Monday, September 16

Author: பக்தி யோகம் குழு

கடவுள் இருக்கின்றார் என்றால்,ஏன் பல்வேறு துன்பங்கள்? / If God exists, Why the various sufferings (Tamil) ?

கடவுள் இருக்கின்றார் என்றால்,ஏன் பல்வேறு துன்பங்கள்? / If God exists, Why the various sufferings (Tamil) ?

வாழ்க்கை தத்துவம்
தலைமுடியை வெட்டி தாடியைச் சீர்படுத்த ஒருவன் முடிதிருத்தகத்திற்குச் சென்றான். சவரத் தொழிலாளி தனது பணியை செய்யத் தொடங்கியவுடன் அவர்கள் இருவரும் பேசத் தொடங்கினர். பல்வேறு விஷயங்களைப் பேசி வந்த அவர்கள் கடவுளைப் பற்றியும் பேசத் தொடங்கினர். “எனக்குக் கடவுளின் மீது நம்பிக்கைக் கிடையாது, என்று சவரத் தொழிலாளி கூறினான்.‘ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள்?" என வாடிக்கையாளர் வினவ, “நீங்கள் தெருவில் நடந்து சென்றால் போதும், கடவுள் இல்லை என்பதை புரிந்து கொள்வீர்கள். கடவுள் இருப்பதாக இருந்தால், ஏன் இத்தனை மக்கள் வியாதியுடன் வாழ்ந்து வருகின்றனர்? ஏன் அனாதைக் குழந்தைகள் இருக்கின்றனர்? கடவுள் இருக்கின்றார் என்றால், வலியோ துன்பமோ இருக்கக் கூடாது. அன்புமிக்க கடவுள் இதையெல்லாம் அனுமதிக்கின்றார் என்பதை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை, என்று பதில் கிடைத்தது.ஒரு நிமிடம் யோசித்த வாடிக்கை யாளர், வீண் வா...
Improve in Bhakti step by step (Tamil) / படிப்படியாகப் பக்தியில் முன்னேறுதல்

Improve in Bhakti step by step (Tamil) / படிப்படியாகப் பக்தியில் முன்னேறுதல்

கதைகள், ஆன்மீகப் பதிவு
மனிதனாக பிறவி எடுத்த அனைவருக்குமே ஐடம் புலன் இன்பத்தில் கூடநாட்டம் உண்டு. புலனின்பத்தை முற்றிலுமாகத் தவிர்த்து, கிருஷ்ண பக்தியை நேரடியாகவோ அல்லது முழு மையாகவோ ஏற்றுக் கொண்டு பயிற்சி செய்வது என்பது எல்லோருக்கும் இயலாத ஒரு காரியம்.ஜடப் புலனின்பத்தை விரும்பித் தான் அனை வரும் இவ்வுலகில் செயல்படுகின்றனர். புலன் இன்பத்தை விரும்பும் இவர்கள், முழு கிருஷ்ண பக்தியில் ஈடுபட இயலாமல் போகலாம். ஆனால், தங்களுடையப் புலனின்பத்தை நிறைவேற்றிக் கொள்ள வேதங்களால் ஒழுங்குபடுத்தப் பட்ட வகையில், வேதங்கள் பயிலல், யாகங்கள், தவங் கள், தான தர்மங்கள் செய்தல் ஆகியவற்றைப் பக்தி யுடன் செய்யலாம்.இவ்வாறு செய்வதால் படிப்படியாகக் கிருஷ்ண உணர்வில் அவர்கள் முன்னேற வாய்ப்பு உண்டு. சிறிதளவாகிலும் இவ்வாறு கிருஷ்ண உணர்வை வளர்த்துக் கொண்டுள்ள ஒருவனை, நேரடியாகக் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்தி விடலாம்.ஆகையால், கிருஷ்ண...
A biography of Lord Krishna (Tamil) / கிருஷ்ணரின் வாழ்க்கைக் குறிப்பு

