Saturday, August 23

Author: பக்தி யோகம் குழு

Mokshada Ekadashi Tamil I மோக்ஷத ஏகாதசி / வைகுந்த ஏகாதசி (பகவத்கீதை உபதேசிக்கப்பட்ட நாள்)

Mokshada Ekadashi Tamil I மோக்ஷத ஏகாதசி / வைகுந்த ஏகாதசி (பகவத்கீதை உபதேசிக்கப்பட்ட நாள்)

ஏகாதசி
https://youtu.be/wN9fehB9AAUகுருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணரால் அர்ஜுனருக்கு கீதை சொல்லப்பட்ட நாள் இது என்பது மோக்ஷத ஏகாதசிக்கு மற்றொரு சிறப்பு.மார்கழி மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசியின் மகிமையை விளக்குமாறு கிருஷ்ணரை வேண்டுகிறார் யுதிஷ்டிரர். அந்த ஆர்வமே பாவங்களைப் போக்கி மோக்ஷம் தரவல்லது என்கிறார் கிருஷ்ணர்.இப்புனித நாளில் தூபம், நெய் தீபம், நறு மலர்கள், மற்றும் துளசி மஞ்சரிகளைக் கொண்டு தாமோதரரை வணங்குதல் வேண்டும்.இதன் மகத்துவத்தைக் கேட்போரது இறந்துபோன மூதாதையர் நரகத்திற்குச் சென்றோராயினும் மீண்டு சுவர்கலோகம் செல்வர்.சம்பக நகரம் எனும் அழகிய நகரை வைக்காணசா என்னும் ஒரு பக்தி நிறைந்த மன்னன் ஆண்டு வந்தான். இறந்து போன அவன் தந்தை நரகத்தில் மிகுந்த வேதனை அனுபவிப்பதுபோல் அவனுக்கு ஒரு நாள் கனவு வந்தது. துக்கத்தால் நெகிழ்ந்து போன மன்னன் தன் ஆலோசகர்களான அந்தணர்களிடம் கூ...
Tulasi-Saligram Vivaha (Tamil) / ஸ்ரீமதி துளசி தேவி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் திருமண விழா

Tulasi-Saligram Vivaha (Tamil) / ஸ்ரீமதி துளசி தேவி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் திருமண விழா

திருவிழாக்கள், Festivals-Tamil
ஸ்ரீ பத்மநாப கோசாய் எழுதிய ஷாலக்ரம மற்றும் துளசியின் திருமணம். துளசியின் திருமணம் பற்றி பிரம்மாவிடம் பண்டைய காலங்களில் நான் கேள்விப்பட்டதை நாரத-பஞ்சராத்திரத்தில் எழுதப்பட்டவற்றின் படி இப்போது விவரிக்கிறேன் என்று ஸ்ரீ வசிஷ்டர் கூறினார். முதலில் துளசியை வீட்டிலோ அல்லது காட்டிலோ நடவு செய்ய வேண்டும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் தனது (துளசியின்) திருமணத்தை செய்யலாம். ஷாலக்ரம மற்றும் துளசியின் திருமணத்தை ஒருவர் நிகழ்த்தக்கூடிய நல்ல காலங்கள் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளன. வடக்கில் சூரியன் நகரும் போது, வியாழன் மற்றும் சுக்கிரன் உதயமாகும், கார்த்திகா மாதத்தில், ஏகாதசி முதல் மஹா மாதத்தில் பெளர்ணமி வரை, மற்றும் திருமணத்திற்கு புனிதமான விண்மீன்கள் தோன்றும் போது, குறிப்பாக பெளர்ணமி நாள். - முதலில் ஒருவர் ஒரு விதானத்தின் (மண்டப) கீழ் யாகத்திற்கு (யஜ்ஞ-குந்தா) ஒரு இடத்தை ஏற்பாடு செய்ய வேண்டு...
Disappearance of Bhishma Dev (Tamil)  / பீஷ்மதேவரின் மரணம்

