Friday, September 18

Author: பக்தி யோகம் குழு

Pavitropana Ekadashi (Tamil) / பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி

Pavitropana Ekadashi (Tamil) / பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி

ஏகாதசி
பவித்ரோபன ஏகாதசியின் விரத மகிமையைப் பற்றிப் பார்ப்போமா:- இந்த பவித்ரோபன ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி மஹாவிஷ்ணுவே யுதிஷ்டிரரிடம் கூறியிருக்கிறார்.மஹாராஜாவான ஸ்ரீ யுதிஷ்டிரர், கிருஷ்ண பரமாத்மாவிடம் "அரக்கன் மதுவை அழித்ததால் "மதுசூதனன்" என்ற திருநாமம் பெற்றவரே சிரவண மாதம், சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி அறிய விரும்புகிறேன். ஆகையால் கிருஷ்ண பரமாத்வாவே தயை கூர்ந்து இந்த ஏகாதசி விரதத்தின் மகத்துவத்தை விரிவாக சொல்லுங்கள்" என்று வேண்டிக் கொண்டார்.முழுமுதற் கடவுளான கிருஷ்ண பரமாத்மா யுதிஷ்டிரரிடம், "மஹாராஜனே, இந்த ஏகாதசி தினத்தைப் பற்றி நீ அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஏகாதசியின் மகத்துவத்தைப் பற்றி சொல்கிறேன் கேள்! என்று கிருஷ்ண பரமாத்மா விரத மகிமையை எடுத்துரைத்தார்.பரமாத்மா கிருஷ்ணர் கூறுதல்:-இந்த ஏகாதசியானது மிகவும் புனிதமானது. இந்...
Srila Sanatana Gosvami

Srila Sanatana Gosvami

வாழ்க்கை வரலாறு
ஸ்ரீ சனாதன கோஸ்வாமியின் ஆரம்ப கால வாழ்க்கைஸ்ரீ ரூப கோஸ்வாமிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 1488 ஆம் ஆண்டில், வங்காளத்தில் உள்ள ஒரு சரஸ்வத பிராமண குடும்பத்தில் ஸ்ரீ சனாதன கோஸ்வாமி தோன்றினார். சனாதனர் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களான ரூபர், அனுபமா ஆகியோர் சிறுவயதிலிருந்தே எப்போதும் பாவ பக்தியில் (bhava bhakti) ஆழ்ந்திருந்தனர். பிருந்தாவனத்தை நினைவுகூர்ந்து, தாங்கள் விளையாடும் காடுகளுக்கு விரஜத்தின் பன்னிரண்டு காடுகளின் (தாலவனம், மதுவனம், காம்யவனம், மகாவனம்) பெயர்களைச் சூட்டினர். தங்களுக்குப் பிடித்தமான நீராடும் குளங்களுக்கு ராதா குண்டம் மற்றும் சியாம குண்டம் என்று பெயரிட்டனர்.தனது இளமைப் பருவத்தில், ஒரு அழகான பிராமணச் சிறுவன் தமக்கு ஸ்ரீமத் பாகவதத்தை வழங்குவது போல் ஸ்ரீ சனாதனர் கனவு கண்டார். பரவசமடைந்து அவர் கண்விழித்தார். ஆனால் சிறுவனையோ பாகவதத்தையோ காணாததால் அவர் சோகமடைந்தார். எனின...
Chaturmas (Tamil) / சாதுர்மாஸ்யம்

Chaturmas (Tamil) / சாதுர்மாஸ்யம்

ஆன்மீகப் பதிவு, திருவிழாக்கள்
சாதுர்மாஸ்ய காலம் என்பது ஆஷாட (ஜுன் - ஜுலை ) மாதத்தில் வளர்பிறை ஏகாதசியான ஷயன ஏகாதசியிலிருந்து தொடங்கி, கார்த்திக ( அக்டோபர்- நவம்பர்) மாதத்தின் வளர்பிறை ஏகாதசியான உத்தான ஏகாதசியன்று முடிகிறது. இந்த நான்கு மாத காலமானது “சாதுர்மாஸ்யம்” என்று அறியப்படுகிறது. வைஷ்ணவர்கள் சிலர் இதனை ஆஷாட மாதத்தின் பெளர்ணமி நாளிலிருந்து கார்த்திக மாதத்தின் பெளர்ணமி நாள் வரை அனுசரிக்கின்றனர். இதுவும் நான்கு மாத காலமாகும். சந்திர மாதங்களை வைத்து கணக்கிடப்படும் இந்த காலம் சாதுர்மாஸ்யம் எனப்படுகிறது. சூரிய மாதத்தினைப் பின்பற்றுவோர் சிராவண மாதத்திலிருந்து கார்த்திக மாதம் வரை சாதுர்மாஸ்யத்தை அனுசரிக்கின்றனர். சூரிய மாதமோ சந்திர மாதமோ, ஒட்டு மொத்த காலமும் மழைக்காலத்தின்போது வருகிறது. சாதுர்மாஸ்யம் எல்லாத் தரப்பட்ட மக்களாலும் அனுசரிக்கப்பட வேண்டும். கிரஹஸ்தரா (குடும்பத்தினர்) சந்நியாசியா என்பது பொருட்டல்ல. இதை...
Deva Shayani (Padma) Ekadashi (Tamil) /தேவசயனி (பத்ம) ஏகாதசி

