Thursday, March 28

Festivals-Tamil

பக்தனின் வாக்கைக் காப்பாற்றும் பகவான்

பக்தனின் வாக்கைக் காப்பாற்றும் பகவான்

ஆன்மீகப் பதிவு, Festivals-Tamil, திருவிழாக்கள்
கிருஷ்ணருக்கும் பக்தனுக்கும் இடையில் நிகழும் அன்புப் பரிமாற்றங்கள் மிகவும் இனிமையானவை. பகவானின் சொல்லை பக்தன் தட்ட மாட்டான் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். ஆனால் பக்தனின் சொல்லையும் பகவான் தட்ட மாட்டார் என்பதை நீங்கள் அறிவீர்களா? அன்னை யசோதையால் உரலில் கட்டிப்போடப்பட்ட கிருஷ்ணர் அந்த உரலுடன் நகர்ந்து இரண்டு மரங்களை வீழ்த்தி குபேரனின் இரண்டு மகன்களை விடுவித்தார். இந்த லீலையில் கிருஷ்ணர் எவ்வாறு தனது அன்பிற்குரிய பக்தரான நாரதரின் வார்த்தைகளை நிரூபித்தார் என்பதை சற்று காணலாம். கிருஷ்ணர் செய்த குறும்புச் செயல் "அம்மா பசிக்குது," என்றபடி கிருஷ்ணர் தயிர்கடைந்து கொண்டிருந்த அன்னை யசோதையின் முந்தானையைப் பிடித்து அன்புடன் இழுக்கின்றார். குழந்தையைத் தடுக்க முடியாமல் அவனை எடுத்து மடியில் கிடத்தி அந்த அழகிய திருமுகத்தை ரசித்தபடி யசோதை பால் கொடுக்கத் தொடங்கினாள். கிருஷ்ணரும் அன்னையின் அன்பி...
Panihati Chida-Dahi Festival (Tamil) / பானிஹட்டி சீடா தஹி உற்சவம்

Panihati Chida-Dahi Festival (Tamil) / பானிஹட்டி சீடா தஹி உற்சவம்

திருவிழாக்கள், Festivals-Tamil
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் ரகுநாத தாஸ கோஸ்வாமியும் சந்தித்தல்                 இந்த அத்தியாயத்தின் சுருக்கம் பக்தி வினோத தாகூரால் தமது அம்ரித-ப்ராவாஹ-பாஷ்ய உரையில் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பிரேமையின் தெய்வீக வலிப்பினுள் நுழைந்தபோது , இராமானந்த ராயரும் ஸ்வரூப தாமோதாரும் அவரை கவனித்துக் கொண்டனர் . அவர் விரும்பியபடி திருப்திப்படுத்தினர் . ரகுநாத தாஸ் கோஸ்வாமி நீண்ட காலமாக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தாமரைத் தமது திருவடிகளை அடைவதற்கு முயன்று கொண்டிருந்தார் . இறுதியாக , அவர் இல்லத்தை விட்டு விலகி மஹாபிரபுவைச் சந்திக்க வந்தார் . ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு விருந்தாவனத்திற்குப் போகும் வழியில் சாந்திபுரத்திற்குச் சென்றிருந்தபோது , ரகுநாத தாஸ கோஸ்வாமி தமது வாழ்வினை மஹாபிரபுவின் தாமரைத் திருவடிகளில் அர்ப்பணி...
Tulasi-Saligram Vivaha (Tamil) / ஸ்ரீமதி துளசி தேவி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் திருமண விழா

Tulasi-Saligram Vivaha (Tamil) / ஸ்ரீமதி துளசி தேவி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் திருமண விழா

திருவிழாக்கள், Festivals-Tamil
ஸ்ரீ பத்மநாப கோசாய் எழுதிய ஷாலக்ரம மற்றும் துளசியின் திருமணம்.  துளசியின் திருமணம் பற்றி பிரம்மாவிடம் பண்டைய காலங்களில் நான் கேள்விப்பட்டதை நாரத-பஞ்சராத்திரத்தில் எழுதப்பட்டவற்றின் படி இப்போது விவரிக்கிறேன் என்று ஸ்ரீ வசிஷ்டர் கூறினார். முதலில் துளசியை வீட்டிலோ அல்லது காட்டிலோ நடவு செய்ய வேண்டும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் தனது (துளசியின்) திருமணத்தை செய்யலாம். ஷாலக்ரம மற்றும் துளசியின் திருமணத்தை ஒருவர் நிகழ்த்தக்கூடிய நல்ல காலங்கள் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளன. வடக்கில் சூரியன் நகரும் போது, வியாழன் மற்றும் சுக்கிரன் உதயமாகும், கார்த்திகா மாதத்தில், ஏகாதசி முதல் மஹா மாதத்தில் பெளர்ணமி வரை, மற்றும் திருமணத்திற்கு புனிதமான விண்மீன்கள் தோன்றும் போது, குறிப்பாக பெளர்ணமி நாள். - முதலில் ஒருவர் ஒரு விதானத்தின் (மண்டப) கீழ் யாகத்திற்கு (யஜ்ஞ-குந்தா) ஒரு இடத்தை ஏற்பாடு செய்ய வ...
Disappearance of Bhishma Dev (Tamil)  / பீஷ்மதேவரின் மரணம்

