Friday, August 22

Author: பக்தி யோகம் குழு

இருப்பவனின் கடமை என்ன? இறப்பவனின் கடமை என்ன ? / Duty of  a Person

இருப்பவனின் கடமை என்ன? இறப்பவனின் கடமை என்ன ? / Duty of a Person

ஆன்மீகப் பதிவு, பக்தி யோக - Tips, வாழ்க்கை தத்துவம்
இருப்பவனின் கடமை என்ன? இறப்பவனின் கடமை என்ன ?உயிர் வாழ்பவனின் கடமை என்ன? உயிர் பிரியப் போகிறவனின் கடமை என்ன? என்ற இரண்டு கேள்விகள் மனித சமுதாயத்திற்கு மிகவும் ஆர்வத்தை தூண்டும் இரு கேள்விகளாகும். இந்த இரண்டு கேள்விகளே ஸ்ரீமத் பாகவதத்தின் மூல அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.பரிக்ஷித்து சாபம் பெறுதல்"மரியாதை இன்றி என்னுடைய தந்தையை (கழுத்தில் செத்த பாம்பை மாலையாக இட்டு) அவமதித்த குலத்துரோகியை (பரிக்ஷித்து மகாராஜனை), இன்றிலிருந்து ஏழாவது நாள் தக்ஷகன் கடிக்கட்டும்'' என்று சமீக மகரிஷியின் புத்திரனான சிறுவன் ஸ்ருங்கி தன் தவ வலிமையால் பரிக்ஷித்து மகாராஜனுக்கு சாபம் இட்டான்.ஸ்ருங்கி இட்ட சாபத்தால் தக்ஷகன் தன்னை தீண்டப் போவதையும், அதனால் தனக்கு திடீர் மரணம் விளையப் போவதையும் அறிய வந்த பரிக்ஷித்து மகாராஜா, தான் உலகைத் துறந்து விடுவதற்கு இதுவே சரியான காரணமாக இருக்கப் போகிறது என்பதை உணர...
Jayapataka Swami Life History (Tamil) / ஜெயபதாக ஸ்வாமி மஹராஜின் வாழ்க்கை வரலாறு

Jayapataka Swami Life History (Tamil) / ஜெயபதாக ஸ்வாமி மஹராஜின் வாழ்க்கை வரலாறு

ஆன்மீகப் பதிவு, வாழ்க்கை வரலாறு
https://youtu.be/N-gEP51ndCE ஸ்ரீல ஜெயபதாக ஸ்வாமி பிரணாம மந்திரம்"நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண பிரேஸ் தாய பூதலேஸ்ரீமதே ஜெயபதாக ஸ்வாமின் இதி நாமினே" பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவரும், அவரது தாமரைப் பாதங்களில் தஞ்சமடைந்தவருமான, தவத்திரு.ஜெயபதாக ஸ்வாமி அவர்களுக்கு எனது மரியாதை கலந்த வணக்கத்தை செலுத்துகின்றேன்.-----------------------------------------"நம ஆச்சார்ய பாதாய நித்தாய் கிருப பிரதாயினேகெளர கத தாம தாய நகரக் கிராம தாரினே" ‘நான் உங்கள் நாட்டிற்கு தூதுவனாக சென்றேன் மற்றும் மிகச்சிறந்த ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரையும் கிருஷ்ணர் என்னிடம் அனுப்பிவைத்தார்.” ஸ்ரீல பிரபுபாதர் ஸ்ரீ கிருஷ்ணரால் ஸ்ரீல பிரபுபாதரிடம் அனுப்பிவைக்கப்பட்ட மிகச்சிறந்த ஓர் ஆத்மாவே கடந்த 33 வருடங்களாக ஸ்ரீல பிரபுபாதரின் சேவையில் ‘சுய நலமற்ற சேவகராக” இடையறாது பணியாற்றிக் கொண்டிருக்கும் தவத்திரு த்ரிதண்டி பிக...
Sri Gauranga Mahaprabhu gave darshan to Sri Ramanujacharya – Tamil / ஸ்ரீ வைகுண்டபுரம், ஸ்ரீ கௌரசுந்தரர் இராமனுஜருக்கு காட்சியளித்தல்.

