Friday, July 26

ஆன்மீகப் பதிவு

Chaturmas (Tamil) / சாதுர்மாஸ்யம்

Chaturmas (Tamil) / சாதுர்மாஸ்யம்

ஆன்மீகப் பதிவு, திருவிழாக்கள்
சாதுர்மாஸ்ய காலம் என்பது ஆஷாட (ஜுன் - ஜுலை ) மாதத்தில் வளர்பிறை ஏகாதசியான ஷயன ஏகாதசியிலிருந்து தொடங்கி, கார்த்திக ( அக்டோபர்- நவம்பர்) மாதத்தின் வளர்பிறை ஏகாதசியான உத்தான ஏகாதசியன்று முடிகிறது. இந்த நான்கு மாத காலமானது “சாதுர்மாஸ்யம்” என்று அறியப்படுகிறது. வைஷ்ணவர்கள் சிலர் இதனை ஆஷாட மாதத்தின் பெளர்ணமி நாளிலிருந்து கார்த்திக மாதத்தின் பெளர்ணமி நாள் வரை அனுசரிக்கின்றனர். இதுவும் நான்கு மாத காலமாகும். சந்திர மாதங்களை வைத்து கணக்கிடப்படும் இந்த காலம் சாதுர்மாஸ்யம் எனப்படுகிறது. சூரிய மாதத்தினைப் பின்பற்றுவோர் சிராவண மாதத்திலிருந்து கார்த்திக மாதம் வரை சாதுர்மாஸ்யத்தை அனுசரிக்கின்றனர். சூரிய மாதமோ சந்திர மாதமோ, ஒட்டு மொத்த காலமும் மழைக்காலத்தின்போது வருகிறது. சாதுர்மாஸ்யம் எல்லாத் தரப்பட்ட மக்களாலும் அனுசரிக்கப்பட வேண்டும். கிரஹஸ்தரா (குடும்பத்தினர்) சந்நியாசியா என்பது பொருட்டல்ல. இத...
Akshaya Tritiya (Tamil) / அட்சய திரிதியை

Akshaya Tritiya (Tamil) / அட்சய திரிதியை

ஆன்மீகப் பதிவு, திருவிழாக்கள்
1. பரசுராமர் அவதரித்த திருநாள்2. கங்கை நதி இவ்வுலகிற்கு வந்த நாள்3. பக்தன் சுதாமர் துவாரகாவில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இல்லத்திற்கு சென்ற நாள்.4. பாண்டவர்கள் சூரியதேவனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்,5. வியாச தேவரால் மஹாபாரதம் இன்று தான் எழுதப்பட்டது.6. திரேதாயுகம் தொடங்கிய நாள்7. “கனகதரஸ்தோத்ரம்” ஆதிசங்கராச்சாரியரால் இன்று இயற்றப்பட்டது.8. குபேரருக்கு இன்று செல்வத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது, அன்னபூரணிதேவி தோன்றிய நாளாகக் கருதப்படுகிறது.9. இந்நன்னாளில் ஜெகந்நாதரின் ரதயாத்திரைக்கான ரதம் செய்யும் பணி தொடங்கும்.10. கீர்ஷோர் கோபிநாத் (ரெமுன, ஒரிஸா), மதன மோகன், கோவிந்தா மற்றும் கோபிநாத் விக்ரகங்களுக்கு சந்தன் யாத்திரை தொடங்கும் நாள்11. இன்றிலிருந்து 21 நாட்களுக்கு, வைசாக மாதத்தின் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக விருந்தாவனத்தில் பகவான் ஸ்ரீ ராதா கிருஷ்ணருக்கு சந்தன காப்பு அலங்கா...
Sat-Tila Ekadashi (Tamil) / சத்தில ஏகாதசி

