் தென் – கிழக்கு ருளுயு வில் அடித்தளமிட்டார். இந்த பகுதிகளை GBC யாக ஆக்குவதற்காக வழிவகுத்தது போலவே மிக விரைவில் அவரது விஜயமானது தொடங்கியது. இந்த ஆண்டிலேயே அவர் நிறுவியும்விட்டார்.

1984-ல் ஹம்ஸதுத்தா இஸ்கானை விட்டு சென்ற சமயத்தில் மலேசியாவிலிருந்து இஸ்கானை நீக்கும் அபாயம் உருவாகியது. உடனே ஜெயபதாக மஹராஜே மலேசியாவிற்கு சென்று 21 நாட்கள் அங்கேயே தங்கி முழு மூச்சுடன் செயல்பட்டு அதனைக் காப்பாற்றி பெரும் சாதனை புரிந்தார். அவருடன் செளரிபிரபுவும் இணைந்து இத்தகைய சூழ்நிலையைக் காப்பாற்றினர். அதிலிருந்து மலேசியா பிரச்சாரத்தினை ஜெயபதாக மஜராஜே பார்த்துக் கொண்டார். பின்னாளில் சிங்கப்பூரும் அதனுடன் இணைக்கப்பட்டது.

தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜே அஸ்ஸாமிற்கும் GBC யாவார். அஸ்ஸாமின் பாரம்பரியமிக்க கர்த்தாள்களின் வகையான மிகப்பெரிய அளவிலான கர்த்தாள்கள் (பிரம்மாண்டமான பேரொலிமிக்கது) அவரது கீர்த்தனைகளின் பரவசத்தினை அதிகப்படுத்தியது. இது அஸ்ஸாமில் தவத்திருவிற்காக வழங்கப்பட்டதாகும். ஜெயபதாக மஹராஜ் இசைக்கும் முறைக்கும் மேலாக அஸ்ஸாமில் இவைகள் பல்வேறு விதங்களில் இசைக்கப்பட்டதால், கர்த்தாள்களை இசைக்கும் இத்தகைய முறைகளையும் கற்று அவர் தனக்குரியதாக்கிக் கொண்டார்.

ஜெயபதாக மஹராஜ் பிஹார், ஒரிஸா மற்றும் வங்காளம் போன்ற கிழக்கு இந்தியாவிலும் GBC யைத் தொடங்கினார். 1980 லிருந்து 1999 வரை அவரே தென் – கிழக்கு அமெரிக்கா, மற்றும் தென் அமெரிக்கா போன்றவற்றின் GBC யாக இருந்தார். மேலும் அவரே ஈக்வடார், பெரு, பொலிவியா, மற்றும் சிலேவிற்கும் GBC யாக இருந்தார். பரந்ததான கிழக்கிலும் ஜெயபதாக மஹராஜ் இணைGBCயாக சேவை செய்தார்.

மேலும் அவரே ஸங்கீர்த்தன இயக்க பிரச்சாரத்தின் அமைச்சராகவும், ஸங்கீர்த்தன இயக்க விரிவாக்கத்தின் அமைச்சராகவும், உலக ஹிந்து கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும், ஸரஸ்வத் குடும்பத்தின் ஆளுநராகவும் இருந்தார்.

இந்தியாவில் இருந்தபோது, தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் அனைத்து வங்காளத்துடனும் இணைந்து பங்களாதேஷின் கிராமங்களுக்கும் விஜயம் செய்து ஸங்கீர்த்தனத்தினைப் புரிந்து புத்தகங்களை விநியோகம் செய்தார். பின்னாளில் அவர் இந்தியக் குடியுரிமையைப் பெற்றபிறகு தத்தமது நாடுகளுக்கு விஜயம் செய்ய பற்பல தலைவர்களால் அழைப்பு விடுக்கப்பட்டதின் காரணமாக அவரது முடிவற்ற பயணத்தின் தோற்றமானது ஆரம்பமாகியது. மிகக்குறைந்த செலவில் மிகஅதிக அளவு மைல்களைப் பெறுவதற்கான அவரது மிகுந்த அக்கறையுடனான கணக்கு முறைகளையும், திட்டங்களையும் மற்றும் அவரது மிகப்பரந்ததான பயணங்களையும் கண்டு பயண முகவர்களே ஆச்சர்யமடைந்தனர்.

