Saturday, April 20

மஹாபாரதம்

A quick fall by unwanted thinking (Tamil) / வேண்டாத சிந்தனையால் வரும் விரைவான வீழ்ச்சி

A quick fall by unwanted thinking (Tamil) / வேண்டாத சிந்தனையால் வரும் விரைவான வீழ்ச்சி

மஹாபாரதம்
ஒரு விஷயத்தை சிந்திப்பதால் அதில் பற்று உண்டாகிறது. அப்பற்றினால் அதை அனுபவிக்கும் ஆசை உண்டாகிறது. அவ்வாசை நிறைவேறாத போது கோபம் உண்டாகிறது. கோபத்தால், மதிமயக்கம் ஏற்படுகிறது. மதிமயக்கத்தால் நினைவு நிலை இழப்பும் உருவாகிறது. இதனால் புத்தி நாசமாக, புத்திநாசத்தால் ஒருவன் முற்றிலும் வீழ்ச்சி அடைகிறான்.- பகவத்கீதை (2.62-63)த்யாயதோ விஷயான் பும்ஸ: ஸங்கஸ் தேஷூபஜாயதே ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: காமாத் க்ரோதோ (அ) பிஜாயதே ரோதாத் பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத் ஸ்ம்ருதி-விப்ரம: ஸ்ம்ருதி - ப்ரம்ஷாத் புத்தி-நாஷோ புத்தி-நாஷாத் ப்ரணஷ்யதி ஆதாரம்: மஹாபாரதம் ஒருநாள் பஞ்சபாண்டவர்கள், வனவாசத்தின்போது காம்யக வனத்தில் ஆஸ்ர மத்தில் திரௌபதியை தனியாக விட்டு விட்டு உணவு தேடி காட்டிற்குள் சென்றனர். அந்த சமயம், சிந்து தேச மன்னனின் மகனான ஜெயத்ரதன், சால்வ மன்னனின் மகளை மணமுடிப்பதற்காக, நன்கு உடை உடுத்தி அந்த காம்யக வனத...
Draupadi (Tamil) / திரௌபதி

Draupadi (Tamil) / திரௌபதி

மஹாபாரதம்
துருபத மகாராஜனின் மிகவும் கற்புடைய மகளான இவள், இந்திரனின்மனைவியாகிய சசிதேவியின் பகுதி அம்மாவாள். துருபத மகாராஜன் யஜ முனிவருடையகண்காணிப்பின் கீழ் ஒரு பெரும் யாகத்தை நடத்தினார். அவரது முதல் நிவேதனத்தால்திருஷ்டத்யும்னனும், இரண்டாவது நிவேதனத்தால் திரௌபதியும் பிறந்தனர். எனவே இவள்திருஷ்டத்யும்னனின் தங்கையாவாள். இவளுக்குப் பாஞ்சாலி என்ற பெயரும் சூட்டப்பட்டது.அவளைத் திருமணம் செய்து கொண்ட பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொருவரும் அவள்மூலமாக ஒவ்வொரு மகனைப் பெற்றனர். யுதிஷ்டிர மகாராஜன் பிரதிபித் எனும் மகனையும்,பீமசேனர் சுதசோமர் என்ற மகனையும், அர்ஜுனன் சுருதகீர்த்தியையும், நகுலன்சதானீகரையும் மற்றும் சஹாதேவன் சுருதகர்மாவையும் பெற்றனர். இவள் இவளதுமாமியாரான குந்திதேவிக்கு இணையான பேரழகு வாய்ந்தவள் என்றுவர்ணிக்கப்படுகிறாள். இவள் பிறக்கும் சமயத்தில், இவளை கிருஷ்ணா என்று அழைக்கவேண்டுமென்று ஓர் அசரீரி ஒலித்தது, இவள்...
Kunti (Tamil) / ப்ருதா (குந்தி )

Kunti (Tamil) / ப்ருதா (குந்தி )

மஹாபாரதம்
இவள் சூரசேன மகாராஜனின் மகளும், ஸ்ரீ கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரின்சகோதரியுமாவாள். பிற்காலத்தில் அவள் குந்திபோஜ மகாராஜனால் ஸ்வீகாரம் செய்துகொள்ளப்பட்டதால், குந்தி என்று அழைக்கப்பட்டாள். இவள் பரம புருஷ பகவானுடையவெற்றி தரும் ஆற்றலின் அவதாரமாவாள். உயர் கிரகங்களிலுள்ள ஸ்வர்க லோக வாசிகள்குந்திபோஜ மகாராஜனின் அரண்மனைக்குச் சென்று வருவது வழக்கம். அவர்களைவரவேற்று உபசரிக்கும் பொறுப்பு குந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. மிகச்சிறந்த யோகியானதுர்வாச முனிவருக்கும் அவள் பணிவிடை செய்தாள். அவளது விசுவாசமுள்ள சேவையில்திருப்தியடைந்த துர்வாச முனி அவளுக்கு ஒரு மந்திரத்தை அளித்தார். இதனால் அவளதுவிருப்பம் போல் எந்த தேவரையும் அவளால் அழைக்க முடியும். இம்மந்திரத்தைபரிசோதித்துப் பார்க்கும் எண்ணத்துடன் உடனே அவள் மந்திரத்தை உச்சரித்துசூரியதேவனை அழைத்தாள். சூரியதேவனும் உடனே தோன்றி அவளுடன் உறவு கொள்ளவிரும்பினார். அதை அவள் ம...
Gandhari (Tamil) / காந்தாரீ