Sat-Tila Ekadashi (Tamil) / சத்தில ஏகாதசி

ஆன்மீகப் பதிவு, ஏகாதசி
ஒரு முறை நாரத முனி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் இந்த சத்தில ஏகாதசியின் மகிமையைப்பற்றி கேட்க, அதற்கு பகவான் கூறினார்.            முன்பு ஒரு காலத்தில் ஒரு பிராமணப் பெண் ஒருத்தி என்னை அன்புடன் பூஜித்து வந்தாள். விரதங்களை (ஏகாதசி, கோகுலாஷ்டமி, இராம நவமி…முதலியன) தவறாமல் அனுசரித்தும், வேண்டியவர்களுக்கு தானங்களை கொடுத்தும், எந்த வித பலனையும் எதிர்பாராமல் என்னையும் பூஜித்தும் வந்தாள். ஆனால், அவளிடம் ஒரு பழக்கம் உண்டு. உணவை பிராமணர்களுக்கோ மற்ற தேவர்களுக்கோ அளிக்க மாட்டாள். இதை நானும் எண்ணிக் கொண்டிருந்தேன். இவள் தன் கடும் விரதங்களாலும், பூஜைகளாலும் என் உலகை அடையத்தகுந்தவள் என்றாலும் நான் அவளை சோதிக்க எண்ணி, மண்டை ஓடு மாலை அணிந்த சிவணடியார் வேடம் பூண்டு அவளிடம் சென்றேன். அவளிடம் நான் பிச்சை கேட்க, அவள் கோபமுடன் சேற்றை (களிமண்) என் பிச்சை...
அயோத்தியா

அயோத்தியா

ஆன்மீகப் பதிவு, ஸ்ரீ இராமச்சந்திர பகவான்
அயோத்தியா- பகவான் இராமசந்திரரின் திருத்தலம்அழகான சரயு நதிக்கரை, 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்று, ஸ்ரீ இராமர் பிறந்த புண்ணிய பூமி. அவர் சுமார் 12,000 ஆண்டுகள் ஆட்சி செய்த ஸ்தலம், சமீப கால இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பிய இடம் என பல்வேறு அடைமொழிகளைக் கொண்டு, உத்திர பிரதேச மாநிலத்தின் பைசாபாத் நகரிலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அயோத்தியாவிற்குச் செல்ல வேண்டும் என்ற எமது நீண்டநாள் விருப்பம் சமீபத்தில் நிறைவேறியது.இராம ஜென்ம பூமிஅயோத்தியாவிற்குச் செல்பவர்கள் அனைவரும் தவறாமல் பார்க்கக்கூடிய இடம், இராம ஜென்ம பூமி. பகவான் ஸ்ரீ இராமர் தனது லீலைகளை அரங்கேற்றுவதற்காக இவ்வுலகில் அவதரித்த இடம், தற்போது இராம ஜென்ம பூமி என்று அழைக்கப்படுகிறது. அந்த சிறப்பு வாய்ந்த இடத்தைக் காண்பதற்காக நாங்களும் சென்றோம். சமீப காலத்தின் பல்வேறு சர்ச்சைகளின் காரணமாக, இராம ஜென்ம பூமி தற்போது...
Saphala Ekadashi (Tamil) / சபலா ஏகாதசி

Saphala Ekadashi (Tamil) / சபலா ஏகாதசி

ஏகாதசி, ஆன்மீகப் பதிவு
சபலா ஏகாதசி, மார்கழி மாத (டிசம்பர் / ஜனவரி) தேய்பிறையில் தோன்றுகிறது. இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கேட்டார். ஓ! கிருஷ்ணா, மார்கழி மாத (டிசம்பர் / ஜனவரி) தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? மற்றும் அதனை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் என்பதை எனக்கு விவரமாகக் கூறுங்கள்.பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். பரத வம்சத்தில் சிறந்தோனே. பாம்புகளின் ஆதிசேஷன் எவ்வாறு சிறந்ததோ, பறவைகளில் கருடன் எவ்வாறு சிறந்ததோ, யாகங்களில் எவ்வாறு அஸ்வமேத யாகம் சிறந்ததோ, நதிகளில் கங்கை எவ்வாறு சிறந்ததோ, அனைத்து தேவர்களிலும் விஷ்ணு எவ்வாறு சிறந்தவரோ, மற்றும் மனிதர்களில் அந்தணர்கள் எவ்வாறு சிறந்தவர்களோ, அவ்வாறே அனைத்து விரதங்களிலும் ஏகாதசி விரதம் மிகச் சிறந்தது. ஓ, மன்னர...
பக்தனின் வாக்கைக் காப்பாற்றும் பகவான்