A biography of Lord Krishna (Tamil) / கிருஷ்ணரின் வாழ்க்கைக் குறிப்பு

ஸ்ரீ கிருஷ்ணர், ஆன்மீகப் பதிவு
மாதவன் அவதரித்த மதுராபிறப்பற்ற இறைவன் இவ்வுலகிற்கு இறங்கி வரும்போது, அவதாரம் என்று அறியப்படுகிறார். ஆன்மீக உலகமான கோலோக விருந்தாவனத்திலிருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (மாதவன்) தனது பக்தர்களைக் காப்பதற்காகவும் துஷ்டர்களை அழிப்பதற்காகவும் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு இப்பூவுலகில் தற்போதைய டில்லி நகரத்திலிருந்து 150 கிமீ தெற்கிலுள்ள மதுரா நகரில் தோன்றினார். இதனால் மதுரா நகரம் மிகவுயர்ந்த புண்ணிய பூமியாகும்.கி.மு. 3228, ஜூலை 19ம் நாள், ஸ்ரவன மாத தேய்பிறையின் அஷ்டமி திதியின் நள்ளிரவில், மதுராவின் சிறைச்சாலையில் கிருஷ்ணர் குழந்தையாக அவதரித்தார், அன்றிரவே கோகுலம் சென்றடைந்தார்.3 வருடம், 4 மாதங்கள் வரை கோகுலத்தில் வசித்த பின், விருந்தாவனம் சென்றார். மேலும் 3 வருடம் 4 மாதங்களை விருந்தாவனத்தில் கழித்த பின், 6 வருடம் 8 மாத வயதில், நந்தகிராமத...
Padmini Ekadasi Tamil / பத்மினி ஏகாதசி

Padmini Ekadasi Tamil / பத்மினி ஏகாதசி

ஏகாதசி
பத்மினி ஏகாதசிதற்போது வரக்கூடிய ஏகாதசி, 32 மாதங்களுக்கு ஒருமுறை வரும் பத்மினி ஏகாதசி ஆகும். வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும், 32 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு மாதம் சேர்க்கப்படுகிறது. புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த 'அதிக' (Adhika) மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பத்மினி ஏகாதசி' என்றும் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பரம ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த வருடம் 'அதிக' மாதம் வந்துள்ளது.யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக் கேட்கிறார், "பரம்பொருளே, மதுஸூதனா! 'அதிக' மாதத்தில், சுக்ல பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம். பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகளைக் கூறுங்கள்," என்று யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டுகிறார்.பகவான் ஸ்ரீ கிருஷ்...
Tulasi Mahima – Glories of Tulasi (Tamil) / துளசி மஹிமா

Tulasi Mahima – Glories of Tulasi (Tamil) / துளசி மஹிமா

Most Viewed, ஆன்மீகப் பதிவு
துளசி பாடல்கள்துளசி வழிபாடு என்பது தொன்று தொட்டு செய்யப்பட்டு வரும் வழிபாடுகளுல் ஒன்று. லக்ஷக்கணக்கான மரம், செடி, கொடிகள் இருக்கை யில் துளசிக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு?கல்வியறிவு இல்லாத பிராமணர் கண்ட துளசி வனம்நீண்ட காலத்திற்கு முன்பு, கல்வியறிவு இல்லாத பிராமணர் ஒருவர் விவசாயத் தொழில் புரிந்து வந்தார். அவர் எந்த வித மதச் சடங்குகளையும் செய்ததில்லை. வாட்ட, சாட்டமான அவர் ஒரு முறை, விற்பனை செய்வதற்காக புல் சேகரிக்க கயிறு ஒன்றுடன் காட்டிற்குச் சென்றார். போது மான அளவு புல் சேகரித்து இருந்தாலும், இன்னும் அதிகப் புல்லைத் தேடி காட்டினுள் அழைந்தார் அவர்.அப்போது அழகிய துளசி வனம் ஒன்றை அவர் கண்டார். பச்சை மரகதம் போல் அது ஒளிர் விட்டுக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியே அவருக்கு தூய்மையை அளித்து, மனதில் ஆனந்தத்தை அளித் தது. "இந்தச் செடி பசுக்களுக்கும், மனிதர்களுக் கும் உணவாகுமானால்,...
Understanding Bhagavad Gita (Tamil) / பகவத் கீதையைப் புரிந்துகொள்ளுதல்