இயன்ற அளவில் தவத்திரு ஜெயபதாக மஹராஜ் உலகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்வதினையே மிகவும் நேசித்தார். மேலும் பிரச்சாரத்திற்காக எத்தகைய கொடுமைகளையும் அவர் ஏற்றுக் கொண்டார். குறிப்பிட்ட மேலை நாடுகளில் பிரச்சாரத்திற்காக அழைக்கப்பட்டபோது தனது உடலின் வைஷ்ணவ அறிகுறிகளை மறைத்துக் கொள்வதற்காக அவர் மிகப்பெரிய தியாகத்தினை மேற்கொள்ள வேண்டியவரானார்.

திருவிழாக்களும் நிகழ்ச்சிகளும்

ஜெயபதாக மஹராஜ் ரத யாத்திரைகளில் கலந்து கொள்வதை மட்டும் தனிப்பட்ட முறையில் மிகவும் நேசித்தார். இதற்கான காரணம் அவர் ஜகந்நாதரை மிகவும் விரும்பியதேயாகும். சான் பிரான்சிஸ்கோவின் ரதயாத்திரை சமயத்தில்தான் அவர் முதன்முதலில் இஸ்கானுக்கு வந்தார். மேலும் அவரது முதல் சேவையே ஜகந்நாதரின் ரதத்தினை வடிவமைத்தலின் சேவையேயாகும். இவ்விதமாக பகவான் ஜகந்நாதரின் கருணையினால்தான் நாம் பக்தரானோம் என்பதே அவரது ஆழ்ந்த நம்பிக்கையாகும்.

இந்தியாவிற்கு வந்த முதல்வருடத்திலேயே, ரதயாத்திரை காலத்தில்தான் புரிக்கும் அவர் முதன்முதலாக விஜயம் செய்தார். அவரது பெருமுயற்சியால் ஜகந்நாருக்காக புரியில் ஆலயம் எழுப்பவேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறினார்.

ரதயாத்திரை நிகழ்ச்சி எங்கு நடைபெற்றாலும் அவரது பரவசமிக்க கீர்த்தனைகளினாலும், களைப்புறாத அவரது நடனத்தினாலும் பக்தர்களை ஊக்கும்விக்கும் பொருட்டு பக்தர்களே மிகுந்த ஆவலுடன் தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் அவர்களை அவசியம் பங்கு கொள்ளவேண்டி அழைப்பு விடுப்பர். ஜெயபதாக மஹராஜரும் இயன்ற அளவு அனைத்து ரத யாத்திரைகளிலும் பங்குகொண்டு தனது பயணக் களைப்பு மற்றும் இதர சேவைகளின் களைப்பினை மறந்து பகவான் ஜகந்நாதருக்காக உற்சாகமாக பாடியாடுவார்.

ஸரஸ்வத் கெளடீய குடும்பத்தினை ஒருங்கிணைத்தல்

தொடக்கத்தில் ஜெயபதாக மஹராஜ் கல்கத்தாவிலும் மாயாப்புரிலும் கெளடீய மடத்தில்தான் சில மாதங்களுக்கு தங்கியிருந்தார். இதன்மூலமாக அவர்களது ஆயுட்கால நன்மதிப்பினையும் பெற்றவரானார். குறுகிய காலத்திற்கு கெளடீய மடத்தில் அவரை தங்கவைத்ததும் கிருஷ்ணரின் ஏற்பாடாகத்தான் இருக்கும் ஏனெனில் இதன் காரணமாகத்தான் கெளடீய மடங்கள் சிலவற்றுடன் அவரால் எளிதில் தொடர்பு வைத்துக் கொள்ள முடிந்தது. மாயாப்புரில் ஸ்ரீல பிரபுபாதர் இருந்தபோது அவரை வங்காளத்தினராகவே எண்ணியவராய், ஸ்ரீதர மஹராஜிற்கும், கிவிந்த மஹராஜிற்கும் செய்தியை தெரிவிக்க அவரையே பிரபுபாதர் அனுப்பிவைத்தார். இவ்விதமாக கெளடீய மடங்களை இணைக்க வேண்டி ஜெயபதாக மஹராஜிடம் ஸ்ரீல பிரபுபாதர் கூறியபோது ஆன்மீகக் குடும்பங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். தொடர்ந்த ஐந்து வருடங்களின் இடைவிடாத முயற்சியின் காரணமாக இறுதியில் பிரபுபாதரின் ஆசியாலும், பக்தி ப்ரமோதே புரி மஹராஜ் போன்ற மூத்த வைஷ்ணவர்களின் நல்லாசியாலும்; இதரபிற ஆச்சார்யர்களின் ஆசிகளாலும் ஸரஸ்வத் வைஷ்ணவ ஸங்கமானது ஸ்தாபிக்கப்பட்டது. தவத்திருவே இத்தகைய ஸங்கத்தின் அழைப்பாளராவார்.

