பகவத் கீதை – 13.18
ஜ்யோதிஷாம் அபி தஜ் ஜ்யோதிஸ்தமஸ: பரம் உச்யதேக்ஞானம் க்ஞேயம் க்ஞான-கம்யம்ஹ்ருதி ஸர்வஸ்ய விஷ்டிதம்வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்ஜ்யோதிஷாம்—பிரகாசிக்கின்ற பொருள்கள் எல்லாவற்றிலும்; அபி—கூட; தத்—அந்த; ஜ்யோதி—ஒளியின் மூலம்; தமஸ:—இருட்டு; பரம்—அப்பாற்பட்ட; உச்யதே—கூறப்படுகின்றது; க்ஞானம்—அறிவு; க்ஞேயம்—அறியப்படும் பொருள்; க்ஞான-கம்யம்—அறிவின் இலக்கு; ஹ்ருதி—இதயத்தில்; ஸர்வஸ்ய—ஒவ்வொருவரின்; விஷ்டிதம்—வீற்றுள்ளார்.மொழிபெயர்ப்புபிரகாசிக்கும் பொருள்கள் எல்லாவற்றிற்கும் மூலம் அவரே. அவர் ஜடத்தின் இருட்டிற்கு அப்பாற்பட்டவராகவும் தோன்றாதவராகவும் உள்ளார். அவரே அறிவாகவும், அறியப்படும் பொருளாகவும், அறிவின் இலக்காகவும் உள்ளார். அவர் ஒவ்வொருவருடைய இதயத்திலும் வீற்றுள்ளார்.பொருளுரைசூரியன, சந்திரன், மற்றும் நட்சத்திரங்களைப் போன்று பிரகாசிக்கும் பொருள்கள் எல்லாவற்றிலும் ஒளியின் மூலமாக இருப்பது ப...