Sri Gauranga Mahaprabhu gave darshan to Sri Ramanujacharya – Tamil / ஸ்ரீ வைகுண்டபுரம், ஸ்ரீ கௌரசுந்தரர் இராமனுஜருக்கு காட்சியளித்தல்.

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஆன்மீகப் பதிவு
எல்லாபுகழும் கௌரங்கர் மற்றும் பஞ்சதத்துவங்களுக்கே! எல்லாப்புகழும் ஸ்ரீசைதன்ய மகாபிரபுவின் வாசஸ்தலமான நவத்வீபதாமத்திற்கே!வைகுண்ட புரத்திற்கு வந்தடைந்த நித்யானந்த பிரபு, ஸ்ரீ ஜீவரை மென்மையான புன்னகையுடன் நோக்கினார். "நவத்வீபத்தின் எட்டு இதழ்களின் ஒருபகுதி இந்த வைகுண்டபுரமாகும். சந்தேகத்திற்கிடமின்றி கேட்பாயாக ஸ்ரீமந்நாராயணரின் வாசஸ்தலமான வைகுண்டம் ஆன்மீக வானத்தில்  வ்ரஜா நதிக்கு அப்பால் அமைந்துள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் நீளா தேவியாகிய தமது அந்தரங்க சக்திகளால் சேவை சாதிக்கப்படும் பகவான் நாராயணரின் இருப்பிடத்தில் மாயாவால் ஒருபோதும் நுழையவே முடியாது. இந்த ஆன்மீக தாமத்தின் பரப்பிரம்மனிலிருந்து வெளிவரும் ஜோதியே பிரம்மஜோதியாக பிரகாசிக்கின்றது. பௌதீக நோக்கில் காணும் மக்களுக்கு பௌதீக உலகாகவே காட்சியளிக்கும். ஆனால் ஒருமுறை நாரதர் தனது ஆன்மீக பார்வையுடன் நாராயணரை நோக்கிய போது இத்தாமத்தில...
Sri Madhvacharya (Tamil) / ஸ்ரீ மத்வாச்சார்யர்

Sri Madhvacharya (Tamil) / ஸ்ரீ மத்வாச்சார்யர்

ஆன்மீகப் பதிவு, வாழ்க்கை வரலாறு
ஸ்ரீ மத்வாச்சார்யர் கிபி 1238 இல் தென்னிந்தியாவில், கர்நாடகாவின் உடுப்பிக்கு அருகில் தோன்றினார். அவர் வாயுவின் (காற்றின் கடவுள்) அவதாரமாகக் கருதப்பட்டார். அவர் வழக்கத்திற்கு மாறாக வலுவான உடலமைப்பு மற்றும் அசாதாரண அறிவுசார் ஆற்றலைக் கொண்டிருந்தார். ஒருமுறை மத்வாச்சாரியாரின் சந்நியாச சீடரான சத்ய தீர்த்தரை கடுமையான வங்காளப் புலி தாக்கியது. மத்வாச்சாரியார் புலியுடன் மல்யுத்தம் செய்து அதன் வாலை கால்களுக்கு இடையில் வைத்து அனுப்பி வைத்தார். மத்வாச்சார்யர் ஐந்து வயதில் தீக்ஷையையும், பன்னிரெண்டாவது வயதில் சன்யாசத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். சங்கரரின் மாயாவாத தத்துவத்தை எதிர்த்துப் போராடி தோற்கடிக்கும் நோக்கத்துடன் அவர் தோன்றினார். வேதாந்த-சூத்திரத்தின் தூய விளக்கத்தை அளித்ததன் மூலம் அவர் தூய இறைசக்தியை ஊக்குவித்தார். அவர் தனது புதுமையான சாஸ்திர விளக்கத்திற்கு த்வைத-த்வைத-வாத ...
Azhagia Manavalar Temple-History (Tamil) /  உறையூர் என்னும் திருக்கோழி