பக்தனின் வாக்கைக் காப்பாற்றும் பகவான்

ஆன்மீகப் பதிவு, Festivals-Tamil, திருவிழாக்கள்
கிருஷ்ணருக்கும் பக்தனுக்கும் இடையில் நிகழும் அன்புப் பரிமாற்றங்கள் மிகவும் இனிமையானவை. பகவானின் சொல்லை பக்தன் தட்ட மாட்டான் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். ஆனால் பக்தனின் சொல்லையும் பகவான் தட்ட மாட்டார் என்பதை நீங்கள் அறிவீர்களா?அன்னை யசோதையால் உரலில் கட்டிப்போடப்பட்ட கிருஷ்ணர் அந்த உரலுடன் நகர்ந்து இரண்டு மரங்களை வீழ்த்தி குபேரனின் இரண்டு மகன்களை விடுவித்தார். இந்த லீலையில் கிருஷ்ணர் எவ்வாறு தனது அன்பிற்குரிய பக்தரான நாரதரின் வார்த்தைகளை நிரூபித்தார் என்பதை சற்று காணலாம்.கிருஷ்ணர் செய்த குறும்புச் செயல்"அம்மா பசிக்குது," என்றபடி கிருஷ்ணர் தயிர்கடைந்து கொண்டிருந்த அன்னை யசோதையின் முந்தானையைப் பிடித்து அன்புடன் இழுக்கின்றார். குழந்தையைத் தடுக்க முடியாமல் அவனை எடுத்து மடியில் கிடத்தி அந்த அழகிய திருமுகத்தை ரசித்தபடி யசோதை பால் கொடுக்கத் தொடங்கினாள். கிருஷ்ணரும் அன்னையின் அன்பி...
கம்யூனிச ரஷ்யாவில் கிருஷ்ண பக்தி எவ்வாறு பரவியது? / Krishna Consciousness in Russia

கம்யூனிச ரஷ்யாவில் கிருஷ்ண பக்தி எவ்வாறு பரவியது? / Krishna Consciousness in Russia

ஆன்மீகப் பதிவு
ஹரே கிருஷ்ண இயக்கம் என்று பரவலாக அறியப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) மிகவும் குறுகிய காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வாகும். தற்போது இந்தியாவிற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் கிருஷ்ண பக்தர்கள் வாழும் நாடாக ரஷ்யா திகழ்கிறது. ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பனிப்போரினால் உலக நாடுகளெல்லாம் அச்சம்கொள்ளும் அளவிற்கு ரஷ்யா வலிமையாக இருந்த காலகட்டத்தில், கடவுள் மறுப்புக் கொள்கை வேரூன்றியிருந்த கம்யூனிச நாடான ரஷ்யாவில் கிருஷ்ண பக்தி விதைக்கப்பட்டு வளர்ந்த விதம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கக்கூடியதாகும். இத்தகு அதிசயம் எவ்வாறு நிகழ்ந்தது? அறிந்துகொள்ளலாம் வாருங்கள்!ஸ்ரீல பிரபுபாதரின் ரஷ்ய விஜயம்அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) 1966ஆம் ஆண்டு தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதரால் அமெரிக்காவில் ஸ்...
நம்பிக்கை / Faith (Tamil)

நம்பிக்கை / Faith (Tamil)