Understanding Bhagavad Gita (Tamil) / பகவத் கீதையைப் புரிந்துகொள்ளுதல்

ஆன்மீகப் பதிவு, ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
12 செப்டம்பர் 1973ல், லண்டன் நகரில், தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் சில பத்திரிகை நிருபர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலின் ஒரு பகுதி.நிருபர்: பகவத் கீதையில் போதிக்கப்படும் மையக் கருத்து என்ன?ஸ்ரீல பிரபுபாதர்: பகவானைப் புரிந்து கொள்வதே மையக் கருத்தாகும். மக்கள் மூடர்களாகி விட்டார்கள். அவர்கள் பகவானைப் பற்றி தெரிந்து கொள்வதையும். தான் யார் என்பதை தெரிந்துகொள்வதையும் மறந்துவிட்டனர். ஒவ்வொருவரும் "நான் இந்த உடல்" என்று தவறாக எண்ணுகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஆன்மீக ஆத்மாக்கள். ஆத்மாவை அறிவதற்கான கல்வியறிவு அவர்களிடம் இல்லை. அனைவரும் அறியாமையில் உள்ளனர். மிகப்பெரிய பேராசிரியர்கள்கூட அறியாமையில் உள்ளனர். இந்த உடல் முடிந்த பிறகு, எல்லாமே முடிந்து விடும்" என்று ரஷ்யாவின் பேராசிரியர் கோட்டாவ்ஸ்கி என்னிடம் கூறினார். ஆனால் அஃது உண்மை அல்ல.நிருபர்: ஸ்ரீ கிருஷ்ண...
Gita Saaram (Tamil) / கீதாசாரம்

Gita Saaram (Tamil) / கீதாசாரம்

ஆன்மீகப் பதிவு, ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
வழங்கியவர்: தெய்வத்திரு. அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியர்தெய்வீக ஞானத்தை அங்கீகரிக்கப்பட்ட சீடப் பரம்பரையின் மூலம் பெறாமல், அனுபவ அறிவை அடிப்படையாகக் கொண்ட விவாதங்களால் கவரப்பட்டு, வழிதவறிச் செல்லும் நபர்களுக்காக பகவத் கீதையின் முக்கிய கருத்துக்களை இங்கு சுருக்கமாக கீதாசாரம் என்னும் தலைப்பில் தொகுத்துள்ளோம். (1940களில் வைராக்ய வித்யா எனும் தலைப்பில் ஸ்ரீல பிரபுபாதரால் வங்காள மொழியில் எழுதப்பட்ட தொடர் கட்டுரைகளில் ஒன்று)பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பரம் பொருள். அவரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள். அவரே எல்லா காரணங்களுக்கும் காரணம் "யாரிட மிருந்து இவ்வுலகம் தோன்றியதோ, யாரால் இவ்வுலகம் தோற்றுவிக்கப் பட்டதோ, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றையும் யார் கட்டுப் படுத்துகின்றாரோ, அவரே கடவுள்" என்று கடவுளைப் பற்றி வேதாந்த சூத்திர...
Uthamar Kovil, Thirukkarambanoor – History / உத்தமர் கோவில், திருக்கரம்பனுர்

Uthamar Kovil, Thirukkarambanoor – History / உத்தமர் கோவில், திருக்கரம்பனுர்

108 Divya Desham History (Tamil)
Sri Purushothaman Perumal Temple or Uthamar Kovil, Thirukkarambanoor or Bhikshandar Kovil (3rd Divya Desam Temple).வரலாறு.பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றி கூறுகிறது பிரம்மா, ஆகமத்தில் கூறப்பட்ட விதிகளுக்குட்பட்டு சந்தியா காலத்தில் திருமாலை ஆராதித்து வந்தார். பிரம்மனின் பக்தியைச் சோதிக்க விரும்பிய திருமால் இத்தலத்தில் ஒரு கதம்ப மரமாக உருக்கொண்டு நிற்க இதை யுணர்ந்த பிரம்மனும் இவ்விடத்தே வந்து தம் கமண்டல நீரால் கதம்ப மரத்திற்கு திருமஞ்சனம் செய்து திருமாலைத் துதிக்க, பிரம்மனுக்கு காட்சியளித்த திருமால் இதுபோலவே எந்நாளும் என்னைத் துதித்து இவ்விடத்தே வழிபடவும் என்று கூறியதால் பிரம்மனும் இங்கு கோவில் கொண்டார்.பிரம்மனின் கபாலம் கையில் ஒட்டிக் கொள்ள, அத்துடன் தீர்த்த யாத்திரை செய்த சிவன் இங்கு வந்து சேர்ந்ததும், சிவனுடைய பிட்சா பாத்திரத்தில் பிச்சையிடுமாறு மஹாலட்சுமி...
மனிதனுக்கும், கடவுளுக்கும் உள்ள வித்தியாசம்? / Different b/w Human & God?