சீடர்களை ஏற்றல்

தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் இரண்டு தருணங்களில் ஸ்ரீல பிரபுபாதர் கூறியதை நினைவுகூர்ந்தார்: ‘சீடர்களை ஏற்பதற்கு நீ அங்கீகாரம் பெற்றவனாகிவிட்டாய். இருப்பினும் சம்பிரதாயப்படி குருவின் முன்னிலையில் நீ சீடர்களை ஏற்கக்கூடாது. மற்றபடி நீ அங்கீகாரம் பெற்றவனாகிவிட்டாய்.” மேலும் ‘நீயும் ஸந்நியாசியாவாய். எனவே ஸந்நியாசியானவர் சீடர்களை ஏற்பதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டவராவார். இல்லையென்றால் ஸந்நியாசத்திற்குப் பொருளென்ன? இருப்பினும் உனது குருவின் முன்னிலையில் நீ ஏற்கவேண்டாம்” என்றார்.

1977ல் ஸ்ரீல பிரபுபாதரின் உடல்நிலையானது மிகவும் மோசமாகியபோது, அவர் ஒருமுறை ஜெயபதாக மஹராஜிடம், ‘உனது ஜோசியக்காரர் என்ன கூறினார்?” என்று வினவினார். அதற்கு ஜெயபதாக மஹராஜூம், பிரபுபாதரின் ஜாதகத்தினை படித்த மாயாப்புரின் ஜோசியக்காரர் இரண்டு வாரங்களுக்கு முன்னரே பவானந்தாவுடன் சென்ற மற்ற நமது இயக்கத் தலைவர்கள் முன்னிலையிலும் கூறியதை விளக்கினார். அந்;த மனிதர்; கூறியது என்னவென்றால், பிரபுபாதர் பகவானால் சக்தியளிக்கப்பட்ட சிறப்புமிக்க அவதாரத்தின் வகையாவார். எனவே எப்பொழுது வருவது எப்பொழுது போவது என்பதில் அவருக்கு சுதந்திரம் உண்டு என்றார். இருப்பினும் இயன்றவரை அவரது எதிர்காலத்தை கணித்த அவர், பிரபுபாதாவின் உடல்நலக் குறைவானது புதன் மறுவீட்டில் பிரவேசிக்கும் காலமான நவம்பர் 28 வரை நீடிக்கும். அதனை அவர் தாண்டிவிட்டால் அவர் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுவார். அதன்பிறகு அவர் எத்தகைய உடல்நலக்குறைவுமின்றி ஏழு வருடங்களுக்கு தொடர்ந்து நீடித்திருப்பார் என்று கூறினார்.” (TKG யின் டைரியிலிருந்து)

ஸ்ரீல பிரபுபாதர் நலமடைந்துவிடுவார் என்று அனைத்து பக்தர்களும் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தாலும்கூட தெய்வத்திருவானவர் நவம்பர் 14, 1977ல் இவ்வுலகை நீத்துச் சென்றார். மிக விரைவில், ஜெயபதாகமஹராஜ் ஸ்ரீல பிரபுபாதரினால் அவர் உடல்நலக்குறைவாக இருந்தபோதே அவரது சார்பாக தீக்ஷை அளிக்க அனுமதிக்கப்பட்ட பதினோரு நபர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.

ஸ்ரீல பிரபுபாதரின் அந்தரங்கமான அறிவுரைகளின் அடிப்படையில் தங்களது ஆன்மீக குரு தற்போது இல்லாவிடினும்கூட சீடர்களை ஏற்பதற்கு ஸந்நியாசிகள் அங்கீகாpக்கப்படுவது எங்கனம் எனவும், ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களின் வழிநடத்துதல்களை பின்பற்றி அளிக்கப்படும் தீக்ஷையின் மூலமாக ஒருவரை சீடப்பரம்பரையில் இணைப்பது எங்கனம் எனவும் அவர்கள் வழிநடத்தப்படுகின்றனர்.

பிரம்மாவே இந்த பிரபஞ்சத்தின் ஆதியான ஆன்மீக குருவாவார். பகவானால் அவர் தீக்ஷை அளிக்கப்பட்டதிலிருந்தே ஸ்ரீமத் பாகவதத்தின் செய்திகள் சீடப்பரம்பரையின் மூலமாக இறங்கிவந்து கொண்டுள்ளன. எனவே ஸ்ரீமத் பாகவதத்தின் உண்மைச் செய்திகளை அறிந்து கொள்வதற்கு ஒருவர் உண்மைத் தொடாpனை அதாவது சீடப்பரம்பரைத் தொடாpல் வந்து கொண்டுள்ள ஆன்மீக குருவினையே அணுக வேண்டும்.

