Wednesday, January 22

ஆன்மீகப் பதிவு

Sri Jayadeva Goswami (Tamil) / ஸ்ரீ ஜெயதேவ கோஸ்வாமி

Sri Jayadeva Goswami (Tamil) / ஸ்ரீ ஜெயதேவ கோஸ்வாமி

வாழ்க்கை வரலாறு, ஆன்மீகப் பதிவு
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தோன்றுவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெயதேவ கோஸ்வாமி வங்காள மன்னர் ஸ்ரீ லட்சுமண சேனாவின் நீதிமன்ற பண்டிதராக பணியாற்றினார். ஜெயதேவ மற்றும் பத்மாவதி (அவரது மனைவி, ஒரு நடனக் கலைஞர்) ஸ்ரீ கிருஷ்ணரை தீவிர பக்தியுடன் வழிபடுவார்கள். சிறிது காலம் கழித்து, நவத்விபாவின் சம்பஹட்டியில் உள்ள ஒரு புல் குடிசையில் நிம்மதியாக வாழ அவர் செழிப்பான அரச வாழ்க்கையை விட்டுவிட்டார். அங்கு ஜெயதேவ கீத கோவிந்தத்தை எழுதினார்.ஒரு நாள் ஜெயதேவர் கீத கோவிந்தம் எழுதும் போது, ​​"ஸ்ரீமதி ராதாரணியின் தாமரை பாதங்களைத் தொட ஸ்ரீ கிருஷ்ணர் விழைந்தார்" என்று எழுதத் தூண்டப்படுகிறார். முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் நிலையை குறைக்கக் கூடிய ஒன்றைச் சொல்ல ஜெயதேவர் தயங்கினார், ராதா-மாதவாவின் மகா-பிரசாதத்தை ஏற்க்கும் முன்பு கங்கை குளியல் மூலம் தன்னை தூய்மை படுத்திக் கொள்ளச் சென்றார்....
Putrada Ekadashi (Tamil) / புத்ரதா ஏகாதசி

Putrada Ekadashi (Tamil) / புத்ரதா ஏகாதசி

ஏகாதசி, ஆன்மீகப் பதிவு
https://youtu.be/ploD_JOK7jg புத்ரதா ஏகாதசி மகிமை - Videoபுத்ரதா ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.அர்ஜூனன் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதாரவிந்தங்களில் நமஸ்கரித்து, சிரத்தையுடனும் பணிவுடனும் கிருஷ்ணரிடம், " ஹே சச்சிதானந்த பரம் பொருளான ஸ்ரீ கிருஷ்ணா!, இப்பொழுது தை மாதம் சுக்லபட்ச ஏகாதசியைப் பற்றி கூறுங்கள்" என்று வேண்டி நின்றான். இந்த ஏகாதசியின் மகத்துவம், அதன் பெயர், அன்று வழிபட வேண்டிய தெய்வம், விரத வழிமுறைகள், இவற்றைப்பற்றி எல்லாம் விரிவாக உபதேசிக்க வேண்டும்" என்றான்.அர்ஜூனின் வேண்டுகோளைக் கேட்ட ஸ்ரீ கிருஷ்ணர்," ஹே ராஜனே, புஷ்ய (தை) மாதம் சுக்ல பட்ச ஏகாதசி, புத்ரதா ஏகாதசி என்னும் பெயரால் அறியப்படுகிறது. முந்தைய ஏகாதசி மஹாத்மியங்களில் கூறிய பூஜை விதிகளின் படி அன்று பூஜை செய்ய வேண்டும். விரதநாளன்று வழிபட வேண்டிய தெய்வம் ஸ்ரீமன் நாராயணன் ஆவார். இவ்வுலகில் புத்ரதா ஏகாதசி விரதத்...
Srila Bhaktisiddhanta Sarasvati Thakura (Tamil) / ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரா

Srila Bhaktisiddhanta Sarasvati Thakura (Tamil) / ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரா

ஆன்மீகப் பதிவு, வாழ்க்கை வரலாறு
ஸ்ரீல அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த ஸரஸ்வதி தாகூரா, ஸ்ரீ க்ஷேத்ர தாமில் (ஜெகந்நாத் பூரியில்) தோன்றினார். தனது குழந்தைப் பருவத்தில் அவர் விரைவாக வேதங்களை கற்றுத்தேர்ந்தார், பகவத் கீதையை மனப்பாடம் செய்தார், மேலும் தனது தந்தையின் தத்துவ படைப்புகளை கண்டு மகிழ்ந்தார். அவர் தனது பரந்த அறிவுக்கு "தி லிவிங் என்சைக்ளோபீடியா" என்று அறியப்பட்டார்.               கெளடிய வைஷ்ணவத்திலிருந்து சாதி மற்றும் தத்துவ விலகல்களுக்கு எதிராக அவர் உறுதியாக பிரசங்கித்தார். நான்கு வைஷ்ணவ சம்பிரதாயங்களையும் அவர்களின் போதனைகளையும் வெளியிட்டு ஒன்றிணைக்க முயன்றார். ஸ்ரீல சரஸ்வதி தாகூரா வைஷ்ணவ சித்தாந்தத்தின் அச்சமற்ற மற்றும் சக்திவாய்ந்த விநியோகத்திற்காக நரிசிம்ஹ குரு என்ற பட்டத்தை பெற்றார். "சிம்ஹ குருவை" எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற...
Saphala Ekadashi (Tamil) / சபலா ஏகாதசி

Saphala Ekadashi (Tamil) / சபலா ஏகாதசி

ஏகாதசி, ஆன்மீகப் பதிவு
சபலா ஏகாதசி, மார்கழி மாத (டிசம்பர் / ஜனவரி) தேய்பிறையில் தோன்றுகிறது. இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கேட்டார். ஓ! கிருஷ்ணா, மார்கழி மாத (டிசம்பர் / ஜனவரி) தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? மற்றும் அதனை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் என்பதை எனக்கு விவரமாகக் கூறுங்கள்.பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். பரத வம்சத்தில் சிறந்தோனே. பாம்புகளின் ஆதிசேஷன் எவ்வாறு சிறந்ததோ, பறவைகளில் கருடன் எவ்வாறு சிறந்ததோ, யாகங்களில் எவ்வாறு அஸ்வமேத யாகம் சிறந்ததோ, நதிகளில் கங்கை எவ்வாறு சிறந்ததோ, அனைத்து தேவர்களிலும் விஷ்ணு எவ்வாறு சிறந்தவரோ, மற்றும் மனிதர்களில் அந்தணர்கள் எவ்வாறு சிறந்தவர்களோ, அவ்வாறே அனைத்து விரதங்களிலும் ஏகாதசி விரதம் மிகச் சிறந்தது. ஓ, மன்னர...
Kamika Ekadashi / காமிகா ஏகாதசி( கிருஷ்ண‌பட்ச ஏகாதசி)

Kamika Ekadashi / காமிகா ஏகாதசி( கிருஷ்ண‌பட்ச ஏகாதசி)

ஆன்மீகப் பதிவு, ஏகாதசி
காமிகா ஏகாதசியின் விரத மகிமை நாம் காண்போம்.மஹான்களைப் போன்று புண்ணியசீலரான யுதிஷ்டிர மஹாராஜா ஸ்ரீ கிருஷ்ணரிடம் - " மேலான பரம்பொருளே ! ஆஷாட, மாத சுக்லபட்சத்தில் வரும் புண்ணிய திதியான தேவசயனி ஏகாதசியைப் பற்றியும், அந்நாளில் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதால் கிட்டும் ஒப்பற்ற பலன்களை பற்றியும் அறிந்து கொண்டேன்.இப்பொழுது ஆஷாட ,சிராவண மாதத்தின் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி திதியைப்பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஆகையால் கோவிந்தா, என் மீது கருணை கொண்டு, அந்த ஏகாதசியின் பெருமைகளை விரிவாக சொல்லுங்கள். முதன்மையான தெய்வமே, வாசுதேவா!, எனது பணிவான நமஸ்காரங்களை தங்களது திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்" என்று கூறினார்.ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு பதிலளிக்கையில் - " தர்மத்தை எந்நிலையிலும் விடாது காக்கும் யுதிஷ்டிரா, ஒருவனது பாபங்களை எல்லாம் அழித்து சுபவிளைவுகளை ஏற்படுத்தும் ஏகாதசி உபவாசத்தி...
Chaturmas (Tamil) / சாதுர்மாஸ்யம்

