Friday, August 22

Author: பக்தி யோகம் குழு

Pashankusha Ekasashi (Tamil) / பாஸங்குசா ஏகாதசி

Pashankusha Ekasashi (Tamil) / பாஸங்குசா ஏகாதசி

ஏகாதசி
ஐப்பசி மாத வளர்பிறையில் (செப்டம்பர் / அக்டோபர்) தோன்றக் கூடிய பாஸங்குசா ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! மதுசூதனா, ஐப்பசி மாத வளர்ப்பிறையில் (செப்டம்பர் / அக்டோபர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் சிறப்பையும் தயவு செய்து எனக்கு விளக்குங்கள்.பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னர்களில் சிறந்தோனே! இந்த ஏகாதசியின் பெயர் பாஸங்குசா ஏகாதசி. ஒருவரின் பாவங்களை அழிக்கக் கூடிய இந்த ஏகாதசியின் பெருமைகளைக் கேள். சிலர் இந்த ஏகாதசியை பாயபங்குஸா ஏகாதசி என்றும் கூறுவர். இந்த ஏகாதசியன்று ஒருவர் விசேஷமாக பத்மநாபரை வணங்க வேண்டும். இந்த ஏகாதசி மேலுலக சுகங்களையும் முக்தியையும் மற்றும் ஒருவர் வேண்டிய பலன்களையும் கொடுக்கிறது. பகவான் விஷ்ணுவின் புனித நாம...
Damodar (Kartik) Month (Tamil) / தாமோதர மாதம்

Damodar (Kartik) Month (Tamil) / தாமோதர மாதம்

திருவிழாக்கள்
17 அக்டோபர் முதல் 15 நவம்பர் வரை, 2024பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வெண்ணை திருடியதற்க்காக அன்னை யசோதை உரலில்கட்டியதால், அவருக்கு "தாமோதரர்" என்று பெயர் வந்தது."தாம்" என்றால் "கயிறு ""உதரா" என்றால் 'வயிறு"இந்த மாதத்தில் யாரொருவர் தாமோதரருக்கு திருவிளக்கு ஏற்றி "தாமோதரஷ்டகம்" பாடி வழிபடுகின்றாரோ, அவர் பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்.தாங்கள் வைத்துள்ள தாமோதர பகவானை (படத்தை) தூய்மையான இடத்தில் வைத்துக் கொள்ளவும், பிறகு நெய்தீபம் ஏற்றிதாமோதர பகவானின்பாதம் – 4 முறைமார்புக்கு – 2 முறைமுகத்திற்கு – 3 முறைமுழுவதும் – 7 முறைஇவ்வாறு தாமோதரருக்கு ஆரத்தி செய்தபின் துளசி இலையை அர்ப்பணிப்பது சாலச்சிறந்தது."கார்த்திகை மாதத்தில் தாமோதரரை வழிபட்டு, தாமோதர அஷ்டகம் என்று அறியப்படும் இந்த பாடலை தினமும் பாராயணம் செய்ய வேண்டும், சத்யவ்ரத முனிவரால் பேசப்பட்ட இது பகவா...
Indira Ekadashi (Tamil) / இந்திரா ஏகாதசி

