
Azhagia Manavalar Temple-History (Tamil) / உறையூர் என்னும் திருக்கோழி
கோழியும் கடலும் கோயில் கொண்டகோவலரே யொப்பர் குன்றமன்னபாழியும் தோழுமோர் நான்குடையர்பண்டிவர் தம்மையுங் கண்டறியோம்வாழியரோ விவர் வண்ண மென்னில்மாகடல் போன்றுளர் கையில் வெய்யஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றிஅச்சோ ஒருவர் அழகியவா (1762)- பெரிய திருமொழி 9-2-5
என்று நாகபட்டினம் (திருநாகை) சுந்தர்ராஜப் பெருமாளைமங்களாசாசனம் செய்யும் திருமங்கையாழ்வார். அப்பெருமானின்பேரழகானது திருக்கோழியில் கோயில் கொண்டுள்ள பெருமானின் அழகுக்கு ஒப்பானதாகும் என்று கூறுகிறார்.
எனவே நாகை எம்பெருமானின் பேரழகு இப்பெருமானின் அழகுக்கு ஒப்பு என்று கூறுவதால் இவரே அவரினும் பேரழகு பொருந்தியவராகி, தனக்கு ஒப்புமை கூறக்கூடியவர்களைத்தான் பெற்றிருக்கிறாரேயொழிய தனக்கு மிக்காரில்லை யென்னு மாற்றான் செம்மாந்து திகழ்கிறார்.
இது நான் கூறும் கருத்தல்ல. ஆழ்வார்கள் விஷயம். இத்தகைய பேரழகு கொண்டுள்ள திருக்கோழி என்னும் உறையூர்திருச்சி நகரு...