ஸ்ரீ மத்வாச்சார்யர் கிபி 1238 இல் தென்னிந்தியாவில், கர்நாடகாவின் உடுப்பிக்கு அருகில் தோன்றினார். அவர் வாயுவின் (காற்றின் கடவுள்) அவதாரமாகக் கருதப்பட்டார். அவர் வழக்கத்திற்கு மாறாக வலுவான உடலமைப்பு மற்றும் அசாதாரண அறிவுசார் ஆற்றலைக் கொண்டிருந்தார். ஒருமுறை மத்வாச்சாரியாரின் சந்நியாச சீடரான சத்ய தீர்த்தரை கடுமையான வங்காளப் புலி தாக்கியது. மத்வாச்சாரியார் புலியுடன் மல்யுத்தம் செய்து அதன் வாலை கால்களுக்கு இடையில் வைத்து அனுப்பி வைத்தார். மத்வாச்சார்யர் ஐந்து வயதில் தீக்ஷையையும், பன்னிரெண்டாவது வயதில் சன்யாசத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். சங்கரரின் மாயாவாத தத்துவத்தை எதிர்த்துப் போராடி தோற்கடிக்கும் நோக்கத்துடன் அவர் தோன்றினார். வேதாந்த-சூத்திரத்தின் தூய விளக்கத்தை அளித்ததன் மூலம் அவர் தூய இறைசக்தியை ஊக்குவித்தார். அவர் தனது புதுமையான சாஸ்திர விளக்கத்திற்கு த்வைத-த்வைத-வாத என்று பெயரிட்டார்.
மாயாவாதத்தை பரப்புவதற்கு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த சங்கராச்சாரியாருக்குப் பிறகு, மத்வாச்சாரியாரும் இந்தியா முழுவதும் விஷ்ணு பக்தியைப் போதித்தார். அவர் எண்ணற்ற ஜைனர்கள், பௌத்தர்கள், மாயாவாதிகள், நாத்திகர்கள், தர்க்கவாதிகள் மற்றும் அஞ்ஞானவாதிகளை தோற்கடித்தார்.
ஸ்ரீல வியாசதேவரை சந்திக்கும் நம்பிக்கையுடன் மத்வாச்சாரியார் இமயமலை வரை நடந்தார். வியாசதேவர் அவருக்கு அஷ்டமூர்த்தி என்று அழைக்கப்படும் சாலக்கிராம ஷிலாவை அளித்தார், அவருடைய பகவத் கீதை விளக்கத்தை அங்கீகரித்தார், மேலும் மத்வாச்சாரியாருக்கு சாஸ்திரங்களின் ஆழமான உணர்தல்களுடன் ஆசீர்வதித்தார்.

உடுப்பியில் மத்வாச்சாரியார் மாடு மேய்க்கும் தடியை ஏந்தியபடி தனியே நிற்கும் அழகிய கோபால விக்ரஹத்தை நிறுவினார். இந்த கோபால விக்ரஹம் கோபி-சந்தன (புனித களிமண்) துண்டில் இருந்து வெளிப்பட்டது. அவர் “உடுப்பி கிருஷ்ணருக்கு” அன்புடன் சேவை செய்ய எட்டு மடங்களை (கோயில்கள்) நிறுவினார். ஒவ்வொரு மடத்தின் சந்நியாசத் தலைவர்களும் கிருஷ்ண விக்ரஹத்தை நேரம் தவறாமை மற்றும் குற்றமற்ற தனிப்பட்ட நடத்தை ஆகியவற்றுடன் வழிபடுகின்றனர். ஒவ்வொரு ஏகாதசியிலும் அவர்கள் நிர்ஜால விரதம் (உணவு மற்றும் தண்ணீர் எடுத்துக்கொள்ளாமள்) கடைப்பிடிப்பார்கள்.
கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயம் மத்வர்களிடம் இருந்து உருவானது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் அவரது சீடர்களும் தங்கள் தத்துவத்தை தொகுக்கும் முன் மத்வாவின் படைப்புகளை முழுமையாக ஆய்வு செய்தனர். சத் சந்தர்ப்பத்திற்காக ஸ்ரீ ஜீவ கோஸ்வாமி மத்வாவின் எழுத்துக்களில் இருந்து பெரிதும் ஈர்த்தார். ஜீவா கோஸ்வாமி மத்வாவின் பகவத்-பர்யாவில் அசிந்த்ய-பேத-அபேத தத்துவத்தின் கௌடியா தத்துவத்தைக் கண்டறிந்தார். ஸ்ரீ சைதன்யார் தாமே மத்வா பிரிவினரின் இடமான உடுப்பிக்கு விஜயம் செய்தார் அங்கு பகவான், ஹரி நாம சங்கீர்த்தனத்தை அவர்களின் பிரிவில் அறிமுகப்படுத்தினார்.
மத்வர்களும் கௌடியர்களும் ஒரே மாதிரியான பல தத்துவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். குருவின் (குருபாதாஷ்ரயா) தாமரை பாதங்களில் சரணடைவது அவசியம் என்று இருவரும் கருதுகின்றனர். சூத்ர பாஷ்யத்தில், மத்வாச்சார்யர்” பிருஹத் தந்திரம்” மற்றும் “மஹாசம்ஹிதையை” மேற்கோள் காட்டுகிறார், ஒரு சீடர் “போலி குருவை” நிராகரிக்கலாம். பின்னர் அவர் மற்றொரு தகுதியான தன்னுனர்வு பெற்ற நபரை தனது குருவாக ஏற்றுக்கொள்ளலாம்.
பிரமேய-ரத்னவல்லியில், ஸ்ரீ சைதன்யா மற்றும் மத்வாவின் போதனைகள் இரண்டிற்கும் பொதுவான ஒன்பது கொள்கைகளை ஸ்ரீ பாலதேவ வித்யாபூஷணர் சுருக்கமாகக் கூறினார். வைஷ்ணவ சித்தாந்த மாலாவில், ஸ்ரீல பக்திவினோத தாகூரர், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, ஒன்பது வழிமுறைகளைக் கவனமாகக் கடைப்பிடிக்குமாறு அனைத்து கௌடிய வைஷ்ணவர்களுக்கும் கட்டளையிட்டார் என்று கூறுகிறார்.
ஸ்ரீ மத்வாச்சாரியாரின் ஒன்பது போதனைகள்
(1) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மட்டுமே பரம முழுமையான உண்மை
(2) அவர் அனைத்து வேதங்களின் மூல பொருள் (உண்மை).
(3) பிரபஞ்சம் உண்மையானது, சத்யா.
(4) ஈஸ்வரன் (கடவுள்), ஜீவா (ஆன்மா) இவ்விரு பொருளுக்கு இடையிலான வேறுபாடுகள் உண்மையானவை.
(5) ஜீவாத்மாக்கள் இயல்பிலேயே பரமபுருஷ பகவான் ஹரியின் சேவகர்கள். (6) ஜீவாக்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன; விடுதலை பெற்றவர்கள் மற்றும் மாயையில் உள்ளவர்கள்.
(7) விடுதலை (மோட்சம்) என்பது பகவான் கிருஷ்ணரின் தாமரை பாதங்களை அடைவது, வேறுவிதமாகக் கூறினால், பரமாத்மாவுக்கு சேவை செய்யும் நித்திய உறவில் நுழைவது.
(8) கிருஷ்ணருக்குத் தூய பக்தித் தொண்டு செய்வதே இந்த விடுதலையை அடைய ஒரே வழி.
(9) பிரத்யக்ஷா (நேரடியான கருத்து), அனுமானா (அனுமானம் அல்லது தர்க்கம்), சப்தா (ஆன்மிக ஒலி அல்லது வேத அதிகாரம்) மூலம் உண்மையை அறியலாம்.
ஸ்ரீ மத்வாச்சார்யார் ராதா-கோவிந்தரின் நித்திய பிருந்தாவன தாமில் மாதவி-கோபியாக சேவைசெய்கிறார்.
hare krishna
very interesting article
hare krishna
Awesome information
ஹரே கிருஷ்ணா