Sunday, December 3

Author: பக்தி யோகம் குழு

Utthana ekadhasi (Tamil) / உத்தான (அ) பிரபோதினீ ஏகாதசி

Utthana ekadhasi (Tamil) / உத்தான (அ) பிரபோதினீ ஏகாதசி

ஏகாதசி
ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி ஸ்கந்த புராணத்தில் பிரம்மாவிற்கும் நாரத முனிவருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை நாரத முனிவரிடம் பிரம்மா கூறினார். ஓ! முனிவர்களில் சிறந்தோனே! ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளையும் அழித்து புண்ணியத்தை அதிகரித்து முத்தியை அளிக்கக்கூடிய உத்தான ஏகாதசியை பற்றி கூறுகிறேன், கேள். ஓ! அந்தணர்களில் சிறந்தோனே! கார்த்திகை மாத (அக்டோபர் / நவம்பர்) வளர்பிறையில் தோன்றக்கூடிய உத்தான ஏகாதசி இந்த உலகில் தோன்றாத வரை கங்கையின் மேன்மை மாறாமல் நிலையாக இருந்தது. மேலும் உத்தான ஏகாதசி தோன்றாதவரை கடல் மற்றும் குளங்களின் புண்ணியத்தின் செல்வாக்கு ஈடு இணையற்று இருந்தது. இதன் பொருள் என்ன வெனில் இந்த உத்தான ஏகாதசி. கங்கையின் மேன்மைக்கும் குளங்களின் புண்ணியத்திற்கும் ஈடானது, இந்த ஏகாதசி ஒருவரின் அனைத்து பாவங்களையும் எரித்து சாம்பலாக்குகிறது. ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் ச...
Rama Ekadashi (Tamil) / ரமா (ராம)  ஏகாதசி

Rama Ekadashi (Tamil) / ரமா (ராம) ஏகாதசி

ஏகாதசி
ரமா ஏகாதசியின், பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! ஜனார்தனா! ஐப்பசி மாத தேய்ப்பிறையில் (அக்டோபர்/ நவம்பர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் சிறப்பையும் எனக்கு விளக்குங்கள். ஏகாதசியின், பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! ஜனார்தனா! ஐப்பசி மாத தேய்ப்பிறையில் (அக்டோபர்/ நவம்பர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் சிறப்பையும் எனக்கு விளக்குங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னர்களில் சிங்கம் போன்றவனே! இந்த ஏகாதசியின் பெயர் ரமா ஏகாதசி. இது ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும் அழித்துவிடும்...
பக்தனின் வாக்கைக் காப்பாற்றும் பகவான்

பக்தனின் வாக்கைக் காப்பாற்றும் பகவான்

ஆன்மீகப் பதிவு, Festivals-Tamil, திருவிழாக்கள்
கிருஷ்ணருக்கும் பக்தனுக்கும் இடையில் நிகழும் அன்புப் பரிமாற்றங்கள் மிகவும் இனிமையானவை. பகவானின் சொல்லை பக்தன் தட்ட மாட்டான் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். ஆனால் பக்தனின் சொல்லையும் பகவான் தட்ட மாட்டார் என்பதை நீங்கள் அறிவீர்களா? அன்னை யசோதையால் உரலில் கட்டிப்போடப்பட்ட கிருஷ்ணர் அந்த உரலுடன் நகர்ந்து இரண்டு மரங்களை வீழ்த்தி குபேரனின் இரண்டு மகன்களை விடுவித்தார். இந்த லீலையில் கிருஷ்ணர் எவ்வாறு தனது அன்பிற்குரிய பக்தரான நாரதரின் வார்த்தைகளை நிரூபித்தார் என்பதை சற்று காணலாம். கிருஷ்ணர் செய்த குறும்புச் செயல் "அம்மா பசிக்குது," என்றபடி கிருஷ்ணர் தயிர்கடைந்து கொண்டிருந்த அன்னை யசோதையின் முந்தானையைப் பிடித்து அன்புடன் இழுக்கின்றார். குழந்தையைத் தடுக்க முடியாமல் அவனை எடுத்து மடியில் கிடத்தி அந்த அழகிய திருமுகத்தை ரசித்தபடி யசோதை பால் கொடுக்கத் தொடங்கினாள். கிருஷ்ணரும் அன்னையின் அன்பி...
Damodar (Kartik) Month (Tamil) / தாமோதர மாதம்

