Wednesday, July 30

ஏகாதசி

Putrada Ekadashi (Tamil) / புத்ரதா ஏகாதசி

Putrada Ekadashi (Tamil) / புத்ரதா ஏகாதசி

ஏகாதசி, ஆன்மீகப் பதிவு
https://youtu.be/ploD_JOK7jg புத்ரதா ஏகாதசி மகிமை - Videoபுத்ரதா ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.அர்ஜூனன் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதாரவிந்தங்களில் நமஸ்கரித்து, சிரத்தையுடனும் பணிவுடனும் கிருஷ்ணரிடம், " ஹே சச்சிதானந்த பரம் பொருளான ஸ்ரீ கிருஷ்ணா!, இப்பொழுது தை மாதம் சுக்லபட்ச ஏகாதசியைப் பற்றி கூறுங்கள்" என்று வேண்டி நின்றான். இந்த ஏகாதசியின் மகத்துவம், அதன் பெயர், அன்று வழிபட வேண்டிய தெய்வம், விரத வழிமுறைகள், இவற்றைப்பற்றி எல்லாம் விரிவாக உபதேசிக்க வேண்டும்" என்றான்.அர்ஜூனின் வேண்டுகோளைக் கேட்ட ஸ்ரீ கிருஷ்ணர்," ஹே ராஜனே, புஷ்ய (தை) மாதம் சுக்ல பட்ச ஏகாதசி, புத்ரதா ஏகாதசி என்னும் பெயரால் அறியப்படுகிறது. முந்தைய ஏகாதசி மஹாத்மியங்களில் கூறிய பூஜை விதிகளின் படி அன்று பூஜை செய்ய வேண்டும். விரதநாளன்று வழிபட வேண்டிய தெய்வம் ஸ்ரீமன் நாராயணன் ஆவார். இவ்வுலகில் புத்ரதா ஏகாதசி விரதத்திற்கு...
Utpanna Ekadasi (Tamil) I உத்பன்ன ஏகாதசி

Utpanna Ekadasi (Tamil) I உத்பன்ன ஏகாதசி

ஏகாதசி
ஏகாதசி தோன்றிய கதை(பத்ம புராணம் உத்தர காண்டம் அத்தியாயம் 36இல் இருந்து எடுக்கப்பட்டது)கிருத யுகத்தில் வாழ்ந்து வந்த முராசுரன் என்னும் கொடூர அசுரன், தேவர்களைத் துன்புறுத்தி அவர்களை ஸ்வர்கத்திலிருந்து விரட்டினான். இந்திரனின் தலைமையில் எல்லா தேவர்களும் கரம் குவித்து, துதி பாடி, பாற்கடலில் பள்ளி கொண்ட சுதர்சனம் ஏந்திய கருட வாகனர் ஸ்ரீ விஷ்ணுவிடம் தங்களது குறைகளை முறையிட்டனர்.அசுரனின் கொடுமைகளைக் கேட்ட பகவான் விஷ்ணு தேவர்களுக்கு உதவுவதாக உறுதியளித்து, முராசுரனுடன் போரிட்டார். தனது அம்புகளாலும் சுதர்சனத்தினாலும் அசுர சேனைகளை விரட்டியடித்தார். நீண்ட காலம் நடைபெற்ற அந்த யுத்தத்தின் நடுவில், பகவான் விஷ்ணு பத்ரிகாஷ்ரமத்தில் உள்ள ஹேமவதி என்ற குகைக்குள் ஓய்வெடுப்பதற்காகச் சென்றார். அவரைத் தேடி அங்கு வந்த முராசுரன், (தெய்வீக) உறக்கத்திலிருந்த விஷ்ணுவிடம் போரிட விரும்பியபோது, ஸ்ரீ விஷ்ணுவின்...
Saphala Ekadashi (Tamil) / சபலா ஏகாதசி

Saphala Ekadashi (Tamil) / சபலா ஏகாதசி

ஏகாதசி, ஆன்மீகப் பதிவு
சபலா ஏகாதசி, மார்கழி மாத (டிசம்பர் / ஜனவரி) தேய்பிறையில் தோன்றுகிறது. இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கேட்டார். ஓ! கிருஷ்ணா, மார்கழி மாத (டிசம்பர் / ஜனவரி) தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? மற்றும் அதனை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் என்பதை எனக்கு விவரமாகக் கூறுங்கள்.பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். பரத வம்சத்தில் சிறந்தோனே. பாம்புகளின் ஆதிசேஷன் எவ்வாறு சிறந்ததோ, பறவைகளில் கருடன் எவ்வாறு சிறந்ததோ, யாகங்களில் எவ்வாறு அஸ்வமேத யாகம் சிறந்ததோ, நதிகளில் கங்கை எவ்வாறு சிறந்ததோ, அனைத்து தேவர்களிலும் விஷ்ணு எவ்வாறு சிறந்தவரோ, மற்றும் மனிதர்களில் அந்தணர்கள் எவ்வாறு சிறந்தவர்களோ, அவ்வாறே அனைத்து விரதங்களிலும் ஏகாதசி விரதம் மிகச் சிறந்தது. ஓ, மன்னர்களில...
Rama Ekadashi (Tamil) / ரமா (ராம)  ஏகாதசி

