Thursday, March 16

கதைகள்

Spiritual eyes (Tamil) I தெய்வீகக் கண்கள்!

Spiritual eyes (Tamil) I தெய்வீகக் கண்கள்!

கதைகள், மஹாபாரதம்
ஆதாரம்: மஹாபாரதம் குருக்ஷேத்திர போர்க்களத்தில் ஒருபக்கம் பாண்டவ படைகளும், கெளரவ படைகளும் போருக்குத் தயாராக அணிவகுத்து நின்றனர். பீஷ்மர், கெளரவர் பக்கம் தலைமை தாங்க, திருஷ்டத்யும்னன் பாண்டவ படைக்கு தலைமை தாங்க, போர் ஆரம்பிக்க இருந்த நேரம்.                 போரின் மறுபக்கமோ , திருதராஷ்டிரர் அரண்மனையில் கவலைதோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார் . அவரால் செய்யப்பட ஒன்றும் இல்லை. அவருடைய கவலையை பொதுவாக விதுரருடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். ஆனால் விதுரரும் அங்கிருந்து நீங்கி விட்டதால் , திருதராஷ்டிரர் சஞ்ஜயனை அழைத்தார். சஞ்ஜயனிடம், ஓ சஞ்ஜயா! , என்ன நடக்கிறது என்று எனக்கு கூறு. இரு படைகளும் குருசேத்திரத்தை அடைந்து விட்டனவா ? விதியின் சக்தி, இந்த வயதானவனின் முயற்சிகளை விட சக்தி வாய்ந்தது. என்னுடைய மகனை தடுத்து நிறுத்த முயற்சி செய்தும், நான் தோல்வி அடைந்தேன். ஏன் இந்த நிலை? துரியோதனனின் தவறுகளை...
Do Lord Have Duties! (Tamil) I பகவானுக்கு கடமை!

Do Lord Have Duties! (Tamil) I பகவானுக்கு கடமை!

கதைகள், மஹாபாரதம்
ஆதாரம் : மஹாபாரதம் ( அனுஸாஸன் பர்வம்: பகுதி 59 )  ஒரு சமயம் கிருஷ்ணர் துவாரகையில் அரசாண்ட காலம் , அரியணையில் கிருஷ்ணர் அமர்ந்திருந்த போது, அவருடைய மகனான பிரத்திம்யுனர், சில சாதுக்களால் கோபப்படுத்தப் பட்டு கிருஷ்ணரிடம் வந்து, “மதுசூதனா! சாதுக்களை வழிபடுவதால், என்ன பலன் கிடைக்கும் ?. அதன் மூலமாக இங்கும், இதற்கு பின்பும் என்ன பலனை ஒருவர் அடைய முடியும். எனக்கு தயவு செய்து , தெளிவாக விளக்கிச் சொல்லுங்கள். இவ்விஷயத்தில் என் மனம் குழப்பம் அடைந்துள்ளது” என்று வினவினார்.  இவ்வாறு பிரத்திம்யுனர் சொல்லக் கேட்ட கிருஷ்ணர், பிரத்திம்யுனரிடம், " ருக்மணி மைந்தனே ! சாதுக்களை வழிபடுவதால், ஒருவர் அடையக்கூடிய செல்வாக்கை, நான் கூறுகிறேன். யார் ஒருவர், தர்ம, அர்த்த, காமத்தை அடைய விரும்புகின்றாரோ அல்லது மோட்சத்தை அடைய விரும்புகின்றாரோ அல்லது புகழும், செல்வாக்கும் அடைய விரும்புகின்றாரோ அல்லது தீர...
பிராமணரின் நன்நடத்தையை உதாரணம் காட்டும் கதை

பிராமணரின் நன்நடத்தையை உதாரணம் காட்டும் கதை

கதைகள்
சத்தியகாமா எனும் சிறுவன் கௌதம முனியிடம் தன்னைச் சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டான் . அதற்கு கௌதமர் அந்தச் சிறுவனிடம் எனதருமை சிறுவனே உனது கோத்ரம் என்ன ? என்று கேட்டார். சிறுவன் பதில் கூறினான். எனக்கு என்னுடைய கோத்ரமோ குடும்ப வரலாறோ எதுவும் தெரியாது. நான் என் தாயிடம் இது பற்றிக் கேட்ட பொழுது அவள் பின்வருமாறு பதில் கூறினாள். அவள் தனது இளமைப்பருவத்தில் நிறைய ஆடவர்களை சந்தித்துள்ளதாகவும், அவர்களின் தொடர்பினால் நீ பிறந்தாய் என்றும் கூறினாள். நிறைய ஆடவர்கள் என்பதால் உன்னுடைய தந்தை யார் ? என்றும் எந்தக் கோத்ரம் என்றும் தெரியாது. எனக்குத் தெரிந்த தெல்லாம் என் பெயர் " ஜபாலா ' ' உன் பெயர் " சத்தியகாமா " என்றாள். ஆகையினால் நான் " ஜபாலா " வின் சத்தியகாமா ஆவேன் என்றான். அதற்கு கௌதம முனிவர் கூறினார் . எனதருமை சிறுவனே நீ சத்தியத்தை பேசியிருக்கின்றாய். ஆகையால் நீ பிராமணனாகக் கருதப்பட வேண்டும். பி...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Join