Damodar (Kartik) Month (Tamil) / தாமோதர மாதம்

திருவிழாக்கள்
28 அக்டோபர் முதல் 27 நவம்பர் வரை, 2023 பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வெண்ணை திருடியதற்க்காக அன்னை யசோதை உரலில்கட்டியதால், அவருக்கு "தாமோதரர்" என்று பெயர் வந்தது. "தாம்" என்றால் "கயிறு ""உதரா" என்றால் 'வயிறு"இந்த மாதத்தில் யாரொருவர் தாமோதரருக்கு திருவிளக்கு ஏற்றி "தாமோதரஷ்டகம்" பாடி வழிபடுகின்றாரோ, அவர் பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர் ஆவார். தாங்கள் வைத்துள்ள தாமோதர பகவானை (படத்தை) தூய்மையான இடத்தில் வைத்துக் கொள்ளவும், பிறகு நெய்தீபம் ஏற்றி தாமோதர பகவானின்பாதம் – 4 முறைமார்புக்கு – 2 முறைமுகத்திற்கு – 3 முறைமுழுவதும் – 7 முறை தாமோதர கீட் பெற்றிட (Click here) இவ்வாறு தாமோதரருக்கு ஆரத்தி செய்தபின் துளசி இலையை அர்ப்பணிப்பது சாலச்சிறந்தது. "கார்த்திகை மாதத்தில் தாமோதரரை வழிபட்டு, தாமோதர அஷ்டகம் என்று அறியப்படும் இந்த பாடலை தினமும் பாராயணம் செய்ய வேண்டும்...
Pashankusha Ekasashi (Tamil) / பாஸங்குசா ஏகாதசி

Pashankusha Ekasashi (Tamil) / பாஸங்குசா ஏகாதசி

ஏகாதசி
ஐப்பசி மாத வளர்பிறையில் (செப்டம்பர் / அக்டோபர்) தோன்றக் கூடிய பாஸங்குசா ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! மதுசூதனா, ஐப்பசி மாத வளர்ப்பிறையில் (செப்டம்பர் / அக்டோபர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் சிறப்பையும் தயவு செய்து எனக்கு விளக்குங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னர்களில் சிறந்தோனே! இந்த ஏகாதசியின் பெயர் பாஸங்குசா ஏகாதசி. ஒருவரின் பாவங்களை அழிக்கக் கூடிய இந்த ஏகாதசியின் பெருமைகளைக் கேள். சிலர் இந்த ஏகாதசியை பாயபங்குஸா ஏகாதசி என்றும் கூறுவர். இந்த ஏகாதசியன்று ஒருவர் விசேஷமாக பத்மநாபரை வணங்க வேண்டும். இந்த ஏகாதசி மேலுலக சுகங்களையும் முக்தியையும் மற்றும் ஒருவர் வேண்டிய பலன்களையும் கொடுக்கிறது. பகவான் விஷ்ணுவின் ...
Indira Ekadashi (Tamil) / இந்திரா ஏகாதசி

Indira Ekadashi (Tamil) / இந்திரா ஏகாதசி

ஏகாதசி
இந்திரா ஏகாதசி பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! கிருஷ்ணா ஓ! மதுசூதனா! ஓ! மது என்ற அரக்கனை கொன்றவரே! புரட்டாசி மாத தேய்பிறையில் (செப்டம்பர்/ அக்டோபர்) தோன்றக் கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? இந்த ஏகாதசியை அனுஷ்டிக்கும் வழிமுறைகள் யாவை? இதை அனுஷ்டிப்பதால் ஒருவர் அடையும் பலன்கள் யாவை? பகவான் கிருஷ்ணர், பதிலளித்தார். இந்த புனிதமான ஏகாதசியின் பெயர் இந்திரா ஏகாதசி. இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவரின் எல்லா பாவ விளைவுகளும் அழிக்கப்படும் மற்றும் இழிவடைந்த தன் முன்னோர்கள் விடுதலை பெறுவர். ஓ! மன்னா! சத்ய யுகத்தில் இந்திரசேனா என்ற ஒரு மன்னர் வாழ்ந்து வந்தார். அவர் தன் எதிரிகளை வெல்வதில் சாமர்த்தியமானவர். அவர் மாஹிஸ்மதிபுரி என்ற தன் இராஜ்ஜியத்தை செழிப்புட...
இவுலகத்தின் துல்லியமும், நேர்த்தியும் யார் தந்தது?

இவுலகத்தின் துல்லியமும், நேர்த்தியும் யார் தந்தது?

வாழ்க்கை தத்துவம், New Posts
` இதில் குறிப்பாக அமெரிக்காவின் லீஹை யுனிவர்சிட்டியின் பேராசிரியர் 'மைக்கேல் பெஹே' எனும் விஞ்ஞானி தனது உலகப்புகழ்பெற்ற "டார்வின்ஸ் பிளாக்பாக்ஸ்" எனும் புத்தகத்தில் இவ்வுலகம் தானாகத் தோன்றியது என்று கூறுவதை கடுமையாக கண்டித்துள்ளார். இதில் அவர் பல நடைமுறை உதாரணங்களை மேற்கோள் காட்டுகிறார். அதாவது, நாம் ஒரு புல்லை செதுக்கும் இயந்திரத்தை (Lawn Mower) எடுத்துக் கொள்வோம். அந்த இயந்திரம் இயங்குவதற்கு பெட்ரோல் மற்றும் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. பெட்ரோல் மற்றும் ஆக்ஸிஜன் இரண்டும் சேர்ந்து எரிந்து அந்த இயந்திரத்தை இயக்க வைக்கிறது. இப்போது ஒருவர் கூறலாம், "இந்த இயந்திரம் இயங்க வேண்டுமானால் எலக்ட்ரான் சார்ஜ் (electron charge) வேறுபடாமல் இருக்க வேண்டும். எரிபொருள் மற்றும் ஆக்ஸிஜனின் கெமிகல் ரியாக்டிவிட்டி சரியாக இருக்க வேண்டும். இவையெல்லாம் சரியாக இல்லையென்றால் வேலை செய்யாது' என்று. இதற்கு...
செய்யும் தொழிலை உன்னதமானதாக மாற்றுதல் எவ்வாறு? / How to make a profession noble?