Disappearance of Bhishma Dev (Tamil) / பீஷ்மதேவரின் மரணம்

Festivals-Tamil
https://youtu.be/8iznMq5N8ZQஸ்ரீ மத் பாகவதம் அத்தியாயம் ஒன்பதுபீஷ்மதேவரின் மரணம்பதம் 1सूत उवाचइति भीत: प्रजाद्रोहात्सर्वधर्मविवित्सया ।ततो विनशनं प्रागाद् यत्र देवव्रतोऽपतत् ॥ १ ॥ஸூத உவாசஇதி பீத: ப்ரஜா-த்ரோஹாத் ஸர்வ-தர்ம-விவித்ஸயாததோ வினசனம் ப்ராகாத் யத்ர தேவ-வ்ரதோ ’பதத்ஸூத உவாச—ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; பீத:—அதனால் அச்சமடைந்து; ப்ரஜா-த்ரோஹாத்—பிரஜைகளைக் கொன்றதால்; ஸர்வ—எல்லா; தர்ம—மத அனுஷ்டானங்கள்; விவித்ஸயா—புரிந்துகொள்ள; தத:—அதன் பிறகு; வினசனம்—போர் நிகழ்ந்த இடத்திற்கு; ப்ராகாத்—அவர் சென்றார்; யத்ர—எங்கு; தேவ-வ்ரத:—பீஷ்மதேவர்; அபதத்—உயிரை விடுவதற்காக படுத்திருந்த.மொழிபெயர்ப்புசூத கோஸ்வாமி கூறினார். குருட்சேத்திரப் போர்க்களத்தில் அநேக பிரஜைகளைக் கொன்றுவிட்டதை எண்ணி அச்சமடைந்த யுதிஷ்டிர மகாராஜன் படுகொலை நிகழ்ந்த இடத்திற்குச் சென்றார். அங்கு,...
Lord Krishna gives Memory & forgetfulness (Tamil) Story / நினைவோ, மறதியோ அளிப்பவர் கிருஷ்ணரே!

Lord Krishna gives Memory & forgetfulness (Tamil) Story / நினைவோ, மறதியோ அளிப்பவர் கிருஷ்ணரே!

மஹாபாரதம்
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டோமத்த: ஸ்ம்ருதிர் க்ஞானம் அபோஹனம் சவேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யோவேதாந்த-க்ருத் வேத-வித் ஏவ சாஹம்நான் எல்லாருடைய இதயத்திலும் வீற்றுள்ளேன், என்னிடமிருந்தே ஞாபகசக்தியும் அறிவும் மறதியும் உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் நானே. உண்மையில், வேதாந்தத்தை தொகுத்தவனும் வேதங்களை அறிபவனும் நானே.- பகவத் கீதை 15.15குருக்ஷேத்திர யுத்தத்தின் பதினான்காம் நாளில் நடந்த நிகழ்ச்சி இது. முந்தைய நாளில் அபிமன்யு கொல்லப்பட்டதால், ஐயத்ரதனை மறுநாள் சூரிய அஸ்தமனத்திற்குள் கொல்வதாக சபதம் எடுத்த அர்ஜூனன், கடுமையாக போர் செய்தான். கௌரவர் தரப்பிலும், துரோணர், கர்ணன் முதற்கொண்டு கடுமையாகப் போர் புரிந்தனர்.ஆனால், கிருஷ்ணரின் கருணையால் அஸ்தமனத்திற்கு முன்பே, சூரியன் மறைக்கப்பட, அதனால் அன்றைய யுத்தம் முடிந்தது என்று நினைத்த ஜெயத்ரதனின் தலையை, கிருஷ்ணரின் அ...
Lord Vamanadeva (Tamil) / ஸ்ரீ வாமனதேவர்

Lord Vamanadeva (Tamil) / ஸ்ரீ வாமனதேவர்

ஸ்ரீ வாமன தேவ்
குள்ள - அவதாரமான பகவான் வாமனதேவர்பகவான் வாமனதேவர் இவ்வுலகில், சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகியவற்றுடன் அதிதியின் கருவிலிருந்து தோன்றினார். அவரது தேகம் கருமை நிறம் கொண்டதாக இருந்தது. அவர் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்திருந்தார். அபிஜித் நட்சத்திரம் உதயமாகியிருந்த சமயத்தில், ஸ்ரவண - துவாதசி எனும் மங்களகரமான வேளையில் பகவான் விஷ்ணு தோன்றினார். அப்போது ( உயர் கிரக அமைப்பு, பரவெளி மற்றும் இந்த பூமி ஆகியவை உட்பட) மூவுலகங்களிலும், தேவர்கள், பசுக்கள், பிராமணர்கள் மற்றும் பருவ காலங்களும் கூட பகவானின் தோற்றத்தால் மகிழ்ச்சியடைந்தனர். எனவே மங்களகரமான இந்நாள் “விஜயா” என்று அழைக்கப்படுகிறது. சத்-சித்-ஆனந்த உடலைக் கொண்டவரான முழுமுதற் கடவுள் கஸ்யபருக்கும், அதிதிக்கும் புதல்வராகத் தோன்றியபோது, அவரது பெற்றோர்கள் மிகவும் ஆச்சரியமடைந்தனர். அவரது தோற்றத்திற்குப்பிறகு. பகவான் குள்ளமான (வாமன) ரூபத்தை மேற்க்கொ...
Srila Prabhupada (Tamil) / ஸ்ரீல பிரபுபாதர்

