Thursday, March 28

Srila Gopala Bhatta Goswami (Tamil) ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

   ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி ( வேன்கட பட்டாவின் மகன், ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்) தென்னிந்தியாவின் ஸ்ரீ ரங்கத்தில் தோன்றினார். ஸ்ரீ சைதன்யா மஹாபிரபு வேன்கட பட்டாவின் வீட்டில் நான்கு மாதங்கள் தங்கியிருந்து, குடும்பத்தை கெளடிய வைணவத்திற்கு மாற்றினார். இந்த நேரத்தில் சிறு பாலகனாக கோபால தனிப்பட்ட முறையில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவுக்கு சேவை செய்தார். ஸ்ரீ சைதன்யர் அவரின் எச்சங்களையும் ஆசீர்வாதங்களையும் அன்பாகக் கொடுத்து அவரை ஆச்சார்யாவாக மாற்றினார்.

    நான்கு மாதத்தில், சைதன்யா மஹாபிரபு வேன்கட பட்டாவுடன் நெருங்கிய நட்பை வளர்த்துக் கொண்டார், இதை கிருஷ்ணா தாஸ கவிராஜர் “ஷக்ய ரஸா” என்று விவரிக்கிறார். ஒருவருக்கொருவர் சுதந்திரமாக உரையாடுகையில், அவர்கள் பெரும்பாலும் ஒன்றாக சிரிப்பார்கள், கேலி செய்வார்கள். ஒரு நாள் நகைச்சுவையான மனநிலையில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வேன்கடாவிடம் கேட்டார்:

   “உங்கள் வணக்கத்திற்குரிய தெய்வம், ஸ்ரீ லட்சுமிதேவி, வைகுந்தத்தின் மகிழ்ச்சியையும், அவளது நாயகர் நாராயணருக்கு அவர் செய்த சேவையையும் ஏன் கைவிடுகிறார்? அவள் ஏன் பிருந்தாவனத்திற்குச் சென்று கடுமையான தவம் செய்கிறாள்? “

“இந்த மர்மங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் நீங்கள் முழுமுதற் கடவுள் என்பதால் நிச்சயமாக எனக்கு அறிவொளி அளிக்க முடியும்” என்று வேன்கட பட்டா கூறினார்.

“கிருஷ்ணருக்கு ஒரு தனித்துவமான குணம் உள்ளது,” என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு  கூறினார்,

“அவர் தனது தனிப்பட்ட அன்பால் (மாதூர்ய) அனைவரின் இதயங்களையும் ஈர்க்கிறார். பகவான்  நாராயணர் அறுபது ஆழ்நிலை குணங்களை மட்டுமே கொண்டிருக்கிறார், ஆனால் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அறுபத்து நான்கு குணங்கள் உள்ளன. மேலும் அவை அனைத்தும் மாதூரிய ரஸத்தில் தனித்துவமானது. முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர், லட்சுமிதேவியின் மனதை ஈர்க்கிறார்.ஆனால் பகவான் நாராயணர் ஒருபோதும் வ்ரஜ (விருந்தாவன) கோபிகளின் மனதை ஈர்க்க முடியாது. ஒரு முறை  “வ்ரஜ லீலாவில், கிருஷ்ணர், நாராயணர் வேடமிட்டு, கிருஷ்ணரைத் தேடும் கோபிகளின் முன் தோன்றினார். பகவான் நாராயணரை பார்த்த கோபிகள், ஓ ! பகவான் நாராயணா !, உங்களுக்கு நமஸ்காரங்கள். கிருஷ்ணர் எங்கே சென்றார், பார்த்தீர்களா?’ கிருஷ்ணர் முழுமுதற் கடவுள் என்ற விழிப்புணர்வு இல்லாமல் தன்னிச்சையாக நேசிக்கும் கோபிகளை பின்பற்றுவதன் மூலம் ஒருவர் கிருஷ்ணரை அடைய முடியும். ஸ்ருதிகள் (வேதம்) கோபிகளின் பரவசத்தில் கிருஷ்ணரை வணங்கினர். அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றியதால் ராஸ நடனத்தில் கிருஷ்ணருடன் சேர கோபியின் உடல்களைப் பெற்றனர். லட்சுமி தேவியும் கிருஷ்ணரை ரசிக்க விரும்பினார், ஆனால் அவரது ஆன்மீக வடிவத்தை லட்சுமிதேவி என்றும் தக்க வைத்துக் கொள்ள விரும்பினார். கோபிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாமல் யாரும் கிருஷ்ணரை அடைய முடியாது. “


