Thursday, March 27

Tag: Tamil_ISKCON

Srila Bhaktisiddhanta Sarasvati Thakura (Tamil) / ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரா

Srila Bhaktisiddhanta Sarasvati Thakura (Tamil) / ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரா

ஆன்மீகப் பதிவு, வாழ்க்கை வரலாறு
ஸ்ரீல அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த ஸரஸ்வதி தாகூரா, ஸ்ரீ க்ஷேத்ர தாமில் (ஜெகந்நாத் பூரியில்) தோன்றினார். தனது குழந்தைப் பருவத்தில் அவர் விரைவாக வேதங்களை கற்றுத்தேர்ந்தார், பகவத் கீதையை மனப்பாடம் செய்தார், மேலும் தனது தந்தையின் தத்துவ படைப்புகளை கண்டு மகிழ்ந்தார். அவர் தனது பரந்த அறிவுக்கு "தி லிவிங் என்சைக்ளோபீடியா" என்று அறியப்பட்டார்.               கெளடிய வைஷ்ணவத்திலிருந்து சாதி மற்றும் தத்துவ விலகல்களுக்கு எதிராக அவர் உறுதியாக பிரசங்கித்தார். நான்கு வைஷ்ணவ சம்பிரதாயங்களையும் அவர்களின் போதனைகளையும் வெளியிட்டு ஒன்றிணைக்க முயன்றார். ஸ்ரீல சரஸ்வதி தாகூரா வைஷ்ணவ சித்தாந்தத்தின் அச்சமற்ற மற்றும் சக்திவாய்ந்த விநியோகத்திற்காக நரிசிம்ஹ குரு என்ற பட்டத்தை பெற்றார். "சிம்ஹ குருவை" எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக மாயாவதிகள் வீதி...
Sri Jayadeva Goswami (Tamil) / ஸ்ரீ ஜெயதேவ கோஸ்வாமி

Sri Jayadeva Goswami (Tamil) / ஸ்ரீ ஜெயதேவ கோஸ்வாமி

வாழ்க்கை வரலாறு, ஆன்மீகப் பதிவு
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தோன்றுவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெயதேவ கோஸ்வாமி வங்காள மன்னர் ஸ்ரீ லட்சுமண சேனாவின் நீதிமன்ற பண்டிதராக பணியாற்றினார். ஜெயதேவ மற்றும் பத்மாவதி (அவரது மனைவி, ஒரு நடனக் கலைஞர்) ஸ்ரீ கிருஷ்ணரை தீவிர பக்தியுடன் வழிபடுவார்கள். சிறிது காலம் கழித்து, நவத்விபாவின் சம்பஹட்டியில் உள்ள ஒரு புல் குடிசையில் நிம்மதியாக வாழ அவர் செழிப்பான அரச வாழ்க்கையை விட்டுவிட்டார். அங்கு ஜெயதேவ கீத கோவிந்தத்தை எழுதினார்.ஒரு நாள் ஜெயதேவர் கீத கோவிந்தம் எழுதும் போது, ​​"ஸ்ரீமதி ராதாரணியின் தாமரை பாதங்களைத் தொட ஸ்ரீ கிருஷ்ணர் விழைந்தார்" என்று எழுதத் தூண்டப்படுகிறார். முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் நிலையை குறைக்கக் கூடிய ஒன்றைச் சொல்ல ஜெயதேவர் தயங்கினார், ராதா-மாதவாவின் மகா-பிரசாதத்தை ஏற்க்கும் முன்பு கங்கை குளியல் மூலம் தன்னை தூய்மை படுத்திக் கொள்ளச் சென்றார்.அவர் இல்லாத...
Akshaya Tritiya (Tamil) / அட்சய திரிதியை

