ஆம். ஞான யோகம் பக்தி யோகத்தின் ஒரு படியே. பகவத்கீதை 7.19, “பற்பல பிறவிகளுக்குப் பின், ஞானியும், ஸர்வமும் வாசுதேவன் என்று சரணடைகிறான்” என்று குறிப்பிடுவது. ஞானி இறுதியில் வந்தடைய வேண்டிய இடம், பகவான் நாமம் கூறி பக்தி செயவதே என்பதை உறுதிப்படுத்துகிறது.
பிரம்மாவின் நாங்கு குமாரர்களான சனகர், சனாதனர், சனந்தர், சனத்குமாரர் ஆகிய நால்வரும், நவயோகேந்திரர்களும் மற்ற சுகரிஷியும் ஆரம்பத்தில் ஞான யோகிகளாக இருந்தனர். ஆனால் இறுதியில் பக்தியோகிகளாக மாறி வாழ்வின் பரிபூர்ண நிலையை அடைந்தனர். ஆனால் பக்தியோகிகள், ஞானிகளாக மாறிய வரலாறு இல்லை. ஞான யோகமானது, பக்தி யோகத்திற்கு முந்தைய படியாகும்.