Deva Shayani (Padma) Ekadashi (Tamil) /தேவசயனி (பத்ம) ஏகாதசி

ஏகாதசி
இந்த ஏகாதசியின் மற்ற பெயர் : ஷயனி / மஹா / பத்ம / தேவ்போதி / அஷத    ஆஷாட மாதம், சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியை தேவசயனி (பத்ம) ஏகாதசியாக கொண்டாடுவர். தேவசயனி ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம். ஸ்ரீ மந் நாராயணன் சயனம் மேற்கொள்ளும் சுக்ல ஏகாதசி இதுவாகும். எல்லா ஏகாதசிகளும் புண்ணியத்தைத் தருவதாயினும் பகவான் நாராயணனுக்கு உகந்த இந்த ஏகாதசியை கடைபிடிப்பது மிகுந்த புண்ணியம் தரும்.தர்மத்தை எந்த சூழ்நிலையிலும் விடாது காக்கும் மஹாராஜா யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ணரிடம் - " ஒ! கேசவா, ஆஷாட மாதத்தின் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர், அன்றைய சுபதினத்தில் வழிபட வேண்டிய கடவுளர் யார். அன்று விரதம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதை பற்றி விரிவாக சொல்லுங்கள்" என்று கூறினார்.பிரபு ஸ்ரீ கிருஷ்ணர் பின் வருமாறு கூறத் தொடங்கினார்.- "ஒ! பூமியின் பாதுகாவலரே, ஒரு முறை பிரம்மதேவர் தன்னுடைய மக...
Yogini Ekadashi (Tamil) I யோகினி ஏகாதசி

Yogini Ekadashi (Tamil) I யோகினி ஏகாதசி

ஏகாதசி
( ஆனி - ஆஷாட மாதம் ,கிருஷ்ண பட்ச ஏகாதசி)ஆஷாட மாதம், கிருஷ்ண‌ பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை யோகினி ஏகாதசியாககொண்டாடுவர். யோகினி ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம். இந்த விரதத்தை இருந்தால் அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள் கிடைக்கும்.மஹாராஜா யுதிஷ்டிரர் கிருஷ்ண பரமாத்மாவை வணங்கி, "பரம் பொருளே, நிர்ஜலா ஏகாதசியின் அபார மகிமையப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆடி மாதத்தில். கிருஷ்ணபட்சத்தில் வரும் யோகினி ஏகாதசி, சுத்த ஏகாதசியைப் பற்றிய விவரம் அறிய விரும்புகிறேன். ஆகையால், மது என்னும் பெயர்கொண்ட அரக்கனை அழித்ததால் மதுசூதனன் என்னும் திருநாமம் பெற்ற கிருஷ்ணா, தயைகூர்ந்து விவரமாகசொல்லவும்" என்று கூறினார்.ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா யுதிஷ்டிரரை நோக்கி, ஹே மஹாராஜா, உபவாசம் இருக்கக்கூடிய நாட்களிலேயே மிகச்சிறப்பான நாள் ஏகாதசி திருநாள். அந்த ஏகாதசி நாட்களில் மிகவும் சிறப்பானது ஆஷாட மாதத்தின் க...
Pandava Nirjala Ekadasi (Tamil)

Pandava Nirjala Ekadasi (Tamil)

ஏகாதசி
பாண்டவ நிர்ஜல ஏகாதசிhttps://youtu.be/f29gorKkcgoஆனி மாதம், சுக்ல பட்சம், ஏகாதசி திதியை நிர்ஜலா ஏகாதசியாக கொண்டாடுவர்.. பாண்டவ நிர்ஜலா ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம். 80 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் மிகவும் விந‌யத்துடன் சுவாரசியமான, பாபங்களை அழிக்கும் ஏகாதசி விரதக் கதைகளை கேட்டு மிகுந்த மனமகிழ்ச்சியில் திளைத்து இருந்தார்கள். அப்போது அனைவரும் வைகாசி -ஆனி மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியின் கதையைக் கேட்க விருப்பம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சூத முனிவர் அதைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்."ஒரு முறை பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமசேனர் வியாசரிடம் 'மதிப்பிற்குரிய பிதாமகரே ! மூத்த தமையனார் யுதிஷ்டிரர், அன்னை குந்தி, திரௌபதி, தம்பி அர்ஜூன், நகுலன், சகா தேவன் ஆகியோர் ஏகாதசி விரதத்தை நியமத்துடன் கடைபிடித்து வருகிறார்கள். அதனால் அவர்கள், நானும் அன்று அன்னம் உட்கொள்ளக் கூடா...
Gangamata Goswamini