Chaturmas (Tamil) / சாதுர்மாஸ்யம்

ஆன்மீகப் பதிவு, திருவிழாக்கள்
சாதுர்மாஸ்ய காலம் என்பது ஆஷாட (ஜுன் - ஜுலை ) மாதத்தில் வளர்பிறை ஏகாதசியான ஷயன ஏகாதசியிலிருந்து தொடங்கி, கார்த்திக ( அக்டோபர்- நவம்பர்) மாதத்தின் வளர்பிறை ஏகாதசியான உத்தான ஏகாதசியன்று முடிகிறது. இந்த நான்கு மாத காலமானது “சாதுர்மாஸ்யம்” என்று அறியப்படுகிறது. வைஷ்ணவர்கள் சிலர் இதனை ஆஷாட மாதத்தின் பெளர்ணமி நாளிலிருந்து கார்த்திக மாதத்தின் பெளர்ணமி நாள் வரை அனுசரிக்கின்றனர். இதுவும் நான்கு மாத காலமாகும். சந்திர மாதங்களை வைத்து கணக்கிடப்படும் இந்த காலம் சாதுர்மாஸ்யம் எனப்படுகிறது. சூரிய மாதத்தினைப் பின்பற்றுவோர் சிராவண மாதத்திலிருந்து கார்த்திக மாதம் வரை சாதுர்மாஸ்யத்தை அனுசரிக்கின்றனர். சூரிய மாதமோ சந்திர மாதமோ, ஒட்டு மொத்த காலமும் மழைக்காலத்தின்போது வருகிறது. சாதுர்மாஸ்யம் எல்லாத் தரப்பட்ட மக்களாலும் அனுசரிக்கப்பட வேண்டும். கிரஹஸ்தரா (குடும்பத்தினர்) சந்நியாசியா என்பது பொருட்டல்ல. இத...
Akshaya Tritiya (Tamil) / அட்சய திரிதியை

Akshaya Tritiya (Tamil) / அட்சய திரிதியை

ஆன்மீகப் பதிவு, திருவிழாக்கள்
1. பரசுராமர் அவதரித்த திருநாள்2. கங்கை நதி இவ்வுலகிற்கு வந்த நாள்3. பக்தன் சுதாமர் துவாரகாவில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இல்லத்திற்கு சென்ற நாள்.4. பாண்டவர்கள் சூரியதேவனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்,5. வியாச தேவரால் மஹாபாரதம் இன்று தான் எழுதப்பட்டது.6. திரேதாயுகம் தொடங்கிய நாள்7. “கனகதரஸ்தோத்ரம்” ஆதிசங்கராச்சாரியரால் இன்று இயற்றப்பட்டது.8. குபேரருக்கு இன்று செல்வத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது, அன்னபூரணிதேவி தோன்றிய நாளாகக் கருதப்படுகிறது.9. இந்நன்னாளில் ஜெகந்நாதரின் ரதயாத்திரைக்கான ரதம் செய்யும் பணி தொடங்கும்.10. கீர்ஷோர் கோபிநாத் (ரெமுன, ஒரிஸா), மதன மோகன், கோவிந்தா மற்றும் கோபிநாத் விக்ரகங்களுக்கு சந்தன் யாத்திரை தொடங்கும் நாள்11. இன்றிலிருந்து 21 நாட்களுக்கு, வைசாக மாதத்தின் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக விருந்தாவனத்தில் பகவான் ஸ்ரீ ராதா கிருஷ்ணருக்கு சந்தன காப்பு அலங்கா...
Sat-Tila Ekadashi (Tamil) / சத்தில ஏகாதசி

