
Sri Baladeva Vidyabhushana (Tamil)
ஸ்ரீ பலதேவ வித்யா பூஷணர்ஸ்ரீ பலதேவ வித்யபூஷணர் (ஸ்ரீ கோவிந்த தாசர்) 1600-களில் ஒரிசாவில் உள்ள ரெமுனா அருகே தோன்றினார். அவர் தனது இளமைப் பருவத்தில், சமஸ்கிருத இலக்கணம், கவிதை மற்றும் தர்க்கம் ஆகியவற்றில் புலமை பெற்றார். சங்கரர் மற்றும் மத்வர் ஆகியோரின் விளக்க உரைகளை கவனமாகப் படித்த பிறகு, ஸ்ரீபாத மத்வாச்சாரியாரின் தத்துவ-வாதி சீடப் பரம்பரையில் தீட்சை பெற்றார். பலதேவ வித்யபூஷணர் ஒரு திக் விஜய பண்டிதராக (அனைத்து எதிரிகளையும் வெல்பவர்) மாறி, புனித தலங்களுக்குச் செல்ல ஆரம்பித்தார். அவர் சென்ற இடமெல்லாம் உள்ளூர் முனிவர்கள், அறிஞர்கள் மற்றும் சந்நியாசிகளை விவாதத்தில் தோற்கடித்தார்.ஜெகநாத புரியில், ஸ்ரீ ராதா-தாமோதர கோஸ்வாமியிடமிருந்து ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் மிகச்சிறந்த தத்துவத்தைக் கற்றுக் கொண்டார், மேலும் கௌடிய வைஷ்ணவத்திற்கு மாறிய பிறகு அவரிடம் தீட்சை பெற்றார். பிருந்தாவனத்தில், ஸ்ரீல வ...