ஸ்ரீ பிரபோதானந்த சரஸ்வதியிடமிருந்து தீட்சை பெற்ற பிறகு, கோபால பட்டா பிருந்தாவனத்திற்கு வந்து ஸ்ரீ ரூபா மற்றும் சனாதன கோஸ்வாமிகளின் அன்பான நண்பரானார். அவர் நாற்பத்தைந்து ஆண்டுகள் பிருந்தாவனத்தில் ராதா-குண்டாவில் பஜனம் செய்தார்.

Gopala Bhatta Goswami Tamil
ஸ்ரீ ராதா ரமன ஜி

 புனித யாத்திரையின் பொழுது அவர் பன்னிரண்டு ஷாலக்ரம ஷிலாக்களைப் பெற்றார். பின்னர் தாமோதர ஷிலா தன்னை அழகிய ராதா ரமண பகவானாக வெளிப்படுத்தினார். 1542 முதல், துல்லியமான சாஸ்திர சடங்குகளைத் தொடர்ந்து ராதா ராமனாஜி தூய பக்தியுடன் வணங்கப்படுகிறார்.


   போலி அன்பான (சாஸ்த்திரதிர்க்கு புறம்பான)  ரஸங்கள்  பரவுவதையும், வைதி பக்திக்கு அலட்சியம் காட்டுவதையும் சரிபார்க்க ஒரு புத்தகம் எழுதும்படி கோபால பட்டாவுக்கு ஸ்ரீ சைதன்ய மஹபிரபு உத்தரவிட்டார். ஸ்ரீ சனாதன கோஸ்வாமியுடன் உறுதிப்படுத்திய அவர், கெளடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தின் சடங்கு மற்றும் பக்தி நடைமுறைகளை விளக்கும் அங்கீகரிக்கப்பட்ட புத்தகமான ஹரி-பக்தி-விலாசாவைத் தொகுத்தார்.

   அவர் சத்-கிரியா-தீபிகா மற்றும் ஸ்ரீ ஜீவா கோஸ்வாமியின் சத் சந்தர்பாஸின் அவுட்லைன் (மேலோட்டம்) ஆகியவற்றை எழுதினார். அவர் ஸ்ரீமதி ராதாராணியின் அஸ்தா மஞ்சரிகளில் ஒருவரான குண-மஞ்சரியாக சேவை செய்கிறார். அவரது சமாதி ஸ்ரீ ராதா ரமன ஜி தோன்றிய  இடத்திற்கு பின்னால் உள்ள கோயில் வளாகத்திற்குள் உள்ளது. ஸ்ரீ கோபால பட்டா கோஸ்வாமி ராதா ரமன ஜிக்கு தனது வாழ்நாள் முழுவதும் சேவை செய்த பிரம்மச்சாரியான கோபிநாதவுக்கு (பூஜாரி கோஸ்வாமி) தீக்ஷ்சை கொடுத்தார். கோபால பட்ட கோஸ்வாமி சீனிவாச ஆச்சார்யா மற்றும் பல முக்கிய வைணவர்களுக்கு தீக்ஷ்ச கொடுத்தார்.


ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி ஸ்ரீரங்கத்தில் வசித்தவரான வேங்கட பட்டரின் மகனாவார். கோபால பட்டர் முன்பு இராமானுஜ ஸம்பிரதாயத்தின் சீடப் பரம்பரையைச் சார்ந்திருந்தார், ஆனால் பின்னர் கௌடீய ஸம்பிரதாயத்தின் அங்கமானார். 1433 சகாப்த ஆண்டில் (கி.பி. 1511), சைதன்ய மஹாபிரபு தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, சாதுர்மாஸ்ய காலத்தின் நான்கு மாதங்களில் வேங்கட பட்டரின் இல்லத்தில் தங்கினார். அச்சமயத்தில் வேங்கட பட்டர் பூரண மனநிறைவை அடையும் வரை மஹாபிரபுவிற்கு சேவை செய்யும் வாய்ப்பினைப் பெற்றார். அப்போது மஹாபிரபுவிற்குத் தொண்டு புரியும் வாய்ப்பினை கோபால பட்டரும் பெற்றார்.