Rama Ekadashi (Tamil) / ரமா (ராம) ஏகாதசி

ஏகாதசி
ரமா ஏகாதசியின், பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! ஜனார்தனா! ஐப்பசி மாத தேய்ப்பிறையில் (அக்டோபர்/ நவம்பர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் சிறப்பையும் எனக்கு விளக்குங்கள்.ஏகாதசியின், பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! ஜனார்தனா! ஐப்பசி மாத தேய்ப்பிறையில் (அக்டோபர்/ நவம்பர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் சிறப்பையும் எனக்கு விளக்குங்கள்.பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னர்களில் சிங்கம் போன்றவனே! இந்த ஏகாதசியின் பெயர் ரமா ஏகாதசி. இது ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும் அழித்துவிடும். இந்...
Pashankusha Ekasashi (Tamil) / பாஸங்குசா ஏகாதசி

Pashankusha Ekasashi (Tamil) / பாஸங்குசா ஏகாதசி

ஏகாதசி
ஐப்பசி மாத வளர்பிறையில் (செப்டம்பர் / அக்டோபர்) தோன்றக் கூடிய பாஸங்குசா ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! மதுசூதனா, ஐப்பசி மாத வளர்ப்பிறையில் (செப்டம்பர் / அக்டோபர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் சிறப்பையும் தயவு செய்து எனக்கு விளக்குங்கள்.பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னர்களில் சிறந்தோனே! இந்த ஏகாதசியின் பெயர் பாஸங்குசா ஏகாதசி. ஒருவரின் பாவங்களை அழிக்கக் கூடிய இந்த ஏகாதசியின் பெருமைகளைக் கேள். சிலர் இந்த ஏகாதசியை பாயபங்குஸா ஏகாதசி என்றும் கூறுவர். இந்த ஏகாதசியன்று ஒருவர் விசேஷமாக பத்மநாபரை வணங்க வேண்டும். இந்த ஏகாதசி மேலுலக சுகங்களையும் முக்தியையும் மற்றும் ஒருவர் வேண்டிய பலன்களையும் கொடுக்கிறது. பகவான் விஷ்ணுவின் புனித நாம...
Indira Ekadashi (Tamil) / இந்திரா ஏகாதசி

Indira Ekadashi (Tamil) / இந்திரா ஏகாதசி

ஏகாதசி
இந்திரா ஏகாதசி பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! கிருஷ்ணா ஓ! மதுசூதனா! ஓ! மது என்ற அரக்கனை கொன்றவரே! புரட்டாசி மாத தேய்பிறையில் (செப்டம்பர்/ அக்டோபர்) தோன்றக் கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? இந்த ஏகாதசியை அனுஷ்டிக்கும் வழிமுறைகள் யாவை? இதை அனுஷ்டிப்பதால் ஒருவர் அடையும் பலன்கள் யாவை? பகவான் கிருஷ்ணர், பதிலளித்தார். இந்த புனிதமான ஏகாதசியின் பெயர் இந்திரா ஏகாதசி. இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவரின் எல்லா பாவ விளைவுகளும் அழிக்கப்படும் மற்றும் இழிவடைந்த தன் முன்னோர்கள் விடுதலை பெறுவர்.ஓ! மன்னா! சத்ய யுகத்தில் இந்திரசேனா என்ற ஒரு மன்னர் வாழ்ந்து வந்தார். அவர் தன் எதிரிகளை வெல்வதில் சாமர்த்தியமானவர். அவர் மாஹிஸ்மதிபுரி என்ற தன் இராஜ்ஜியத்தை செழிப்புடன் ஆண...
Aja / Annada Ekadasi / அஜா – (அன்னதா) ஏகாதசி

Aja / Annada Ekadasi / அஜா – (அன்னதா) ஏகாதசி

ஏகாதசி
பாத்ரபத மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை அஜா -அன்னதாஏகாதசியாக கொண்டாடுவர். அஜா - அன்னதா ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம்.ஸ்ரீ யுதிஷ்டிரர் பரமாத்மா கண்ணனிடம் - "ஹே ! ஜனார்தனா, இவ்வுலக ஜீவராசிகள் அனைத்தையும் பாதுகாத்துரட்சிப்பவரே, பாத்ரபத மாதத்தின் (ஆகஸ்ட் -செப்டெம்பர்) கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயரையும், அதன்மகத்துவத்தையும் விரிவாக எனக்கு எடுத்துரையுங்கள்" என்று வேண்டி நின்றார்.கிருஷ்ண பரமாத்மா தர்மபுத்ரரின் வேண்டுகோளுக்கு இணங்கி, பதிலளிக்கையில் "ஹே! ராஜன், நான் சொல்லுவதைமிகவும் கவனத்துடன் கேள், பாபங்களைப் போக்கும் இந்த புண்ய ஏகாதசி அஜா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.இந்நாளில் உபவாசத்துடன் விரதத்தை மேற்கொண்டு, புலன்களுக்கு அதிபதியான ரிஷிகேசரை வழிபட்டால்,பாபத்தின் கர்மவிளைவுகளிலிருந்து விடுபடுவர். அஜா ஏகாதசியின் மஹிமையை காதால் கேட்டாலே, கேட்பவரின்பாவங்கள் அனைத...
Kamika Ekadashi / காமிகா ஏகாதசி( கிருஷ்ண‌பட்ச ஏகாதசி)