Indira Ekadashi (Tamil) / இந்திரா ஏகாதசி

ஏகாதசி
இந்திரா ஏகாதசி பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! கிருஷ்ணா ஓ! மதுசூதனா! ஓ! மது என்ற அரக்கனை கொன்றவரே! புரட்டாசி மாத தேய்பிறையில் (செப்டம்பர்/ அக்டோபர்) தோன்றக் கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? இந்த ஏகாதசியை அனுஷ்டிக்கும் வழிமுறைகள் யாவை? இதை அனுஷ்டிப்பதால் ஒருவர் அடையும் பலன்கள் யாவை? பகவான் கிருஷ்ணர், பதிலளித்தார். இந்த புனிதமான ஏகாதசியின் பெயர் இந்திரா ஏகாதசி. இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவரின் எல்லா பாவ விளைவுகளும் அழிக்கப்படும் மற்றும் இழிவடைந்த தன் முன்னோர்கள் விடுதலை பெறுவர்.ஓ! மன்னா! சத்ய யுகத்தில் இந்திரசேனா என்ற ஒரு மன்னர் வாழ்ந்து வந்தார். அவர் தன் எதிரிகளை வெல்வதில் சாமர்த்தியமானவர். அவர் மாஹிஸ்மதிபுரி என்ற தன் இராஜ்ஜியத்தை செழிப்புடன் ஆண...
Kamika Ekadashi / காமிகா ஏகாதசி( கிருஷ்ண‌பட்ச ஏகாதசி)

Kamika Ekadashi / காமிகா ஏகாதசி( கிருஷ்ண‌பட்ச ஏகாதசி)

ஆன்மீகப் பதிவு, ஏகாதசி
காமிகா ஏகாதசியின் விரத மகிமை நாம் காண்போம்.மஹான்களைப் போன்று புண்ணியசீலரான யுதிஷ்டிர மஹாராஜா ஸ்ரீ கிருஷ்ணரிடம் - " மேலான பரம்பொருளே ! ஆஷாட, மாத சுக்லபட்சத்தில் வரும் புண்ணிய திதியான தேவசயனி ஏகாதசியைப் பற்றியும், அந்நாளில் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதால் கிட்டும் ஒப்பற்ற பலன்களை பற்றியும் அறிந்து கொண்டேன்.இப்பொழுது ஆஷாட ,சிராவண மாதத்தின் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி திதியைப்பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஆகையால் கோவிந்தா, என் மீது கருணை கொண்டு, அந்த ஏகாதசியின் பெருமைகளை விரிவாக சொல்லுங்கள். முதன்மையான தெய்வமே, வாசுதேவா!, எனது பணிவான நமஸ்காரங்களை தங்களது திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்" என்று கூறினார்.ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு பதிலளிக்கையில் - " தர்மத்தை எந்நிலையிலும் விடாது காக்கும் யுதிஷ்டிரா, ஒருவனது பாபங்களை எல்லாம் அழித்து சுபவிளைவுகளை ஏற்படுத்தும் ஏகாதசி உபவாசத்தின் மக...
Pandava Nirjala Ekadasi (Tamil)

Pandava Nirjala Ekadasi (Tamil)

ஏகாதசி
பாண்டவ நிர்ஜல ஏகாதசிhttps://youtu.be/f29gorKkcgoஆனி மாதம், சுக்ல பட்சம், ஏகாதசி திதியை நிர்ஜலா ஏகாதசியாக கொண்டாடுவர்.. பாண்டவ நிர்ஜலா ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம். 80 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் மிகவும் விந‌யத்துடன் சுவாரசியமான, பாபங்களை அழிக்கும் ஏகாதசி விரதக் கதைகளை கேட்டு மிகுந்த மனமகிழ்ச்சியில் திளைத்து இருந்தார்கள். அப்போது அனைவரும் வைகாசி -ஆனி மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியின் கதையைக் கேட்க விருப்பம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சூத முனிவர் அதைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்."ஒரு முறை பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமசேனர் வியாசரிடம் 'மதிப்பிற்குரிய பிதாமகரே ! மூத்த தமையனார் யுதிஷ்டிரர், அன்னை குந்தி, திரௌபதி, தம்பி அர்ஜூன், நகுலன், சகா தேவன் ஆகியோர் ஏகாதசி விரதத்தை நியமத்துடன் கடைபிடித்து வருகிறார்கள். அதனால் அவர்கள், நானும் அன்று அன்னம் உட்கொள்ளக் கூடா...
Akshaya Tritiya (Tamil) / அட்சய திரிதியை