Azhagia Manavalar Temple-History (Tamil) / உறையூர் என்னும் திருக்கோழி

108 Divya Desham History (Tamil)
கோழியும் கடலும் கோயில் கொண்டகோவலரே யொப்பர் குன்றமன்னபாழியும் தோழுமோர் நான்குடையர்பண்டிவர் தம்மையுங் கண்டறியோம்வாழியரோ விவர் வண்ண மென்னில்மாகடல் போன்றுளர் கையில் வெய்யஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றிஅச்சோ ஒருவர் அழகியவா (1762)- பெரிய திருமொழி 9-2-5என்று நாகபட்டினம் (திருநாகை) சுந்தர்ராஜப் பெருமாளைமங்களாசாசனம் செய்யும் திருமங்கையாழ்வார். அப்பெருமானின்பேரழகானது திருக்கோழியில் கோயில் கொண்டுள்ள பெருமானின் அழகுக்கு ஒப்பானதாகும் என்று கூறுகிறார்.எனவே நாகை எம்பெருமானின் பேரழகு இப்பெருமானின் அழகுக்கு ஒப்பு என்று கூறுவதால் இவரே அவரினும் பேரழகு பொருந்தியவராகி, தனக்கு ஒப்புமை கூறக்கூடியவர்களைத்தான் பெற்றிருக்கிறாரேயொழிய தனக்கு மிக்காரில்லை யென்னு மாற்றான் செம்மாந்து திகழ்கிறார்.இது நான் கூறும் கருத்தல்ல. ஆழ்வார்கள் விஷயம். இத்தகைய பேரழகு கொண்டுள்ள திருக்கோழி என்னும் உறையூர்திருச்சி நகருக்குள...
Kuralin Kural – Paramatma (Tamil) / குறளின் குரல் – பரமாத்மா

Kuralin Kural – Paramatma (Tamil) / குறளின் குரல் – பரமாத்மா

குறளின் குரல்
நம்முடன் சேர்ந்து, நமது இதயத்தில் இறைவன் பரமாத்மாவாக இருக்கிறார் என்பதை பகவத் கீதையின் பதின்மூன்று, பதினைந்தாவது அத்யாயங்கள் உறுதி செய்கின்றன."மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ் வார்"-  (திருக்குறள் 3)"இதயமாகிய தாமரை மலரில் இருப்பவனின் மாட்சிமை பொருந்திய அடிகளைச் சேர்ந்தவர் எல்லா உலகிற்கும் மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார்".எல்லா உலகங்கட்கும் அவைகளில் உள்ள உயிர்கட்கும் காரணமான முழுமுதற்கடவுளாகிய ஆதி பகவான் இதயத்தியிருக்கிறான் என்பதை வள்ளுவர் மூன்றாவது குறளில் உறுதி செய்கின்றார். அந்தர்யாமியாக இருக்கும் இறைவனைப் பரமாத்மா என்று வேத இலக்கியங்கள் கூறுகின்றன. இங்கே வீடு என்பது நிலையான அழிவற்ற உல்கமாகிய வைகுந்தத்தைக் குறிக்கிறது.உபத்ரஷ்டானு மந்தா ச பர்தா போக்தா மஹேஷ்வர:பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹே ஸ்மின் புருஷ: பர:"*(பகவத் கீதை 13.23)இருப்ப...
Thiruvarangam / Srirangam History (Tamil) / திருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கம்

Thiruvarangam / Srirangam History (Tamil) / திருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கம்

108 Divya Desham History (Tamil), Posts
இரும்பனன் றுண்ட நீரும்போதருங் கொள்க, என்றன் அரும்பிணி பாவ மெல்லாம்அகன்றன என்னை விட்டுசுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்டகரும்பினைக் கண்டு கொண்டென்கண்ணினை களிக்கு மாறே-திருக்குறுந்தாண்டகம் 13.எந்நேரமும் வண்டுகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் அழகிய சோலைகள் சூழ்ந்த அரங்கத்தில் பள்ளிகொண்ட கரும்பாகிய என் அரங்கனைக் கண்ட மாத்திரத்தில், சூடான இரும்பில் பட்ட நீர் எவ்வாறு வேகமாக உட்கவரப்பட்டு காணாமல் போகிறதோ அதுபோல், என் பாவமெல்லாம் என்னைவிட்டு பறந்தோடிவிட்டது என்று திருமங்கையாழ்வாரால் பாடிப் பரவசித்து மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் இன்றைய இந்தியாவிலேயே மிகச் சிறப்பான தலமாகும்.ஸ்ரீரங்கம் ரயில்வே நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீட்டருக்குக் குறைவான தூரமே, திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தூரமாகும்.திருமாலின் திவ்ய தேசங்கள் 108ல் இத்திருவரங்கம் தலையாயது சோழநாட்ட...
A quick fall by unwanted thinking (Tamil) / வேண்டாத சிந்தனையால் வரும் விரைவான வீழ்ச்சி