Gandhari (Tamil) / காந்தாரீ

மஹாபாரதம்
இவர் உலக சரித்திரத்தில் கற்புக்கரசி எனும் புகழைப் பெற்றவளாவாள். இவள்காந்தார (இப்பொழுது கபுல் என்னும் இடத்திலுள்ள கந்தஹர்) ராஜனான சுபலமகாராஜனின் மகளாவாள். இந்துப் பெண்மணிகள் பொதுவாக ஒரு நல்ல கணவனைஅடைவதற்காக சிவபெருமானை வழிபடுகின்றனர். காந்தாரி சிவபெருமானைதிருப்திப்படுத்தினாள். இதனால் திருதராஷ்டிரர் ஒரு நிரந்தரக் குருடர் என்றபோதிலும்அவரை மணந்து, நூறு மகன்களைப் பெறும் வரத்தை சிவபெருமானிடமிருந்து அவள்பெற்றாள். தான் மணக்கப் போகும் கணவன் ஒரு குருடர் என்பதை அறிந்த காந்தாரி, தனதுவாழ்க்கைத் துணைவரைப் பின்பற்றும் நோக்கத்துடன் அவளும் ஒரு குருடியாக இருக்கமுடிவு செய்தாள். எனவே துணியால் கண்களைக் கட்டிக்கொண்ட காந்தாரி அவளது மூத்தசகோதரரான சகுனியின் வழிகாட்டலின்கீழ் திருதராஷ்டிரரை திருமணம் செய்துகொண்டாள். அவளது காலத்திலேயே அவள்தான் பேரழகியாகத் திகழ்ந்தாள்.பெண்மைக்குரிய குணங்களிலும் அதற்கு இணையான த...
Lord Krishna gives Memory & forgetfulness (Tamil) Story / நினைவோ, மறதியோ அளிப்பவர் கிருஷ்ணரே!

Lord Krishna gives Memory & forgetfulness (Tamil) Story / நினைவோ, மறதியோ அளிப்பவர் கிருஷ்ணரே!

மஹாபாரதம்
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டோமத்த: ஸ்ம்ருதிர் க்ஞானம் அபோஹனம் சவேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யோவேதாந்த-க்ருத் வேத-வித் ஏவ சாஹம் நான் எல்லாருடைய இதயத்திலும் வீற்றுள்ளேன், என்னிடமிருந்தே ஞாபகசக்தியும் அறிவும் மறதியும் உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் நானே. உண்மையில், வேதாந்தத்தை தொகுத்தவனும் வேதங்களை அறிபவனும் நானே.- பகவத் கீதை 15.15 குருக்ஷேத்திர யுத்தத்தின் பதினான்காம் நாளில் நடந்த நிகழ்ச்சி இது.  முந்தைய நாளில் அபிமன்யு கொல்லப்பட்டதால், ஐயத்ரதனை மறுநாள் சூரிய அஸ்தமனத்திற்குள் கொல்வதாக சபதம் எடுத்த அர்ஜூனன், கடுமையாக போர் செய்தான். கௌரவர் தரப்பிலும், துரோணர், கர்ணன் முதற்கொண்டு கடுமையாகப் போர் புரிந்தனர். ஆனால், கிருஷ்ணரின் கருணையால் அஸ்தமனத்திற்கு முன்பே, சூரியன் மறைக்கப்பட, அதனால் அன்றைய யுத்தம் முடிந்தது என்று நினைத்த ஜெயத்ரதனின் தலையை, கிருஷ்ணரின் ...
What is Dharma? (Tamil) I எது தர்மம்?

What is Dharma? (Tamil) I எது தர்மம்?