ஆன்மீகப் பதிவு
நம்பிக்கைஆன்மீக வாழ்வின் அஸ்திவாரம்நம்பிக்கை ஆன்மீக முன்னேற்றத்தின் அஸ்திவாரம். நம்பிக்கையுடன் இருப்பது நமது இயற்கையாகும். ஆனால் அந்த நம்பிக்கை எப்படி பட்டதாக இருக்க வேண்டும்?பொதுவாக நம்பிக்கையில் பல வகைகள் இருக்கின்றன. இருப்பினும் நம்பிக்கையை குறிப்பாக இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று ஆன்மீக நம்பிக்கை, மற்றொன்று பௌதிக நம்பிக்கை.ஆன்மீக நம்பிக்கைஸ்ரீலரூப கோஸ்வாமி அவர்கள் இந்த ஆன்மீக நம்பிக்கையை 'ஆஷா பந்த' என்று குறிப்பிடுகிறார். ஆன்மீக நம்பிக்கை இருக்கக் கூடிய ஒரு பக்தர், “நான் என்னால் முடிந்தவரை பக்தி நெறிகளை கடைபிடித்து வருகின்றேன். ஆகவே எப்படியாவது என்றைக்காவது நான் பகவானின் கருணையை பெறுவேன். கண்டிப்பாக என்னால் பகவானிடம் திரும்பிச் செல்ல முடியும். எனக்கு எந்த விதமான தகுதியும், ஞானமும், பகவானின் மேல் அன்பும் இல்லை என்றாலும், நான் பகவானிடம் செல்ல விரும்புகின்றேன். ...
பரம ஏகாதசி / Parama Ekadashi (Tamil)

பரம ஏகாதசி / Parama Ekadashi (Tamil)

ஏகாதசி, ஆன்மீகப் பதிவு
தற்போது வரக்கூடிய ஏகாதசி, 32 மாதங்களுக்கு ஒருமுறை வரும் #பரம ஏகாதசி ஆகும். வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும், 32 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு மாதம் சேர்க்கப்படுகிறது. புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த 'அதிக' (Adhika) மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பத்மினி ஏகாதசி' என்றும் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பரம ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த வருடம் 'அதிக' மாதம் வந்துள்ளது.யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக் கேட்கிறார். "பரம்பொருளே, மதுஸூதனா! 'அதிக' மாதத்தில், கிருஷ்ண பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம். பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகளைக் கூறுங்கள்" என்று, யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டுகிறார்.பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், "ஓ யுதிஷ்...
Improve in Bhakti step by step (Tamil) / படிப்படியாகப் பக்தியில் முன்னேறுதல்

Improve in Bhakti step by step (Tamil) / படிப்படியாகப் பக்தியில் முன்னேறுதல்

கதைகள், ஆன்மீகப் பதிவு
மனிதனாக பிறவி எடுத்த அனைவருக்குமே ஐடம் புலன் இன்பத்தில் கூடநாட்டம் உண்டு. புலனின்பத்தை முற்றிலுமாகத் தவிர்த்து, கிருஷ்ண பக்தியை நேரடியாகவோ அல்லது முழு மையாகவோ ஏற்றுக் கொண்டு பயிற்சி செய்வது என்பது எல்லோருக்கும் இயலாத ஒரு காரியம்.ஜடப் புலனின்பத்தை விரும்பித் தான் அனை வரும் இவ்வுலகில் செயல்படுகின்றனர். புலன் இன்பத்தை விரும்பும் இவர்கள், முழு கிருஷ்ண பக்தியில் ஈடுபட இயலாமல் போகலாம். ஆனால், தங்களுடையப் புலனின்பத்தை நிறைவேற்றிக் கொள்ள வேதங்களால் ஒழுங்குபடுத்தப் பட்ட வகையில், வேதங்கள் பயிலல், யாகங்கள், தவங் கள், தான தர்மங்கள் செய்தல் ஆகியவற்றைப் பக்தி யுடன் செய்யலாம்.இவ்வாறு செய்வதால் படிப்படியாகக் கிருஷ்ண உணர்வில் அவர்கள் முன்னேற வாய்ப்பு உண்டு. சிறிதளவாகிலும் இவ்வாறு கிருஷ்ண உணர்வை வளர்த்துக் கொண்டுள்ள ஒருவனை, நேரடியாகக் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்தி விடலாம்.ஆகையால், கிருஷ்ண...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question