Sat-Tila Ekadashi (Tamil) / சத்தில ஏகாதசி

ஆன்மீகப் பதிவு, ஏகாதசி
ஒரு முறை நாரத முனி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் இந்த சத்தில ஏகாதசியின் மகிமையைப்பற்றி கேட்க, அதற்கு பகவான் கூறினார்.            முன்பு ஒரு காலத்தில் ஒரு பிராமணப் பெண் ஒருத்தி என்னை அன்புடன் பூஜித்து வந்தாள். விரதங்களை (ஏகாதசி, கோகுலாஷ்டமி, இராம நவமி…முதலியன) தவறாமல் அனுசரித்தும், வேண்டியவர்களுக்கு தானங்களை கொடுத்தும், எந்த வித பலனையும் எதிர்பாராமல் என்னையும் பூஜித்தும் வந்தாள். ஆனால், அவளிடம் ஒரு பழக்கம் உண்டு. உணவை பிராமணர்களுக்கோ மற்ற தேவர்களுக்கோ அளிக்க மாட்டாள். இதை நானும் எண்ணிக் கொண்டிருந்தேன். இவள் தன் கடும் விரதங்களாலும், பூஜைகளாலும் என் உலகை அடையத்தகுந்தவள் என்றாலும் நான் அவளை சோதிக்க எண்ணி, மண்டை ஓடு மாலை அணிந்த சிவணடியார் வேடம் பூண்டு அவளிடம் சென்றேன். அவளிடம் நான் பிச்சை கேட்க, அவள் கோபமுடன் சேற்றை (களிமண்) என் பிச்சை...
அயோத்தியா

அயோத்தியா

ஆன்மீகப் பதிவு, ஸ்ரீ இராமச்சந்திர பகவான்
அயோத்தியா- பகவான் இராமசந்திரரின் திருத்தலம்அழகான சரயு நதிக்கரை, 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்று, ஸ்ரீ இராமர் பிறந்த புண்ணிய பூமி. அவர் சுமார் 12,000 ஆண்டுகள் ஆட்சி செய்த ஸ்தலம், சமீப கால இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பிய இடம் என பல்வேறு அடைமொழிகளைக் கொண்டு, உத்திர பிரதேச மாநிலத்தின் பைசாபாத் நகரிலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அயோத்தியாவிற்குச் செல்ல வேண்டும் என்ற எமது நீண்டநாள் விருப்பம் சமீபத்தில் நிறைவேறியது.இராம ஜென்ம பூமிஅயோத்தியாவிற்குச் செல்பவர்கள் அனைவரும் தவறாமல் பார்க்கக்கூடிய இடம், இராம ஜென்ம பூமி. பகவான் ஸ்ரீ இராமர் தனது லீலைகளை அரங்கேற்றுவதற்காக இவ்வுலகில் அவதரித்த இடம், தற்போது இராம ஜென்ம பூமி என்று அழைக்கப்படுகிறது. அந்த சிறப்பு வாய்ந்த இடத்தைக் காண்பதற்காக நாங்களும் சென்றோம். சமீப காலத்தின் பல்வேறு சர்ச்சைகளின் காரணமாக, இராம ஜென்ம பூமி தற்போது...
பக்தனின் வாக்கைக் காப்பாற்றும் பகவான்

பக்தனின் வாக்கைக் காப்பாற்றும் பகவான்

ஆன்மீகப் பதிவு, Festivals-Tamil, திருவிழாக்கள்
கிருஷ்ணருக்கும் பக்தனுக்கும் இடையில் நிகழும் அன்புப் பரிமாற்றங்கள் மிகவும் இனிமையானவை. பகவானின் சொல்லை பக்தன் தட்ட மாட்டான் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். ஆனால் பக்தனின் சொல்லையும் பகவான் தட்ட மாட்டார் என்பதை நீங்கள் அறிவீர்களா?அன்னை யசோதையால் உரலில் கட்டிப்போடப்பட்ட கிருஷ்ணர் அந்த உரலுடன் நகர்ந்து இரண்டு மரங்களை வீழ்த்தி குபேரனின் இரண்டு மகன்களை விடுவித்தார். இந்த லீலையில் கிருஷ்ணர் எவ்வாறு தனது அன்பிற்குரிய பக்தரான நாரதரின் வார்த்தைகளை நிரூபித்தார் என்பதை சற்று காணலாம்.கிருஷ்ணர் செய்த குறும்புச் செயல்"அம்மா பசிக்குது," என்றபடி கிருஷ்ணர் தயிர்கடைந்து கொண்டிருந்த அன்னை யசோதையின் முந்தானையைப் பிடித்து அன்புடன் இழுக்கின்றார். குழந்தையைத் தடுக்க முடியாமல் அவனை எடுத்து மடியில் கிடத்தி அந்த அழகிய திருமுகத்தை ரசித்தபடி யசோதை பால் கொடுக்கத் தொடங்கினாள். கிருஷ்ணரும் அன்னையின் அன்பி...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question