Friday, July 26

Bragatasvar & Barathvajar (Tamil) / பிருகதஸ்வர் & பரத்வாஜர்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

பிருகதஸ்வர்: இவர் யுதிஷ்டிர மகாராஜனை அவ்வப்போது சந்தித்து வந்த ஒரு பண்டைக் காலத்து முனிவராவார். யுதிஷ்டிர மகாராஜனை அவர் முதன்முதலாக காம்யவனத்தில் சந்தித்தார். நள மகாராஜனின் சரித்திரத்தை அவர் விவரித்தார். மற்றொரு பிருகதஸ்வரும் இருக்கிறார். அவர் இக்ஷ்வாகு வம்சத்தின் மகனாவார் (மகாபாரதம், வனபர்வம் 209.4-5)

பரத்வாஜர்: சப்த ரிஷிகளில் ஒருவராவார். அர்ஜுனனின் பிறப்புச் சடங்கின்பொழுது அவர் அங்கிருந்தார். சக்தி வாய்ந்தவரான இந்த ரிஷி சில சமயங்களில் கங்கை நதிக் கரையில் கடுந்தவங்களை மேற்கொண்டார். அவரது ஆஷ்ரமம் பிரயாகதாமம் என்று இன்னமும் புகழப்பட்டு வருகிறது. ஒருநாள் இந்த ரிஷி கங்கையில் நீராடிக்கொண்டு இருக்கும்பொழுது, கிருதசீ எனப்படும் அழகிய ஸ்வர்க லோக பெண்ணொருத்தியை சந்திக்க நேர்ந்தது. அதன் விளைவாக வெளிப்பட்ட அவரது விந்து ஒரு மண் பாத்திரத்தில் வைத்து காப்பாற்றப்பட்டு, அதிலிருந்து துரோணர் பிறந்தார். எனவே துரோணாச்சாரியர் பரத்வாஜ முனிவரின் மகனாவார். துரோணரின் தந்தையான பரத்வாஜர், மகரிஷி பரத்வாஜரிலிருந்து வேறுபட்டவர் என்று மற்றவர்கள் கூறுகின்றனர். ஒருமுறை துரோணாச்சாரியரை அணுகி யுத்தத்தை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question