காலப்போக்கில் ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி தமது சித்தப்பாவும் மாபெரும் சத்தியாசியுமான பிரபோதானந்த சரஸ்வதியினால் தீக்ஷைஷயளிக்கப்பட்டார். கோபால பட்ட கோஸ்வாமியின் தாய்தந்தை இருவருமே மிகவும் அதிர்ஷ்டசாலிகள், அவர்கள் தங்களது முழு வாழ்வையும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் சேவையில் அர்ப்பணித்தனர். அவர்கள் கோபால பட்ட கோஸ்வாமியை விருந்தாவனத்திற்குச் செல்ல அனுமதித்தனர், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை நினைத்தபடியே அவர்கள் தங்களது உயிரைத் துறந்தனர். கோபால பட்ட கோஸ்வாமி விருந்தாவனத்திற்குச் சென்று, ஸ்ரீ ரூபரையும் ஸநாதன கோஸ்வாமியையும் சந்தித்த செய்தியானது சைதன்ய மஹாபிரபுவிற்குத் தெரிவிக்கப்பட்டபோது அவர் மிகவும் திருப்தியுற்றார், கோபால பட்ட கோஸ்வாமியை தங்களது இளைய சகோதரராக ஏற்று அவரை கவனித்துக்கொள்ளுமாறு சைதன்ய மஹாபிரபு ஸ்ரீ ரூபரிடமும் ஸநாதனரிடமும் அறிவுறுத்தினார். கோபால பட்ட கோஸ்வாமியின் மீதான பெரும் பாசத்தினால், ஸ்ரீ ஸநாதன கோஸ்வாமி தாம் இயற்றிய ஹரி – பக்தி – விலாஸம் எனப்படும் வைஷ்ணவ ஸ்மிருதியினை அவரது பெயரில் பிரசுரித்தார். ஸ்ரீல ரூபர் மற்றும் ஸநாதனரின் உபதேசத்தின்படி, கோபால பட்ட கோஸ்வாமி விருந்தாவனத்தின் ஏழு முக்கிய விக்ரஹங்களில் ஒருவரான ராதாரமண விக்ரஹத்தினை பிரதிஷ்டை செய்தார். ராதாரமண கோயிலின் சேவாதாரர்கள் ( பூஜாரிகள் ) கௌடீய ஸம்பிரதாயத்தைச் சார்ந்தவர்கள்.

– ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம்


மஹாபிரபு மற்றும் வேங்கடபட்டருக்கு இடையேயான உரையாடல்
(Conversation with Mahaprabhu and Venkata Bhatta)

வேங்கடபட்டருக்கு பிரபோதானந்த சரஸ்வதி திருமலை பட்டர், என இரு சகோதரர்கள் இருந்தனர். இம்மூவரும் ஸ்ரீலட்சுமி நாராயணரின் பெரும் பக்தர்கள்.

ஸ்ரீசைதன்ய மஹாபிரபு ஸ்ரீரெங்கம்வந்திருந்த போது இம்மூன்று சகோதரர்களும் மஹாபிரபுவுடன் பல்வேறு தத்துவ விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம். கோபால பட்டர் அவ் விவாதங்களை சிரத்தையுடன் கவனிப்பார்.