Akshaya Tritiya (Tamil) / அட்சய திரிதியை

ஆன்மீகப் பதிவு, திருவிழாக்கள்
1. பரசுராமர் அவதரித்த திருநாள்2. கங்கை நதி இவ்வுலகிற்கு வந்த நாள்3. பக்தன் சுதாமர் துவாரகாவில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இல்லத்திற்கு சென்ற நாள்.4. பாண்டவர்கள் சூரியதேவனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்,5. வியாச தேவரால் மஹாபாரதம் இன்று தான் எழுதப்பட்டது.6. திரேதாயுகம் தொடங்கிய நாள்7. “கனகதரஸ்தோத்ரம்” ஆதிசங்கராச்சாரியரால் இன்று இயற்றப்பட்டது.8. குபேரருக்கு இன்று செல்வத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது, அன்னபூரணிதேவி தோன்றிய நாளாகக் கருதப்படுகிறது.9. இந்நன்னாளில் ஜெகந்நாதரின் ரதயாத்திரைக்கான ரதம் செய்யும் பணி தொடங்கும்.10. கீர்ஷோர் கோபிநாத் (ரெமுன, ஒரிஸா), மதன மோகன், கோவிந்தா மற்றும் கோபிநாத் விக்ரகங்களுக்கு சந்தன் யாத்திரை தொடங்கும் நாள்11. இன்றிலிருந்து 21 நாட்களுக்கு, வைசாக மாதத்தின் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக விருந்தாவனத்தில் பகவான் ஸ்ரீ ராதா கிருஷ்ணருக்கு சந்தன காப்பு அலங்காரம் ந...
Varuthini Ekadashi (Tamil) / வருத்தினி ஏகாதசி

Varuthini Ekadashi (Tamil) / வருத்தினி ஏகாதசி

ஏகாதசி, ஆன்மீகப் பதிவு
ஏப்ரல் / மே மாதங்களில் தேய்பிறையில் தோன்றக்கூடிய வருத்தினி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மகாராஜா யுதிஸ்ட்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் கூறினார். ஓ! வாசுதேவா, எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன். தயவுசெய்து (ஏப்ரல்/மே) மாதங்களின் தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் பெருமைகளை பற்றியும் எனக்கு விளக்குங்கள்.பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார் என தருமை மன்னா, இந்த ஏகாதசியின் பெயர் வருத்தினி. இது ஒருவருக்கு இந்த வாழ்க்கையிலும் அதற்கு பிறகும் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் ஒரு ஜீவன் தன் பாவ விளைவுகளை குறைத்துக்கொண்டு, நிரந்தரமான ஆனந்தத்தை அடைந்து மிகுந்த பாக்கியசாலி ஆகிறான். இந்த விரதத்தை கடைப்பிடிப்...
மோக்ஷத ஏகாதசி

மோக்ஷத ஏகாதசி

ஆன்மீகப் பதிவு, Videos, ஏகாதசி
https://youtu.be/wN9fehB9AAU மோக்ஷத ஏகாதசி மகிமைகுருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணரால் அர்ஜுனருக்கு கீதை சொல்லப்பட்ட நாள் இது என்பது மோக்ஷத ஏகாதசிக்கு மற்றொரு சிறப்பு.மார்கழி மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசியின் மகிமையை விளக்குமாறு கிருஷ்ணரை வேண்டுகிறார் யுதிஷ்டிரர். அந்த ஆர்வமே பாவங்களைப் போக்கி மோக்ஷம் தரவல்லது என்கிறார் கிருஷ்ணர்.இப்புனித நாளில் தூபம், நெய் தீபம், நறு மலர்கள், மற்றும் துளசி மஞ்சரிகளைக் கொண்டு தாமோதரரை வணங்குதல் வேண்டும்.இதன் மகத்துவத்தைக் கேட்போரது இறந்துபோன மூதாதையர் நரகத்திற்குச் சென்றோராயினும் மீண்டு சுவர்கலோகம் செல்வர்.சம்பக நகரம் எனும் அழகிய நகரை வைக்காணசா என்னும் ஒரு பக்தி நிறைந்த மன்னன் ஆண்டு வந்தான். இறந்து போன அவன் தந்தை நரகத்தில் மிகுந்த வேதனை அனுபவிப்பதுபோல் அவனுக்கு ஒரு நாள் கனவு வந்தது. துக்கத்தால் நெகிழ்ந்து போன மன்னன் தன் ஆலோசகர்களான அ...
Panihati Chida-Dahi Festival (Tamil) / பானிஹட்டி சீடா தஹி உற்சவம்