மஹாபாரதம்
எது தர்மம்?ஆதாரம்: மஹாபாரதம் (சபா பர்வம்) யுதிஷ்டிரர் ராஜசுய யாகம் நடத்திய பின், அதன் வளமையும், செழுமையும் கண்டு, மனம் பொறாமையுற்ற துரியோதனன், பாண்டவர்களின் வளம் அனைத்தையும், குறுக்கு வழியில் பெற சகுனி மற்றும் கர்ணனுடன் கூடிதிட்டம் தீட்டி, சூதில் வல்ல சகுனி உதவியுடன், பாண்டவர்களுடன் பகடை ஆடி , அவர்கள் சொத்தை அபகரிக்க எண்ணினான். அதற்கு அவனுடைய தந்தையான திருதராஷ்டிரையும் இறுதியில் சம்மதிக்க வைத்தான். எவ்வாறோ அரை குறை மனதுடன் சூதுக்கு ஒத்துக் கொண்ட திருதராஷ்டிரர், இந்ரப் பிரஸ்தம் சென்று, யுதிஷ்டிரமகாராஜாவை பகடை விளையாட்டிற்கு வர அழைப்பு விடுக்குமாறு விதுரரிடம் கூறினான். யுதிஷ்டிரரிடம் அவ்வாறே அழைப்பு விடுத்த விதுரரிடம் யுதிஷ்டிரர், " திருதராஷ்டிரரிடமிருந்து இவ்வித அழைப்பு வந்ததற்கு நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன். ஏனெனில், இவ்விளையாட்டு எங்களுக்கும், அவர்கள் பிள்ளைகளுக்கும் இடையே பி...
Spiritual eyes (Tamil) I தெய்வீகக் கண்கள்!

Spiritual eyes (Tamil) I தெய்வீகக் கண்கள்!

கதைகள், மஹாபாரதம்
ஆதாரம்: மஹாபாரதம் குருக்ஷேத்திர போர்க்களத்தில் ஒருபக்கம் பாண்டவ படைகளும், கெளரவ படைகளும் போருக்குத் தயாராக அணிவகுத்து நின்றனர். பீஷ்மர், கெளரவர் பக்கம் தலைமை தாங்க, திருஷ்டத்யும்னன் பாண்டவ படைக்கு தலைமை தாங்க, போர் ஆரம்பிக்க இருந்த நேரம்.                 போரின் மறுபக்கமோ , திருதராஷ்டிரர் அரண்மனையில் கவலைதோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார் . அவரால் செய்யப்பட ஒன்றும் இல்லை. அவருடைய கவலையை பொதுவாக விதுரருடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். ஆனால் விதுரரும் அங்கிருந்து நீங்கி விட்டதால் , திருதராஷ்டிரர் சஞ்ஜயனை அழைத்தார். சஞ்ஜயனிடம், ஓ சஞ்ஜயா! , என்ன நடக்கிறது என்று எனக்கு கூறு. இரு படைகளும் குருசேத்திரத்தை அடைந்து விட்டனவா ? விதியின் சக்தி, இந்த வயதானவனின் முயற்சிகளை விட சக்தி வாய்ந்தது. என்னுடைய மகனை தடுத்து நிறுத்த முயற்சி செய்தும், நான் தோல்வி அடைந்தேன். ஏன் இந்த நிலை? துரியோதனனின் தவறுகளை...
Do Lord Have Duties! (Tamil) I பகவானுக்கு கடமை!

Do Lord Have Duties! (Tamil) I பகவானுக்கு கடமை!

கதைகள், மஹாபாரதம்
ஆதாரம் : மஹாபாரதம் ( அனுஸாஸன் பர்வம்: பகுதி 59 )  ஒரு சமயம் கிருஷ்ணர் துவாரகையில் அரசாண்ட காலம் , அரியணையில் கிருஷ்ணர் அமர்ந்திருந்த போது, அவருடைய மகனான பிரத்திம்யுனர், சில சாதுக்களால் கோபப்படுத்தப் பட்டு கிருஷ்ணரிடம் வந்து, “மதுசூதனா! சாதுக்களை வழிபடுவதால், என்ன பலன் கிடைக்கும் ?. அதன் மூலமாக இங்கும், இதற்கு பின்பும் என்ன பலனை ஒருவர் அடைய முடியும். எனக்கு தயவு செய்து , தெளிவாக விளக்கிச் சொல்லுங்கள். இவ்விஷயத்தில் என் மனம் குழப்பம் அடைந்துள்ளது” என்று வினவினார்.  இவ்வாறு பிரத்திம்யுனர் சொல்லக் கேட்ட கிருஷ்ணர், பிரத்திம்யுனரிடம், " ருக்மணி மைந்தனே ! சாதுக்களை வழிபடுவதால், ஒருவர் அடையக்கூடிய செல்வாக்கை, நான் கூறுகிறேன். யார் ஒருவர், தர்ம, அர்த்த, காமத்தை அடைய விரும்புகின்றாரோ அல்லது மோட்சத்தை அடைய விரும்புகின்றாரோ அல்லது புகழும், செல்வாக்கும் அடைய விரும்புகின்றாரோ அல்லது தீர...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question