Akshaya Tritiya (Tamil) / அட்சய திரிதியை

ஆன்மீகப் பதிவு, திருவிழாக்கள்
1. பரசுராமர் அவதரித்த திருநாள்2. கங்கை நதி இவ்வுலகிற்கு வந்த நாள்3. பக்தன் சுதாமர் துவாரகாவில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இல்லத்திற்கு சென்ற நாள்.4. பாண்டவர்கள் சூரியதேவனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்,5. வியாச தேவரால் மஹாபாரதம் இன்று தான் எழுதப்பட்டது.6. திரேதாயுகம் தொடங்கிய நாள்7. “கனகதரஸ்தோத்ரம்” ஆதிசங்கராச்சாரியரால் இன்று இயற்றப்பட்டது.8. குபேரருக்கு இன்று செல்வத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது, அன்னபூரணிதேவி தோன்றிய நாளாகக் கருதப்படுகிறது.9. இந்நன்னாளில் ஜெகந்நாதரின் ரதயாத்திரைக்கான ரதம் செய்யும் பணி தொடங்கும்.10. கீர்ஷோர் கோபிநாத் (ரெமுன, ஒரிஸா), மதன மோகன், கோவிந்தா மற்றும் கோபிநாத் விக்ரகங்களுக்கு சந்தன் யாத்திரை தொடங்கும் நாள்11. இன்றிலிருந்து 21 நாட்களுக்கு, வைசாக மாதத்தின் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக விருந்தாவனத்தில் பகவான் ஸ்ரீ ராதா கிருஷ்ணருக்கு சந்தன காப்பு அலங்காரம் ந...
Bhaimi Ekadashi (Tamil) / பைமி (அ) ஜெய  ஏகாதசி

Bhaimi Ekadashi (Tamil) / பைமி (அ) ஜெய ஏகாதசி

ஏகாதசி
https://youtu.be/UkMTaz7h-vE தை -மாசி மாதம் - சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை ஜெயா ஏகாதசியாக கொண்டாடுவர். ஜெயா ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.  மஹா தனுர்தாரியான அர்ஜூனன், ஸ்ரீ கிருஷ்ணரிடம்," ஹே பிரபோ! தை, மாசி மாதத்தின் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியைப் பற்றியும், அன்று எந்த தெய்வத்திற்கு விசேஷ அர்ச்சனை, ஆராதனை செய்ய வேண்டும் என்பது பற்றியும், விரதத்தின் மஹிமை, விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பலன் இவற்றைப் பற்றி விஸ்தாரமாக அறிய விரும்புகிறேன். தாங்கள் க்ருபை புரிய வேண்டும்." என்று வேண்டினான்.ஸ்ரீ கிருஷ்ணர், "ஹே பார்த்தா! தை -மாசி மாதத்தின் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி ஜெயா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த‌ ஏகாதசி விரதத்தை முறையோடு அனுஷ்டித்தால், அகாலமரணத்தால் பூத, ப்ரேத, பிசாச ரூபம் பெற்ற ஆத்மாக்கள், அந்நிலையிலிருந்து விடுதலைபெறுவர். இவ்வ...
அயோத்தியா

அயோத்தியா

ஆன்மீகப் பதிவு, ஸ்ரீ இராமச்சந்திர பகவான்
அயோத்தியா- பகவான் இராமசந்திரரின் திருத்தலம்அழகான சரயு நதிக்கரை, 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்று, ஸ்ரீ இராமர் பிறந்த புண்ணிய பூமி. அவர் சுமார் 12,000 ஆண்டுகள் ஆட்சி செய்த ஸ்தலம், சமீப கால இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பிய இடம் என பல்வேறு அடைமொழிகளைக் கொண்டு, உத்திர பிரதேச மாநிலத்தின் பைசாபாத் நகரிலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அயோத்தியாவிற்குச் செல்ல வேண்டும் என்ற எமது நீண்டநாள் விருப்பம் சமீபத்தில் நிறைவேறியது.இராம ஜென்ம பூமிஅயோத்தியாவிற்குச் செல்பவர்கள் அனைவரும் தவறாமல் பார்க்கக்கூடிய இடம், இராம ஜென்ம பூமி. பகவான் ஸ்ரீ இராமர் தனது லீலைகளை அரங்கேற்றுவதற்காக இவ்வுலகில் அவதரித்த இடம், தற்போது இராம ஜென்ம பூமி என்று அழைக்கப்படுகிறது. அந்த சிறப்பு வாய்ந்த இடத்தைக் காண்பதற்காக நாங்களும் சென்றோம். சமீப காலத்தின் பல்வேறு சர்ச்சைகளின் காரணமாக, இராம ஜென்ம பூமி தற்போது ...
நீங்கள் கடவுளா?

