Saturday, July 27

குறளின் குரல்

Kuralin Kural – Paramatma (Tamil) / குறளின் குரல் – பரமாத்மா

Kuralin Kural – Paramatma (Tamil) / குறளின் குரல் – பரமாத்மா

குறளின் குரல்
நம்முடன் சேர்ந்து, நமது இதயத்தில் இறைவன் பரமாத்மாவாக இருக்கிறார் என்பதை பகவத் கீதையின் பதின்மூன்று, பதினைந்தாவது அத்யாயங்கள் உறுதி செய்கின்றன."மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ் வார்"-  (திருக்குறள் 3)"இதயமாகிய தாமரை மலரில் இருப்பவனின் மாட்சிமை பொருந்திய அடிகளைச் சேர்ந்தவர் எல்லா உலகிற்கும் மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார்".எல்லா உலகங்கட்கும் அவைகளில் உள்ள உயிர்கட்கும் காரணமான முழுமுதற்கடவுளாகிய ஆதி பகவான் இதயத்தியிருக்கிறான் என்பதை வள்ளுவர் மூன்றாவது குறளில் உறுதி செய்கின்றார். அந்தர்யாமியாக இருக்கும் இறைவனைப் பரமாத்மா என்று வேத இலக்கியங்கள் கூறுகின்றன. இங்கே வீடு என்பது நிலையான அழிவற்ற உல்கமாகிய வைகுந்தத்தைக் குறிக்கிறது.உபத்ரஷ்டானு மந்தா ச பர்தா போக்தா மஹேஷ்வர:பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹே ஸ்மின் புருஷ: பர:"*(பகவத் கீதை 13....
குறளின் குரல் (நான் யார் ?)

குறளின் குரல் (நான் யார் ?)

New Posts, குறளின் குரல்
நான் என்பது இந்த உடம்பு அன்று , ஆத்மா என்பதை பகவத் கீதை இரண்டாம் அத்யாயம் விளக்குகின்றது. ஆத்மா அழியாதது , உடல் விட்டு உடல் மாறக் கூடியது .  " வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய நவானி க்ருஹ்ணாதி நரோ (அ) பராணி ததா ஷரீராணி விஹாய ஜீர்னான் யன்யானி ஸம்யாதி நவானி தேஹி” (- பகவத் கீதை 2.22)  “பழைய ஆடைகளைப் புறக்கணித்து , புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றே , பழைய , உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது " . உடம்பு வேறு , உயிர் ( ஆத்மா ) வேறு , உடம்போடு உயிருக்குள்ள . உறவு , தான் இருந்த முட்டையெனும் கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது . இதை வள்ளுவர் தெளிவாக நிலையாமை அதிகாரத்தில் , “ குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே    உடம்பொடு உயிரிமை நட்பு” - திருக்குறள் 338             இ...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question