Gangamata Goswamini

வாழ்க்கை வரலாறு
கங்காமாதா கோஸ்வாமினிவங்காளத்தின் மன்னரான நரேஷ் நாராயணின் மகளான இளவரசி சச்சி தேவி, தனது குழந்தை பருவத்திலிருந்தே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மீது கலப்படமற்ற தூய்மையான பக்தியைக் கொண்டிருந்தார். கிருஷ்ணர் மீதான தனது உண்மையான பற்றுதலின் காரணமாக அவர் திருமணம் செய்து கொள்ளவும் மறுத்துவிட்டார். தந்தையின் மறைவுக்குப் பிறகு அவர் அரசாட்சியை ஏற்றார். ஆனால், உண்மையான ஆன்மீக குருவைக் கண்டுபிடிப்பதற்காக அவர் விரைவில் அதைத் துறந்தார். இளவரசி சச்சி தேவி பிருந்தாவனத்தின் முன்னணி குருவான ஸ்ரீ ஹரிதாச பண்டிதரை சந்தித்து, கோவிந்தாஜிக்கு பக்தியுடன் பஜனைகள் செய்யத் தொடங்கினார். குறைவாக சாப்பிட்டதால் அவர் உடல் மெலிந்து காணப்பட்டாலும், எப்போதும் யமுனை நதியின் மணல் கரையில் தூங்குவதையும், சூரியோதயத்திற்கு முன்பே எழுந்து கோவிந்தாஜியின் கோவிலை சுத்தம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். தினமும் அவர் பாகவதக் கதைகளைக்...
பரம ஏகாதசி / Parama Ekadashi (Tamil)

பரம ஏகாதசி / Parama Ekadashi (Tamil)

ஏகாதசி, ஆன்மீகப் பதிவு
தற்போது வரக்கூடிய ஏகாதசி, 32 மாதங்களுக்கு ஒருமுறை வரும் #பரம ஏகாதசி ஆகும். வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும், 32 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு மாதம் சேர்க்கப்படுகிறது. புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த 'அதிக' (Adhika) மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பத்மினி ஏகாதசி' என்றும் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பரம ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த வருடம் 'அதிக' மாதம் வந்துள்ளது.யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக் கேட்கிறார். "பரம்பொருளே, மதுஸூதனா! 'அதிக' மாதத்தில், கிருஷ்ண பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம். பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகளைக் கூறுங்கள்" என்று, யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டுகிறார்.பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், "ஓ யுதிஷ்டிரா,...
Padmini Ekadasi Tamil / பத்மினி ஏகாதசி

Padmini Ekadasi Tamil / பத்மினி ஏகாதசி

ஏகாதசி
பத்மினி ஏகாதசிதற்போது வரக்கூடிய ஏகாதசி, 32 மாதங்களுக்கு ஒருமுறை வரும் பத்மினி ஏகாதசி ஆகும். வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும், 32 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு மாதம் சேர்க்கப்படுகிறது. புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த 'அதிக' (Adhika) மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பத்மினி ஏகாதசி' என்றும் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பரம ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த வருடம் 'அதிக' மாதம் வந்துள்ளது.யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக் கேட்கிறார், "பரம்பொருளே, மதுஸூதனா! 'அதிக' மாதத்தில், சுக்ல பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம். பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகளைக் கூறுங்கள்," என்று யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டுகிறார்.பகவான் ஸ்ரீ கிருஷ்ண...
Apara Ekadashi (Tamil) /அபரா ஏகாதசி

Apara Ekadashi (Tamil) /அபரா ஏகாதசி

ஏகாதசி
 அபரா ஏகாதசி. இதனை அசலா ஏகாதசி என்றும் வழங்குவர்.    இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார்.     ஒ யுதிஷ்டிரா !! அபரா ஏகாதசி விரதம் மக்கள் அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய விரதம் ஆகும். இது மற்ற அனைத்து விரதங்களை விட ஸ்ரேஷ்டமானதும், உத்தமமானதும் ஆகும். இந்நாளில் அனைவரும் பக்தியுடன் பகவான் மகாவிஷ்ணுவை ஓங்கி உலகளந்த உத்தமனாகிய திரிவிக்ரமனாக வணங்க வேண்டும்.இந்த ஏகாதசி விரதம் ஒருவர் செய்த பாவங்கள் அனைத்தையும் அழிப்பதோடு, அவருக்கு அளவில்லா செல்வத்தை வாரி வழங்குவதால் இது இப்பெயர் பெற்றது. மேலும் இவ்விரதத்தை நம்பிக்கையோடு கடைபிடிப்பவர்கள் மக்களிடத்தில் பெரும் பேரும், புகழும் பெறுவர்.அதோடு இந்த அபரா ஏகாதசி விரத பிரபாவத்தால் பிரம்மஹத்தி, பிறரை நிந்திப்பது, போரில...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.