நீங்கள் கடவுளா?

ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
கடவுளுக்கும் கடவுளின் சக்திக்கும் இடையிலான வேற்றுமையை உணராமல், அனைவரும் கடவுள் என்று வாதிட்ட சில விருந்தினர்களுடன் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், அமெரிக்காவின் போஸ்டன் நகரில் டிசம்பர் 23, 1969இல் நடத்திய உரையாடல்.ஸ்ரீல பிரபுபாதர்: ஒருவர் எந்த வழிமுறையைப் பின்பற்றினாலும், கடவுளின் மீதான அன்பை வளர்த்துக் கொண்டால் அது நல்லது. இல்லையெனில் அது தேவையற்ற கால விரயமே. ஒரு குருவினை அல்லது கொள்கையினை சோதனை செய்வதற்கு இதுவே வழியாகும். எனக்குத் தெரிந்த வரையில், யோகிகள் தம்மைத் தாமே கடவுள் என்று கூறுவர். மேலும், "எல்லோரும் கடவுள்' என்று கூறுவர். அப்படியெனில், இந்த நாய் யார்? கடவுளா? இவர்களது கருத்து உகந்ததல்ல. எல்லோரும் எவ்வாறு கடவுளாக முடியும்? எல்லோரும் கடவுள் என்றால், கடவுள் என்பதன் பொருள் என்ன?கடவுள் என்றால் என்ன என்பதற்கு நீங்கள் விளக்கமளிக்க வேண்டும். உங்களால் விளக்கம...
Utthana ekadhasi (Tamil) / உத்தான (அ) பிரபோதினீ ஏகாதசி

Utthana ekadhasi (Tamil) / உத்தான (அ) பிரபோதினீ ஏகாதசி

ஏகாதசி
ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி ஸ்கந்த புராணத்தில் பிரம்மாவிற்கும் நாரத முனிவருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை நாரத முனிவரிடம் பிரம்மா கூறினார். ஓ! முனிவர்களில் சிறந்தோனே! ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளையும் அழித்து புண்ணியத்தை அதிகரித்து முத்தியை அளிக்கக்கூடிய உத்தான ஏகாதசியை பற்றி கூறுகிறேன், கேள். ஓ! அந்தணர்களில் சிறந்தோனே! கார்த்திகை மாத (அக்டோபர் / நவம்பர்) வளர்பிறையில் தோன்றக்கூடிய உத்தான ஏகாதசி இந்த உலகில் தோன்றாத வரை கங்கையின் மேன்மை மாறாமல் நிலையாக இருந்தது. மேலும் உத்தான ஏகாதசி தோன்றாதவரை கடல் மற்றும் குளங்களின் புண்ணியத்தின் செல்வாக்கு ஈடு இணையற்று இருந்தது. இதன் பொருள் என்ன வெனில் இந்த உத்தான ஏகாதசி. கங்கையின் மேன்மைக்கும் குளங்களின் புண்ணியத்திற்கும் ஈடானது, இந்த ஏகாதசி ஒருவரின் அனைத்து பாவங்களையும் எரித்து சாம்பலாக்குகிறது. ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்வத...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.