Panihati Chida-Dahi Festival (Tamil) / பானிஹட்டி சீடா தஹி உற்சவம்

திருவிழாக்கள், Festivals-Tamil
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் ரகுநாத தாஸ கோஸ்வாமியும் சந்தித்தல்                இந்த அத்தியாயத்தின் சுருக்கம் பக்தி வினோத தாகூரால் தமது அம்ரித-ப்ராவாஹ-பாஷ்ய உரையில் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பிரேமையின் தெய்வீக வலிப்பினுள் நுழைந்தபோது , இராமானந்த ராயரும் ஸ்வரூப தாமோதாரும் அவரை கவனித்துக் கொண்டனர் . அவர் விரும்பியபடி திருப்திப்படுத்தினர் . ரகுநாத தாஸ் கோஸ்வாமி நீண்ட காலமாக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தாமரைத் தமது திருவடிகளை அடைவதற்கு முயன்று கொண்டிருந்தார் . இறுதியாக , அவர் இல்லத்தை விட்டு விலகி மஹாபிரபுவைச் சந்திக்க வந்தார் . ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு விருந்தாவனத்திற்குப் போகும் வழியில் சாந்திபுரத்திற்குச் சென்றிருந்தபோது , ரகுநாத தாஸ கோஸ்வாமி தமது வாழ்வினை மஹாபிரபுவின் தாமரைத் திருவடிகளில் அர்ப்பணித...
Kartal Course (Tamil)

Kartal Course (Tamil)

Kartal Course (Tamil), Most Viewed, Uncategorized
கர்தால் வகுப்புகர்தால் வகுப்பு (அடிப்படை)இந்த வகுப்பு Bhakti Yogam வளையதலத்தில் அல்லது Bhakti Yogam app மூலம் எளிதில் கற்றுக் கொள்ளலாம், கீழே உள்ள பாடத்திட்டங்கள் Video வாக பார்க்கலாம், உங்களுக்கு சந்தேகம் இருந்தால் "Doubts/சந்தேகம்" என்ற Button கிளிக் செய்வதன் மூலம், எங்கள் குழுவின் நபர்மூலம் தீர்க்கப்படும். வாரம் ஒரு முறை Google Meet மூலம் உங்கள் சந்தேகங்களை Live வகுப்பில் கேட்டுக் கொள்ளலாம். ( What's app , Telegram Group link கீழே உள்ளது)வயது / Age : வயது வரம்பு இல்லை / No age Limitகட்டணம் / Fee : உங்கள் ஆர்வமே / Your interest is the fee** கிருஷ்ணர் பக்தி பற்றி அறிந்திருக்க வேண்டும் / Should know basic of Krishna Consciousnessகர்தால்:சங்கு, மணி, கரதாளம் இவைகளின் ஓசையுடன், மிருதங்கம் மிக இனிமையாக வாசிக்...
Srila Gopala Bhatta Goswami (Tamil) ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி

Srila Gopala Bhatta Goswami (Tamil) ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி

வாழ்க்கை வரலாறு, ஆன்மீகப் பதிவு
   ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி ( வேன்கட பட்டாவின் மகன், ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்) தென்னிந்தியாவின் ஸ்ரீ ரங்கத்தில் தோன்றினார். ஸ்ரீ சைதன்யா மஹாபிரபு வேன்கட பட்டாவின் வீட்டில் நான்கு மாதங்கள் தங்கியிருந்து, குடும்பத்தை கெளடிய வைணவத்திற்கு மாற்றினார். இந்த நேரத்தில் சிறு பாலகனாக கோபால தனிப்பட்ட முறையில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவுக்கு சேவை செய்தார். ஸ்ரீ சைதன்யர் அவரின் எச்சங்களையும் ஆசீர்வாதங்களையும் அன்பாகக் கொடுத்து அவரை ஆச்சார்யாவாக மாற்றினார்.    நான்கு மாதத்தில், சைதன்யா மஹாபிரபு வேன்கட பட்டாவுடன் நெருங்கிய நட்பை வளர்த்துக் கொண்டார், இதை கிருஷ்ணா தாஸ கவிராஜர் "ஷக்ய ரஸா" என்று விவரிக்கிறார். ஒருவருக்கொருவர் சுதந்திரமாக உரையாடுகையில், அவர்கள் பெரும்பாலும் ஒன்றாக சிரிப்பார்கள், கேலி செய்வார்கள். ஒரு நாள் நகைச்சுவையான மனநிலையில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வேன்கடாவிடம் கேட்டார்: ...
ஸ்ரீதாம் மாயாபூரில் பகவான் நரசிம்மர் தோன்றிய வரலாறு

ஸ்ரீதாம் மாயாபூரில் பகவான் நரசிம்மர் தோன்றிய வரலாறு

பகவான் நரஸிம்மர்
ஸ்ரீதாம் மாயாபூரில் பகவான் நரசிம்மர் தோன்றிய வரலாறு(வழங்கியவர்: ஸ்ரீமதி தேவி தாஸி)அசுரர்களின் எதிரி; பக்தர்களின் பாதுகாவலர்அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சர்வதேச தலைமையகம் மேற்கு வங்காளத்திலுள்ள மாயாபூரில் உள்ளது. அங்கு வீற்றிருக்கும் உக்கிர நரசிம்மர் . அங்கு வரும் பக்தர்களைக் கவர்ந்து பற்பல அதிசயங்களை நிகழ்த்தி வருகிறார். அவர் அங்கு தோன்றியதன் அற்புத வரலாற்றினை இங்கு சுருக்கமாக வழங்குகிறோம்.கொள்ளையர்களின் தாக்குதல்1984ம் வருடம், மார்ச் மாதம் 24ம் தேதியன்று மதியம் 12:20 மணியளவில், சுமார் முப்பத்தைந்து குண்டர்கள், ஸ்ரீதாம் மாயாபூரில் உள்ள இஸ்கானின் சந்திரோதய கோயிலை ஆயுதங்களுடனும் குண்டுகளுடனும் தாக்கினர். பக்தர்களை மிகவும் மோசமாக நடத்திய அந்தக் கொள்ளையர்கள், ஸ்ரீல பிரபுபாதரின் மூர்த்தியையும் ஸ்ரீமதி ராதாராணியின் விக்ரஹத்தையும் திருடிச் செல்ல முடிவு செய்தனர். இதனால் மிகவு...
தன்னையறியும் விஞ்ஞானம் – SSR (Audio book)

தன்னையறியும் விஞ்ஞானம் – SSR (Audio book)

Audio
கீழே உள்ள தலைப்பை தேர்ந்தெடுக்கவும்:தன்னிலையறியும் விஞ்ஞானத்தைக் கற்றல் ஆன்மீகக் குருவைத் தேர்ந்தெடுத்தல்வேர்களைக் கண்டறிதல்கிருஷ்ணரையும் கிறிஸ்துவையும் புரிந்துகொள்ளல்நவீன யுகத்தில் யோகப் பயிற்சிஜட பிரச்சனைகளுக்கு ஆன்மீக வழியில்ஆன்மீக எல்லையை ஆராய்தல்பக்குவம் பெறுதல்
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question