ஒரு நாள் மஹாபிரபு, வேங்கட பட்டர் மற்றும் அவரது சகோதரர்களிடம் பக்தியில் ஐஸ்வர்ய பாவம் மற்றும் மாதுர்ய பாவத்தை பற்றி வினவி னார். வேங்கடபட்டரும் பணிவுடன், “நான் ஒரு சாதாரண மனிதன். இக்கேள்விகளுக்கு என் னால் பதில் கூற முடியாது. ஆனால் தாங்கள் மூலமுழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரே. இதனை நாங்கள் அறிவோம். எனவே தயவு கூர்ந்து இக் கேள்விக்குரிய பதிலை தாங்களே விளக்கவும்’ என கூறினார்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஸ்ரீரெங்கத்தில் வழிபட்ட விக்ரஹாம்

mahaprabhu personally worshiped deity iskcon bhakti yogam

கிருஷ்ணரை வழிபடும் விதங்கள்

இதனை கேட்ட மஹாபிரபு ஐஸ்வர்ய பாவத் தின் உயர்ந்த நிலையை விளக்கி பின் மாதுர்ய பாவத்தை விளக்கினார். மாதுர்ய பாவத்தில் பகவான் பக்தர்களுடன் இனிமையான, நெருங் கிய, அன்பு செலுத்தும் வகையில் தம்மை வெளிப் படுத்துகிறார். அந்த அன்பின் இனிமையானது பகவானின் ஐஸ்வர்யத்தை அல்லது உயர்வை மறைக்கச் செய்கிறது. பகவானின் பெருமைகளை அதாவது ஐஸ்வர்யத்தை உணர்வது மாதுர்ய பாவத்தின் ஒரு பகுதிதான். ஆயினும் மாதுர்ய பக்தியானது அதனை தாண்டி நிற்கிறது. மாதுர்ய பாவத்தில் கிருஷ்ணரை மிகவும் நெருங்கிய அன்பிற்கும், பாசத்திற்கும் உரியவராக நண்பன், பெற்றோர் மற்றும் நேசிப்பவர் நிலையிலிருந்து கிருஷ்ணரை அப்பக்தர்கள் பக்தர்கள் நேசிக்கின்றனர். இந்நிலையில் அவர் கடவுள் என்பதற்காக வழிபடவில்லை. அவர் கிருஷ்ணர், அவர் கவர்ச்சிகரமானவர் என்பதற்காக வழிபடுகின்றனர். அந்நிலையில் கிருஷ்ணரை தனது சிறந்த நண்பராக அல்லது, தங்களது நேசிப் பிற்கு உரியவராக அல்லது தங்களது கவர்ச்சியான எளிதில் அன்பு செலுத்தக்கூடிய தங்கள் குழந்தை யாக கருதுகின்றனர்.

ஸ்ரீ கிருஷ்ணரின் தாயான யசோதாதேவி கிருஷ்ணரின் வாயினுள் பிரபஞ்சங்கள் அனைத்தை யும் கண்டவுடன் அவர் ஐஸ்வர்ய பாவத்திற்கு ஆளானார். ஆனால் கிருஷ்ணர் தனது வாயை மூடிய உடனே யசோதா தேவியின் பெற்றோர் பாசம் ஐஸ்வர்ய பாவத்தின் எல்லா உணர்களையும் மூழ்கடித்து துடைத்து நீக்க கிருஷ்ணரின் கவர்ச்சி மிகு புன்னகையை கண்டார். யசோதா தேவி கிருஷ்ணரை எல்லா வகையிலும் தன்னை சார்ந்தி ருக்கும் தனது அன்பிற்கு உரிய மகனாக எண்ணினார்.

இவ்வகையில் மாதுர்ய பாவத்தில் பகவானு டன் நெருங்கிய அன்பு பரிமாற்றம் கொள்ள வழி வகை செய்கிறது. இவ்வாறு மாதுர்ய பாவத்தின் பெருமைகளை விளக்கிய மஹாபிரபு அந்த நிலையை அடைய ஒருவர் விரஜவாசிகளின் அடி சுவடுகளை பின்பற்ற வேண்டும் என்றார்.

எனவே ஒருவர் ஆச்சாரியர்களின் உபதேசங் களை கடைபிடிப்பது அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுவது, அவர்களது வழிகாட்டுதலின்படி பகவானின் புனிதநாமங்களை உச்சரிப்பது, ஆச்சாரி யர்களை பின்பற்றும் பக்தர்களுக்கு சேவை செய் வது, ஆச்சாரியர்களின் விளக்கவுரைகளைபடிப்பது

ஆகிய முறைகளைகடைபிடிக்கும் போது படிப்படி யாக நாம் தூய்மையடைந்து விரஜவாசிகளின் பக்தி நெறியில் முன்னேற்றமடைய முடியும்.