A quick fall by unwanted thinking (Tamil) / வேண்டாத சிந்தனையால் வரும் விரைவான வீழ்ச்சி

மஹாபாரதம்
ஒரு விஷயத்தை சிந்திப்பதால் அதில் பற்று உண்டாகிறது. அப்பற்றினால் அதை அனுபவிக்கும் ஆசை உண்டாகிறது. அவ்வாசை நிறைவேறாத போது கோபம் உண்டாகிறது. கோபத்தால், மதிமயக்கம் ஏற்படுகிறது. மதிமயக்கத்தால் நினைவு நிலை இழப்பும் உருவாகிறது. இதனால் புத்தி நாசமாக, புத்திநாசத்தால் ஒருவன் முற்றிலும் வீழ்ச்சி அடைகிறான்.- பகவத்கீதை (2.62-63)த்யாயதோ விஷயான் பும்ஸ: ஸங்கஸ் தேஷூபஜாயதே ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: காமாத் க்ரோதோ (அ) பிஜாயதே ரோதாத் பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத் ஸ்ம்ருதி-விப்ரம: ஸ்ம்ருதி - ப்ரம்ஷாத் புத்தி-நாஷோ புத்தி-நாஷாத் ப்ரணஷ்யதிஆதாரம்: மஹாபாரதம்ஒருநாள் பஞ்சபாண்டவர்கள், வனவாசத்தின்போது காம்யக வனத்தில் ஆஸ்ர மத்தில் திரௌபதியை தனியாக விட்டு விட்டு உணவு தேடி காட்டிற்குள் சென்றனர். அந்த சமயம், சிந்து தேச மன்னனின் மகனான ஜெயத்ரதன், சால்வ மன்னனின் மகளை மணமுடிப்பதற்காக, நன்கு உடை உடுத்தி அந்த காம்யக வனத்தின் வழி...
மோக்ஷத ஏகாதசி

மோக்ஷத ஏகாதசி

ஆன்மீகப் பதிவு, Videos, ஏகாதசி
https://youtu.be/wN9fehB9AAU மோக்ஷத ஏகாதசி மகிமைகுருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணரால் அர்ஜுனருக்கு கீதை சொல்லப்பட்ட நாள் இது என்பது மோக்ஷத ஏகாதசிக்கு மற்றொரு சிறப்பு.மார்கழி மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசியின் மகிமையை விளக்குமாறு கிருஷ்ணரை வேண்டுகிறார் யுதிஷ்டிரர். அந்த ஆர்வமே பாவங்களைப் போக்கி மோக்ஷம் தரவல்லது என்கிறார் கிருஷ்ணர்.இப்புனித நாளில் தூபம், நெய் தீபம், நறு மலர்கள், மற்றும் துளசி மஞ்சரிகளைக் கொண்டு தாமோதரரை வணங்குதல் வேண்டும்.இதன் மகத்துவத்தைக் கேட்போரது இறந்துபோன மூதாதையர் நரகத்திற்குச் சென்றோராயினும் மீண்டு சுவர்கலோகம் செல்வர்.சம்பக நகரம் எனும் அழகிய நகரை வைக்காணசா என்னும் ஒரு பக்தி நிறைந்த மன்னன் ஆண்டு வந்தான். இறந்து போன அவன் தந்தை நரகத்தில் மிகுந்த வேதனை அனுபவிப்பதுபோல் அவனுக்கு ஒரு நாள் கனவு வந்தது. துக்கத்தால் நெகிழ்ந்து போன மன்னன் தன் ஆலோசகர்களான அ...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.