Disappearance of Bhishma Dev (Tamil) / பீஷ்மதேவரின் மரணம்

Festivals-Tamil
https://youtu.be/8iznMq5N8ZQ ஸ்ரீ மத் பாகவதம் அத்தியாயம் ஒன்பதுபீஷ்மதேவரின் மரணம் பதம் 1 सूत उवाचइति भीत: प्रजाद्रोहात्सर्वधर्मविवित्सया ।ततो विनशनं प्रागाद् यत्र देवव्रतोऽपतत् ॥ १ ॥ஸூத உவாச இதி பீத: ப்ரஜா-த்ரோஹாத் ஸர்வ-தர்ம-விவித்ஸயாததோ வினசனம் ப்ராகாத் யத்ர தேவ-வ்ரதோ ’பதத் ஸூத உவாச—ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; பீத:—அதனால் அச்சமடைந்து; ப்ரஜா-த்ரோஹாத்—பிரஜைகளைக் கொன்றதால்; ஸர்வ—எல்லா; தர்ம—மத அனுஷ்டானங்கள்; விவித்ஸயா—புரிந்துகொள்ள; தத:—அதன் பிறகு; வினசனம்—போர் நிகழ்ந்த இடத்திற்கு; ப்ராகாத்—அவர் சென்றார்; யத்ர—எங்கு; தேவ-வ்ரத:—பீஷ்மதேவர்; அபதத்—உயிரை விடுவதற்காக படுத்திருந்த. மொழிபெயர்ப்பு சூத கோஸ்வாமி கூறினார். குருட்சேத்திரப் போர்க்களத்தில் அநேக பிரஜைகளைக் கொன்றுவிட்டதை எண்ணி அச்சமடைந்த யுதிஷ்டிர மகாராஜன் படுகொலை நிகழ்ந்த இடத்திற்குச் சென்றார். ...
Bhishma Panchaka (Tamil) / பீஷ்ம  பஞ்சங்கம்

Bhishma Panchaka (Tamil) / பீஷ்ம பஞ்சங்கம்

திருவிழாக்கள், Festivals-Tamil
தாமோதர மாதத்தின் கடைசி ஐந்து நாட்களை பீஷ்ம பஞ்சங்கம் அல்லது விஷ்ணு பஞ்சங்கம் என்று அழைக்கப்படுகிறது. பிதாமஹர் பீஷ்மர் கார்த்திகை மாதத்தில் கடைசி ஐந்து நாட்கள் தூய கிருஷ்ண உணர்வில் மிகவும் கடுமையான இந்த விரதத்தை மேற்கொண்டு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தி தொண்டில் ஈடுபட , தனது முழு கவனத்தையும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரில் மூழ்கச் செய்தார். பீஷ்ம பஞ்சங்கம், சதுர்மாஸத்தில் வரும் கடைசி ஐந்து நாட்கள்  அதாவது உத்தான ஏகாதசி முதல் பௌர்ணமி வரை அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாட்களில் விரதம்  இருப்பவர்களுக்கு மிகவும் விரைவில்  ஆன்மிக பலன்களை அடைவார்கள். அதுமட்டுமின்றி ஆன்மிக சேவைகளில் வரும் தடைகள் நீங்கி விரைவில் முன்னேற இந்த விரதம் உதவும். விரத முறைகள் ஒரு பக்தருக்கு ஆன்மீகத்தில் முன்னேற, பரம புருஷ பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்திபடுத்த சிலபதார்த்தங்களை தவிர்த்து உபவாசம் அனுஷ்டிக்க ம...
Jhulan Yatra – Tamil / ஶ்ரீ ராதா கிருஷ்ணரின் ஊஞ்சல் திருவிழா

Jhulan Yatra – Tamil / ஶ்ரீ ராதா கிருஷ்ணரின் ஊஞ்சல் திருவிழா

திருவிழாக்கள், Festivals-Tamil
இந்தியாவின் புனித நகரமான பிருந்தாவனத்தில் மிகவும் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்று - 5,000 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணர் தோன்றிய இடம் - ஜுலான் யாத்திரையின் கொண்டாட்டம், ராதா-கிருஷ்ணா ஊஞ்சல் திருவிழா. பிருந்தாவனில் உள்ளூர் கிராமவாசிகள் மற்றும் மக்கள் மத்தியில் இந்த திருவிழா 13 நாட்கள் நீடிக்கும். பிருந்தாவனத்தில் இது ஆண்டின் மிகப் பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும், இந்த நேரத்தில் பிருந்தாவனத்தில் மிகவும் நெரிசலாக இருக்கும், அதாவது சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த நூறாயிரக்கணக்கான மக்கள் இந்த காலகட்டத்தில் பிருந்தாவனத்திற்கு வருகை தருகிறார்கள். இது புனிதமான ஸ்ரவண மாதத்தில்(ஜூலை-ஆகஸ்ட்) நடக்கும். ஸ்ரீ பிருந்தாவனத்தில், ஐந்து நாட்கள், அங்குள்ள 5000 கோயில்களில், சிறிய உற்சவ-விக்ரஹங்களை ஊஞ்சலில் வைத்து வழிபடுவார்கள். பாரம்பரிய ஆரத்தி வழிபாட்டைப் பெற்ற பிறகு, ஸ்ரீ ராதா கிருஷ்ணருக்க...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question