ஸ்ரீல பிரபுபாதாவும் மாதுர்ய பாவத்தை பற்றி விவரிக்கும் போது அந்நிலை மிக உயர்ந்த நிலை. ஜடஉலக பந்தத்திலிருப்பவர்கள் அந்நிலையை நகல் செய்வது கூடாது. ஒருவர் ஆரம்ப நிலையில் பகவானை ஐஸ்வர்ய பாவத்தில் ‘நாரத பாஞ்ச ராத்ரிக’ விதிகளை பின்பற்றி வழிபட வேண்டும். நமது கிருஷ்ண பக்தி கோயில்களில் ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணர் விக்ரகங்கள் உள்ள போதிலும் அவர்களை ஐஸ்வர்ய பாவத்தில் நாரத பாஞ்ச ராத்ரிக விதிகளைகடைபிடித்து வழிபடவேண்டும். அதன் மூலம் படிப்படியாக தூய்மையடைந்து பக்தி வாழ்வில் முன்னேறும் போது மாதுர்ய பாவம் படிப்படியாக அவரது முன்னேற்றத்திற்கு தக்கவாறு வெளிப்படுத்தப்படும் என்று கூறுகிறார்.

மஹாபிரபு விளக்கங்களை செவியுற்ற வேங்கட பட்டரும் அவரது சகோதரர்களும் மஹாபிரபுவின் சகாக்களாகி இடைவிடாது பகவானின் புனித நாமத்தை பாடுவதில் ஈடுபட்டனர்.

மஹாபிரபு ஸ்ரீரெங்கத்தை விட்டு கிளம்புதல்

வேங்கடபட்டருடனும் அவரது சகோதரர்களுட னும் இவ்வாறு நான்கு சதுர் மாதங்களும் விவா தித்த மஹா பிரபு, முழு நேரமும் இளம் கோபால் பட்டரை தனக்கு சேவை செய்ய அனுமதித்தார். சதுர் மாத காலம் முடிந்ததும் மஹா பிரபு தனது தென் இந்திய பயணத்தை தொடர முடிவு செய்தார். மஹாபிரபுவின் பிரிவினை அறிந்த வேங்கட பட்டர் மயக்கமுற, இளம் கோபால்பட்டர் அன்பினால் மிகுதியால் கண்ணீர் விட்டார். கோபால் பட்டரை சமாதானப்படுத்த இன்னும் சில நாட்கள் ஸ்ரீ ரங்கத்தில் தங்க மஹா பிரபு ஒத்துக் கொண்டார்.

வேங்கடபட்டரும், திருமலைபட்டரும்,

பின்னர் மஹாபிரபுவின் பிரிவு சமயத்தில் பிரபோதானந்தரும், கோபால் பட்டரும் அழுது புலம்பினர். நாம் என்ன செய்வோம்? நாம் யாருடன் காவேரி நதி சென்று குளிக்க செல்லப் போகிறோம். யாரு டன் நாம் கேலி பேச போகிறோம்? யாருடன் நாம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று ஒன்று கூடி பகவான் நாமத்தை பாடப் போகிறோம் ? என புலம்பிய அவர்கள் மஹாபிரபுவின் தாமரைப் பாதங்களில் வீழ்ந்து தங்களது வாழ்வை மஹாபிரபுவிடம் சரணடைய செய்தனர். அதன் பின் மஹாபிரபு தனது தென்இந்திய சுற்றுப்பயணத்தை தொடர்ந்தார்.