மனிதனுக்கும், கடவுளுக்கும் உள்ள வித்தியாசம்? / Different b/w Human & God?

ஆன்மீகப் பதிவு, ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
பொதுவாக மாயாவதிகள் என்பவர்கள் 'எல்லாம் மாயை, மற்றும் கிருஷ்ணரும் மாயை' என்று கூறுவார்கள். கிருஷ்ணர் செயல்முறையில் இதெல்லாம் மாயை அல்ல என்று காட்டினாலும், இது முழுமையாக ஆன்மீகமானது என்று கூறினாலும் அவர்களுடைய மந்த புத்தி 'கிருஷ்ணர் தலையாய பூரண உண்மை' என்று ஏற்றுக் கொள்ளாது.கிருஷ்ணர் 'மன்மனாபவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு' (ப.கீ. 18.65) 'என்னுடைய பக்தன் ஆவாய். எனக்கு உன் வந்தனைகளை சமர்ப்பிப்பாய். எப்போதும் என்னை நினைத்து இரு' என்று கூறுகிறார்.இதற்கு அந்த அறிஞர்கள் என்று கூறப்படுபவர்கள், "இது கிருஷ்ணர் என்ற நபருக்கு அல்ல. இது அவருள் பொதிந்திருக்கும் ஒன்று'' என்று கூறுவர். இந்த மூடர்களுக்கு கிருஷ்ணரின் அகத்திற்கும் புறத்திற்கும் வித்தியாசம் இல்லை என்று தெரியாது.நமக்கும், கிருஷ்ணருக்கும் வித்தியாசம்?கிருஷ்ணர் பூரணமானவர். இருமைக்கு அங்கு இடமில்லை, இந்த அறிவு அவர்களுக்கு கி...
மின்னுவதெல்லாம் பொன் அல்ல! வேஷதாரிகள் எல்லாம் சாதுக்கள் அல்ல!! / All that glitters is not gold

மின்னுவதெல்லாம் பொன் அல்ல! வேஷதாரிகள் எல்லாம் சாதுக்கள் அல்ல!! / All that glitters is not gold

ஆன்மீகப் பதிவு, கதைகள்
மஹாபாரதப் போர் ஆரம்பிக்கும் முன், மன்னன் துரியோதனன், தன்னுடைய பாசறையில் கர்ணன், துச்சாதனன், சகுனி மற்றும் சகுனியின் மகனான சுவாலா ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினான். பின் சகுனியின் மற்றொரு மகனான உலுக்காவை அழைத்து, பாண்டவரிடம் தூது செல்லக் கூறினான். மேலும் தான் கூறும் பின்வரும் வார்த்தைகளை மாறாமல் அப்படியே யுதிஷ்டிரரிடம் கூறுமாறும் கேட்டுக் கொண்டான்.“ஓ பரத குலத் தோன்றலே, யுதிஷ்டிரா! எவ்வாறு உன்னுடைய இதயத்தை, அதர்மத்தில் நிலை நாட்டி உள்ளாய். நீ எல்லா ஜீவன்களின் துன்பத்தையும் நீக்குவதற்கு பதிலாக, பிரபஞ்சத்தின் அழிவை நீ எவ்வாறு விரும்பலாம்?" என்று கூறுமாறு துரியோதனன் உலுக்காவை கேட்டுக் கொண்டான்.மேலும், "தேவர்களால் அவருடைய ராஜ்யம் கைப்பற்றப்பட்ட போது, பிரகலாத மகாராஜா பாடிய பாடல் ஒன்று நான் கேட்டுள்ளேன்" என்று மேலும் பின்வரும் வரலாறை கூறினான்.பிரகலாத மகாராஜா தேவர்களிடம், "தேவ...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question