தனது கடிதங்களில் ஸ்ரீல பிரபுபாதர் உறுதிபடுத்தயுள்ளாவது :

பொதுவாக ஆன்மீக குருவானவர் பகவானின் இத்தகைய நித்ய சகாக்களின் குழுவிலிருந்து வருபவராவார். எனவே இத்தகைய நித்ய முக்தர்களின் கொள்கைகளை பின்பற்றுபவர்களும் அவரைப்போலவே இத்தகைய குழுவில் இணைக்கப்படுவார்கள்.

( ஜனார்த்தனாவிற்கு எழுதிய கடிதம் நியூயார்க் 26 ஏப்ரல் 1968 )

தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் கெளடீய வைஷ்ணவ சம்பிரதாயத்தின் ஸ்ரீல பிரபுபாதா கிளையில் ஆன்மீக குருவாக சீடர்களை ஏற்கத் துவங்கிவிட்டார். இஸ்கான் மற்றும் ஸ்ரீல பிரபுபாதரின் மீதான அவரது முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்ச்சியால் கவரப்பட்டவர்கள் அவரிடமிருந்து தீக்ஷை பெறுகின்றனர். அதனைத் தொடர்ந்து தவத்திருவினானேலேயே கவரப்பட்டவர்களும் அவரிடமிருந்து தீக்ஷை பெறுவதையே விரும்புகின்றனர்

தவத்திருவானவர் ஸ்ரீல பிரபுபாதரின் மூத்த ஸந்நியாசி சீடராவார் மேலும் 14 பக்தர்களுக்கும் மேலாக ஸந்நியாச தீக்ஷை அளித்துள்ளவருமாவார் :

பக்தி வித்யா பூர்ண மஹராஜ், பானு மஹராஜ், பிரபவிஷ்ணு மஹராஜ், பக்தி விகாஸ் மஹராஜ், மஹா விஷ்ணு மஹராஜ், கோபால் கிருஷ்ண மஹராஜ், முகுந்த மஹராஜ், பக்தி வ்ரஜேந்திரநந்த மஹராஜ், பக்தி புருஷோத்தம மஹராஜ், பக்தி வைடூர்ய மாதவ மஹராஜ், பக்தி ராகவ மஹராஜ், கெளராங்க பிரேம ஸ்வாமி, பக்தி வினோத ஸ்வாமி, முரளி கிருஷ்ண ஸ்வாமி, பக்தி தீர தமோதஷ ஸ்வாமி, பக்தி வாஸூதேவ ஸ்வாமி.

தவத்திருவினால் எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் :

இடையறாத அவரது பயணத்தின் காரணமாகவும், உலகம் முழுவதுமான அவரது பற்பல சேவைகளின் காரணமாகவும் ஜெயபதாக மஹராஜ் எழுவதற்கான நேரத்தினை அரிதாகவே பெற்றார். இருப்பினும் அவர் பக்தி சித்தாந்த ஸரஸ்வதி தாகூரின் வங்காள பாடலான ‘வைஷ்ணவ கே?” விற்கு மொழிபெயர்ப்பும் விளக்கவுரையும் அளித்துள்ளார். சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டிராத ரித்விக்கின் மனோதத்துவ எண்ணங்;;களை வேரறுப்பதற்காக தவத்திருவானவர் ரித்விக் மாயாவாத ஸதா தூஷணி என்ற புத்தகத்தினை அளித்துள்ளார். அதில் சம்பிரதாயத்தின் தற்போதைய தொடாpலிருந்து தீக்ஷைபெறுவதற்கு துணை புரியும் 100 முக்கியமான குறிப்புக்களை அளித்துள்ளார்.

தவத்திருவானவர் யுக்த வைராக்ய கொள்கையினை ஏற்றுக்கொண்டுள்ளவராவார். மேலும் தற்போதைய நவீன வசதிகள் அனைத்தையும் கிருஷ்ண உணர்வு பிரச்சாரத்திற்காக உபயோகித்துக் கொள்பவருமாவார். இ-மெயில் வசதிகள் வந்தபோது தவத்திரு நேரடியாக தனது சீடர்கள் மற்றும் பிற ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும் இ-மெயில் வசதியின் மூலமாக உலகம் முழுவதும் பயணித்து தனது நேரடிக்கண்காணிப்;பிலேயே சீடர்களை பராமாpத்தார். மேலும் இ-மெயில் கூட்டமைப்பினை அமைத்ததின் மூலமாக பக்தர்களால் கிருஷ்ண உணர்வு கேள்விகளை எழுப்பி எளிதாக அவரிடமிருந்து பதில்களைப்பெற்று முன்னேற்றமடைய அனுகூலமாகியது. இத்தகைய கேள்வி- பதில்களினால் தொகுக்கப்பட்ட புத்தகமானது ‘கணிப்பொறியிலிருந்து வெளிவரும் ஆன்மீக உண்மைகள்” என்றழைக்கப்படுகின்றது.