Kamika Ekadashi / காமிகா ஏகாதசி( கிருஷ்ண‌பட்ச ஏகாதசி)

ஆன்மீகப் பதிவு, ஏகாதசி
காமிகா ஏகாதசியின் விரத மகிமை நாம் காண்போம்.மஹான்களைப் போன்று புண்ணியசீலரான யுதிஷ்டிர மஹாராஜா ஸ்ரீ கிருஷ்ணரிடம் - " மேலான பரம்பொருளே ! ஆஷாட, மாத சுக்லபட்சத்தில் வரும் புண்ணிய திதியான தேவசயனி ஏகாதசியைப் பற்றியும், அந்நாளில் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதால் கிட்டும் ஒப்பற்ற பலன்களை பற்றியும் அறிந்து கொண்டேன்.இப்பொழுது ஆஷாட ,சிராவண மாதத்தின் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி திதியைப்பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஆகையால் கோவிந்தா, என் மீது கருணை கொண்டு, அந்த ஏகாதசியின் பெருமைகளை விரிவாக சொல்லுங்கள். முதன்மையான தெய்வமே, வாசுதேவா!, எனது பணிவான நமஸ்காரங்களை தங்களது திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்" என்று கூறினார்.ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு பதிலளிக்கையில் - " தர்மத்தை எந்நிலையிலும் விடாது காக்கும் யுதிஷ்டிரா, ஒருவனது பாபங்களை எல்லாம் அழித்து சுபவிளைவுகளை ஏற்படுத்தும் ஏகாதசி உபவாசத்தின் மக...
Pandava Nirjala Ekadasi (Tamil)

Pandava Nirjala Ekadasi (Tamil)

ஏகாதசி
பாண்டவ நிர்ஜல ஏகாதசிhttps://youtu.be/f29gorKkcgoஆனி மாதம், சுக்ல பட்சம், ஏகாதசி திதியை நிர்ஜலா ஏகாதசியாக கொண்டாடுவர்.. பாண்டவ நிர்ஜலா ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம். 80 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் மிகவும் விந‌யத்துடன் சுவாரசியமான, பாபங்களை அழிக்கும் ஏகாதசி விரதக் கதைகளை கேட்டு மிகுந்த மனமகிழ்ச்சியில் திளைத்து இருந்தார்கள். அப்போது அனைவரும் வைகாசி -ஆனி மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியின் கதையைக் கேட்க விருப்பம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சூத முனிவர் அதைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்."ஒரு முறை பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமசேனர் வியாசரிடம் 'மதிப்பிற்குரிய பிதாமகரே ! மூத்த தமையனார் யுதிஷ்டிரர், அன்னை குந்தி, திரௌபதி, தம்பி அர்ஜூன், நகுலன், சகா தேவன் ஆகியோர் ஏகாதசி விரதத்தை நியமத்துடன் கடைபிடித்து வருகிறார்கள். அதனால் அவர்கள், நானும் அன்று அன்னம் உட்கொள்ளக் கூடா...
Bhaimi Ekadashi (Tamil) / பைமி (அ) ஜெய  ஏகாதசி

Bhaimi Ekadashi (Tamil) / பைமி (அ) ஜெய ஏகாதசி

ஏகாதசி
https://youtu.be/UkMTaz7h-vE தை -மாசி மாதம் - சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை ஜெயா ஏகாதசியாக கொண்டாடுவர். ஜெயா ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.  மஹா தனுர்தாரியான அர்ஜூனன், ஸ்ரீ கிருஷ்ணரிடம்," ஹே பிரபோ! தை, மாசி மாதத்தின் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியைப் பற்றியும், அன்று எந்த தெய்வத்திற்கு விசேஷ அர்ச்சனை, ஆராதனை செய்ய வேண்டும் என்பது பற்றியும், விரதத்தின் மஹிமை, விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பலன் இவற்றைப் பற்றி விஸ்தாரமாக அறிய விரும்புகிறேன். தாங்கள் க்ருபை புரிய வேண்டும்." என்று வேண்டினான்.ஸ்ரீ கிருஷ்ணர், "ஹே பார்த்தா! தை -மாசி மாதத்தின் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி ஜெயா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த‌ ஏகாதசி விரதத்தை முறையோடு அனுஷ்டித்தால், அகாலமரணத்தால் பூத, ப்ரேத, பிசாச ரூபம் பெற்ற ஆத்மாக்கள், அந்நிலையிலிருந்து விடுதலைபெறுவர். இவ்வ...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.