Srila Prabhupada (Tamil) / ஸ்ரீல பிரபுபாதர்

ஸ்ரீல பிரபுபாதர்
தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் 1896ம் வருடம் கொல்கத்தாவில் முரையான வைஷ்ணவ குடும்பத்தில் தோன்றினார். பக்தித் தொண்டின் நெறிகளை சிறு வயதிலிருந்தே கற்று வந்த அவர்,தனது ஆன்மீக குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி கேஸ்வாமியை 1922ம் வருடம் கொல்கத்தாவில் முதன்முறையாக சந்தித்தார். அறுபத்து நாங்கு கெளடீய மடங்களை நிறுவியிருந்தவரும் புகழ்பெற்ற ஆச்சாரியருமான ஸ்ரீல பக்திசித்தாந்தருக்கு இந்த படித்த இளைஞனை மிகவும் பிடித்திருந்தது, வேதஞானத்தை பிரச்சாரம் செய்யும் பணிக்கு, அதிலும் குறிப்பாக ஆங்கிலம் பேசும் நாடுகளில் ஆங்கிலத்தில் பிரச்சாரம் செய்வதற்கு, வாழ்வை அர்ப்பணிக்கும்படி அந்த இளைஞனைக் கேட்டுக் கொண்டார், பின்னர், 1933இல் ஸ்ரீல பிரபுபாதர் முறையாக அவரிடம் தீட்சை பெற்று சீடரானார்.        ஸ்ரீல பிரபு...
Krishna & Balarama went to Vrindavan (Tamil) / கிருஷ்ண, பலராமரின் பிருந்தாவன விஜயம்

Krishna & Balarama went to Vrindavan (Tamil) / கிருஷ்ண, பலராமரின் பிருந்தாவன விஜயம்

பகவான் பலராமர்
 யாதவர்களும், வேறு பல அரசர்களும் ஒரு சூரிய கிரகணத்தின் போது குருட்சேத்திரத்தில் சந்தித்ததையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய விஷயங்களை விவாதித்ததையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது. கிருஷ்ணர் தந்த மகாராஜனையும், மற்ற பிருந்தாவன வாசிகளையும் குருட்சேத்திரத்தில் சந்தித்து அவர்களை மகிழ்வித்ததையும் இது விவரிக்கிறது. முழு சூரிய கிரகணம் நிகழப்போவதை அறிந்து யாதவர்கள் உட்பட்ட பாரத-வர்ஷ மக்கள், விசேஷ புண்ணிய பலன்களைப் பெற குருட்சேத்திரத்தில் திரண்டனர். யாதவர்கள் நீராடி மற்ற கிரியைகளையும் நிறைவேற்றியபின், மத்ஸ்யம், உசீனரம் முதலான தேசத்தரசர்களும் அங்கு வந்திருப்பதைக் கண்டனர். மேலும், எப்பொழுதும் கிருஷ்ணரின் ஆழ்ந்த பிரிவுத் துயரை அனுபவித்துக் கொண்டிருக்கும் நந்த மகாராஜனும், மற்ற விரஜ வாசிகளும்கூட வந்திருப்பதைக் கண்டனர். இப்பழைய நண்பர்களையெல்லாம் கண்டு பெருமகிழ்ச்சியடைந்த யாதவர்கள், அவர்கள...
Lord Balaram’s yatra (Tamil) /பகவான் பலராமரின் தீர்த்த யாத்திரை

Lord Balaram’s yatra (Tamil) /பகவான் பலராமரின் தீர்த்த யாத்திரை

பகவான் பலராமர்
 பகவான் பலராமர் பல்வலனைக் கொன்று பிராமணர்களை மகிழ்வித்ததையும், பல்வேறு யாத்திரை ஸ்தலங்களில் அவர் நீராடியதையும், பீமசேனருக்கும், துரியோதனனுக்கும் யுத்தத்தைக் கைவிடும் படி அவர் புத்தி கூறியதையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது. நைமிஷாரண்ய வனத்திலுள்ள முனிவர்களின் யாக அரங்கத்தில், வளர்பிறையன்று கடுமையான காற்று வீசத் துவங்கியது. அருவருப் பான சீழ்நாற்றத்தைப் பரவச்செய்த அக்காற்று, அனைத்தையும் புழுதி யால் மறைத்தது. பிறகு அசுரனான பல்வலன் தன் கையில் ஒரு சூலத்துடன் அங்கு தோன்றினான். அவனது பூதாகாரமான உடல் மையிருட்டாகவும், அவனது முகம் மிகவும் பயங்கரமாகவும் இருந்தன. அந்த அசுரனைத் தமது கலப்பையால் பற்றியிழுத்த பகவான் பலராமர், தமது கதையால் அவனது தலையில் கொடூரமாக அடித்து அவனைக் கொன்றார். முனிவர்கள் பகவான் பலராமரின் பெருமைகளைப் பாடி, அவ ருக்கு ஏராளமான சன்மானங்களை அளித்தனர். பகவான் பலராம...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.