சைதன்ய பாகவதத்திற்கான தவத்திருவின் மொழிபெயர்ப்பு, ‘பிரபுபாதரைக் குறித்த நினைவலைகள்” மற்றும் வெளிவரவுள்ள 100 சொற்பொழிவுகளின் பிரதிகள்.

இஸ்கானில் தவத்திரு ஜெயபதாக மஹராஜின் குறிப்பிடத்தக்க மற்ற சில பொறுப்புக்கள் :

1 . மேற்கு வங்காளம், ஒரிஸா, பிஹார், அஸ்ஸாம், த்ரிபுரா, ஆந்திர பிரதேஷம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, பங்களாதேஷ், நேபாளம், ஸ்ரீ லங்கா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, அட்லாண்டா, ஹில்;;;;;;ஸ்;போரவ், லின்ச்பர்க், நியூ ஓரியன்ஸ், கரேரே, கொலம்பியா, பொலிவியா, சிலே, ஈக்வடார், பெரு, அந்தமான் தீவுகள், மேகாலயா, சிக்கிம், பாண்டிச்சேரி, மற்றும் பூடான் போன்றவற்றில் மண்டல செயலாளராக சேவைபுரிகின்றார்.

2 . GBC குழுக்கள் – அரசியலமைப்பு மற்றும் சட்ட திருத்த குழுவின் உறுப்பினர், இஸ்கான் வெளியீடுகளின் ஆய்வுக்குழு உறுப்பினர், மாயாப்புர் -விருந்தாவன விழாக்குழுவின் உறுப்பினர், தத்துவ ஆராய்ச்சிக்குழு, விக்கிரஹ ஆராதனை கையேட்டுக் குழு, GBC கூட்டுறவு குழு, செயலாளா; குழுவின் உறுப்பினர், மற்றும் புரி அபிவிருத்திக்குழு.

3 . மாயாப்புர் தொடர்பாக – மாயாப்புர் அபிவிருத்திக்குழு உறுப்பினர், காட்சிகள் மற்றும் தீம் பார்க் துறையின் தலைவர், நிலத்துறை தலைவர், கங்கை அரிப்பு முன்னெச்சாpக்கைகள், உலகம் முழுவதையும் ஸ்ரீ மாயாப்புராக உயர்த்துதல், GBC மண்டல செயலாளா;, மற்றும் இணை இயக்குநா;.

சகல கலா வல்லவர்

தவத்திரு ஜெயபதாக மஹராஜர் ஒரு சகல கலா வல்லவன் ஆவார். எப்பொழுது அவர் புத்தக விநியோகத்தினை மேற்கொண்டாலும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும், முழுமகிழ்ச்சியுடனும் ஈடுபடுவார். மகோத்ஸவங்களுக்கான ஏற்பாடுகளின்போதும், அல்லது புதிய நாமஹட்டாக்களை நிறுவும்போதும் அவர் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும், முழு மகிழ்ச்சியுடனும் செயல்படுவார். அவரால் பயணம் மேற்கொள்ளப்படாத இடம் என்று உலகில் இருப்பது மிகவும் அரிதேயாகும். அதைப்போலவே அவரது கரங்களால் செய்யப்படாத சேவைகள் என்பதும் மிக மிக அரிதானதேயாகும். அவரிடம் வழங்கப்படும் எத்தகைய சேவைகளையும் குரு, ஸாது மற்றும் கிருஷ்ணரின் உத்தரவாகவே கருதி ஏற்றுக்கொள்வார். அவைகள் அனைத்தையுமே தவத்திருவானவர் மிக்க அன்புடன் தனது நித்தியமான ஆன்மீக குருவாகிய ஓம் விஷ்ணுபாத பரமஹம்ஸ பரிவ்ரஜக ஆச்சார்ய 108 ஸ்ரீ ஸ்ரீமத் அ.ச. பக்தி வேதாந்த ஸ்வாமி ஸ்ரீல பிரபுபாதாவிற்கு புரியும் சமர்ப்பணமாகவே மேற்கொள்கின்றார்.

+8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question