
Lord Vamanadeva (Tamil) / ஸ்ரீ வாமனதேவர்
குள்ள - அவதாரமான பகவான் வாமனதேவர்
பகவான் வாமனதேவர் இவ்வுலகில், சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகியவற்றுடன் அதிதியின் கருவிலிருந்து தோன்றினார். அவரது தேகம் கருமை நிறம் கொண்டதாக இருந்தது. அவர் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்திருந்தார். அபிஜித் நட்சத்திரம் உதயமாகியிருந்த சமயத்தில், ஸ்ரவண - துவாதசி எனும் மங்களகரமான வேளையில் பகவான் விஷ்ணு தோன்றினார். அப்போது ( உயர் கிரக அமைப்பு, பரவெளி மற்றும் இந்த பூமி ஆகியவை உட்பட) மூவுலகங்களிலும், தேவர்கள், பசுக்கள், பிராமணர்கள் மற்றும் பருவ காலங்களும் கூட பகவானின் தோற்றத்தால் மகிழ்ச்சியடைந்தனர். எனவே மங்களகரமான இந்நாள் “விஜயா” என்று அழைக்கப்படுகிறது. சத்-சித்-ஆனந்த உடலைக் கொண்டவரான முழுமுதற் கடவுள் கஸ்யபருக்கும், அதிதிக்கும் புதல்வராகத் தோன்றியபோது, அவரது பெற்றோர்கள் மிகவும் ஆச்சரியமடைந்தனர். அவரது தோற்றத்திற்குப்பிறகு. பகவான் குள்ளமான (வாமன) ரூபத்தை மேற்க்க...