கோபாலபட்டரின் பக்தி முதிர்ச்சி

மஹாபிரபுவின் பிரிவிற்கு பின் கோபால் பட்டர், மஹாபிரபு ஆணைப்படி தனது பெற்றோர்களுக்கு பணிவுடனும், நம்பிக்கையுடனும் சேவை செய்தார். பெரும் பண்டிதரான பிரபோதனந்தர், கோபால் பட்டரின் குருவானார். வேத சாஸ்திரங்கள், வேதாந்தம், பக்தி சாஸ்திரங்கள் ஆகியவற்றை கோபால் பட்ட பிரபோதானந்தரின் கீழ் பயின்றார். மிக விரைவில் கோபால் பட்டர், இந்தியாவில் புகழ் பெற்ற பண்டிதராக உருவெடுத்தார். பிரபோதானந்த சரஸ்வதியின் பரந்த வேத அறிவு மற்றும் மஹா பிரபுவின் அறிவுரைகள் ஆகிய இரண்டும் இணைந்து கோபால்பட்டரை அவரது முதிர்ந்த அறிவு மற்றும் பக்திக்கு அனைவரையும் அறியும் வண்ணம் செய்தது. தனது ஒவ்வொரு உரைகளிலும் மஹாபிரபுவின் கருணையையும், பெருமைகளையும் புகழ்ந்துரைத்த கோபால் பட்டர் எவ்வாறு மஹாபிரபு ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணரின் அவதாரமென்று விரிவாக விவரித்தார். எல்லா வேத அறிவின் சாரமும் மஹாபிரபுவிடம் பக்தி செலுத்துவதே என்பதையும் எடுத்துரைத்தார்.

பல வருடங்களுக்கு பின் கோபால்பட்டரின் பெற்றோர் கோபால்பட்டரிடம், “இப்போது நீ நமது உயிராகிய கெளரசந்தரின் ஆணைப்படி விருந்தாவனம் சென்று ரூப மற்றும் சனாதனரிடம் சரணடைவாயாக!” என்று அறிவுரை கூறி பின் இருவரும் இவ்வுலகை நீங்கி ஆன்மீக லோகம் சென்றடைந்தனர்.

விருந்தாவனத்தில் கோபால்பட்டர்

கோபால் பட்ட கோஸ்வாமி விருந்தாவனத்தை சென்றடைந்தவுடன் ரூப கோஸ்வாமி, சனாதன கோஸ்வாமி, கிருஷ்ண தாஸ கவிராஜ கோஸ்வாமி, லோகநாத் கோஸ்வாமி, பூகர்ப கோஸ்வாமி, காசீஸ்வர் மற்றும் எல்லா வைஷ்ணவர்களும் பெரும் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றனர். விருந்தாவனத்தை அடைந்த உடனேயே கோபால் பட்ட கோஸ்வாமி, முற்றும் துறந்த துறவியின் உடையை ஏற்று ரூப மற்றும் சனாதனரை தனது உயிரும் மூச்சுமாக ஏற்றுக் கொண்டார்.

இதுதான் பெரும் வைஷ்ணவர்களின் நடத்தை. எவ்வளவு பெரும் அதிகாரியாயினும், கற்றறிந்தவராயினும் அவர்கள் எப்போதும் பணிவையே விரும்புவதோடு மற்றொரு வைஷ்ண வரின் அடைக்கலத்தையே நாடுவர். பகவானின் பெரும் பக்தர்கள் எப்போதும் சுயமாக செயல்படு வதை விரும்பாதவர்களாகவே உள்ளனர். அவர் கள் எப்போதும் மற்ற பெரும் பக்தர்களின் கோஸ்வாமி முழு கௌடிய சம்பிரதாயத்தின் வழிகாட்டியாயினும் தனது பக்தி ரசாமிருத சிந்துவில் குறிப்பிடும்போது “நான் சனாதன கோஸ்வாமியின் தாமரைத் திருவடிகளில் சரண டைந்துள்ளேன். அவர் தான் எனது ஆன்மீக குரு” என குறிப்பிடுகிறார். இதுதான் பெரும் வைஷ்ணவர்களின் இயற்கை. மாயாவாதிகள் எப்போதும் கடவுள் என்ற நிலைக்கு வரவே போட்டியிடுவர். ஆனால் வைஷ்ணவர் கள் எப்போதும் மற்ற வைஷ்ணவருக்கு கீழிருப்பதையே விரும்புவர்.

+5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question