செய்யும் தொழிலை உன்னதமானதாக மாற்றுதல் எவ்வாறு? / How to make a profession noble?

ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
சாதாரண மக்களால் செய்யப்படும் செயலுக்கும் பக்தனால் செய்யப்படும் செயலுக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் ஓர் உரையாடல். சீடன்: நாம் பற்றற்று இருக்க வேண்டும் என பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்லும்போது என்ன நோக்கத்தோடு சொல்கிறார்? ஸ்ரீல பிரபுபாதர்: நாம் கிருஷ்ணருக்கு சேவை செய்வதை மட்டுமே விரும்ப வேண்டும் என்ற பொருள்பட சொல்கிறார். ந தனம் ந ஜனம் ந ஸுந்தரீம் கவிதாம் வா ஜகத் ஈஸ காமயே, "எனக்கு பொருள் தேவையில்லை. சீடர்கள் தேவையில்லை, அழகான பெண்கள் தேவையில்லை. என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். அப்போது அவருக்கு என்ன வேண்டுமென கோருகிறார்? "நான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டும். என்கிறாரே தவிர, “எனக்கு எதுவும் தேவையில்லை. நான் ஒன்றுமில்லாத சூன்யமாக விரும்புகிறேன் என்று அவர் கூறவில்லை. சீடன்: பக்தரல்லாதவர்கூட தன்னுடைய தேவை என்ன என்பதை அறிந்துள்ளான். ஆனால் கிருஷ்...
திருநாமத்தின் மகிமை

திருநாமத்தின் மகிமை

ஹரி நாம மகிமை
கோலோகத்திலிருந்து வரக்கூடிய ஹரி நாமம் வழங்கியவர்: தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி இந்த வாரம். திருநாம வாரம். இந்தத் திருநாமம் பகவானிடமிருந்து வேறுபட்டதல்ல என்பதால். விருந்தாவனத்திலுள்ள பக்தர்கள் அனைவரும் கிருஷ்ணரின் திருநாமத்தை எப்போதும் உச்சரிக்கின்றனர். கோபியர்கள் ராஸ் நடனத்தின்போது ஹரே கிருஷ்ண மந்திரத்தை உரைக்கின்றனர். அன்னை யசோதை தயிர் கடையும்போது கிருஷ்ணரின் நாமத்தை உச்சரிக்கிறாள். விருந்தாவனவாசிகள் அனைவரும் கிருஷ்ண நாமத்தை எப்போதும் உரைக்கின்றனர். எனவே, இந்த கிருஷ்ண நாம ஸங்கீர்த்தனம், கோலோகேர ப்ரேம தன ஹரி-நாம ஸங்கீர்தன, கோலோக விருந்தாவனத்திலிருந்து கிருஷ்ண பிரேமையைக் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. கிருஷ்ண மந்த்ர ஹைதே ஹபே ஸம்ஸார மோசனகிருஷ்ண-நாம ஹைதே பாபே கிருஷ்ணேர சரண “கிருஷ்ண நாமத்தை உச்சரிப்பதால் பௌதிக வாழ்விலிருந்து எளிதாக விடுதலை பெற முடியும். உண்மையில், ஹரே கிருஷ்ண மந்திரத்...
எல்லோருக்கும் வேலை கிடைக்க வேண்டும்

எல்லோருக்கும் வேலை கிடைக்க வேண்டும்

ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
நெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது சீடர்களில் ஒருவருடன் 1974ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரத்தில் பரிமாறிக் கொண்ட கருத்துகள் சீடர்: சமீபத்தில் இந்தியாவிலுள்ள ஓர் அரசியல்வாதி, தமது சொற்பொழிவில், இந்திய மக்களில் எட்டு சதவிகிதத்தினர் கிராமப்புறங்களில் வசிப்பதாகவும். விளைநிலங்களில் தொழில் நுட்பத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும். கோதுமையைக் கையால் அறுவடை செய்வதற்குப் பதிலாக அறுவடை இயந்திரத்தையும் காளைகளைப் பூட்டி ஏர் உழுவதற்குப் பதிலாக டிராக்டர்களையும் பயன்படுத்த வேண்டுமென்றும் கூறியுள்ளார். ஸ்ரீல பிரபுபாதர்: இந்தியாவிலுள்ள பலர் ஏற்கனவே வேலையின்றி இருப்பதால், அதிகமான இயந்திரங்களைப் புகுத்துவது நல்ல திட்டமல்ல. நூறு மனிதர்களால் செய்யப்படும் ஒரு வேலையை இயந்திரத்தைக் கொண்டு ஒரு மனிதன் செய்துவிடமுடியும். ஆனால் மீதமுள்ளமனிதர்கள் வேலை...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Join