Friday, March 29

Muni / முனிவர்கள்

Sudarshan (Tamil) / சுதர்சனர்

Sudarshan (Tamil) / சுதர்சனர்

Muni / முனிவர்கள்
சுதர்சனர்: பரம புருஷ பகவானால் (விஷ்ணு அல்லது கிருஷ்ணர்) தமது சொந்த ஆயுதமாகஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஆயுதம், பிரம்மாஸ்திரம் அல்லது அதற்கொப்பான பிறஆயுதங்களையோ விட அதிக சக்தி வாய்ந்ததாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குஅக்னிதேவன் இந்த ஆயுதத்தை அளித்தார் என்று வேத இலக்கியங்கள் சிலவற்றில்கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் பகவான் இந்த ஆயுதத்தை நித்தியமாக தமதுகையில் ஏந்தியிருக்கிறார். ருக்ம மகாராஜன் ருக்மினியை பகவானுக்கு அளித்த அதேமுறையில்தான் அக்னிதேவனும் இந்த ஆயுதத்தை கிருஷ்ணருக்கு அளித்தார். இத்தகையஅன்பளிப்புக்களை பகவான் தமது பக்தர்களிடமிருந்து ஏற்றுக்கொள்கிறார். அந்தஅன்பளிப்புகள் நித்தியமாக அவருக்குச் சொந்தமானவை என்றாலும் அவற்றை அவர்அவ்வாறு ஏற்றுக் கொள்கிறார். மகாபாரதத்தின் ஆதி பர்வத்தில் இந்த ஆயுதத்தைப் பற்றியவிரிவான விளக்கம் ஒன்றுள்ளது. தன்னுடன் போட்டியிட்ட சிசுபாலனைக் கொல்ல பகவான்ஸ்ரீ கிருஷ்ணர் இந்...
Kritasmatar & Asitar (Tamil) / கிருத்ஸமதர் & அஸிதர்

Kritasmatar & Asitar (Tamil) / கிருத்ஸமதர் & அஸிதர்

Muni / முனிவர்கள்
கிருத்ஸமதர்: இவர் ஸ்வர்க லோகங்களைச் சேர்ந்த முனிவர்களுள் ஒருவராவார். அவர்ஸ்வர்க ராஜனான இந்திரனின் நெருங்கிய நண்பரும், பிருஹஸ்பதிக்கு ஈடானசிறப்புடையவருமாவார். அவர் யுதிஷ்டிர மகாராஜனின் ராஜசபைக்குச் செல்வது வழக்கம்.மேலும் பீஷ்மதேவர் உயிரைவிட்ட இடத்திற்கும் அவர் சென்று வந்தார். சில சமயங்களில்அவர் சிவபெருமானின் பெருமைகளை யுதிஷ்டிர மகாராஜனுக்கு விளக்கினார்.விதஹவ்யரின் மகனான அவர் இந்திரனையொத்த தேக அம்சங்களைக் கொண்டிருந்தார்.சில சமயங்களில் இந்திரனின் எதிரிகள் அவரை இந்திரனென்று எண்ணி கைது செய்தனர்.அவர் ரிக் வேதத்தில் மிகுந்த புலமை பெற்றவராவார். இதனால் பிராமண சமூகத்தால் அவர்மிகவும் மதிக்கப்பட்டார். பிரம்மச்சாரிய வாழ்வை மேற்கொண்ட அவர் எல்லா விதத்திலும்சக்தி வாய்ந்தவராக இருந்தார். அஸிதர்: இதே பெயரைக் கொண்ட ஓர் அரசரும் இருந்தார். ஆனால் இங்கு குறிப்பிடப்படும்அஸிதர், அக்காலத்தில் மிகவும் சக்தி வாய்ந...
Tiritha Muni (Tamil) / திரித முனிவர்

Tiritha Muni (Tamil) / திரித முனிவர்

Muni / முனிவர்கள்
இவர் பிரஜாபதியான கௌதமரின் மூன்று மகன்களில் ஒருவராவார். அவரது மற்றஇரு சகோதரர்கள் ஏகத், துவிய என்று அழைக்கப்பட்டனர். அம்மூவருமே சிறந்தமுனிவர்களும், மதக் கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றியவர்களுமாவர். அவர்களதுகடுந்தவங்களின் பலனாய், அவர்கள் பிரம்மதேவர் வாழும் உலகமான பிரம்மலோகத்திற்குஉயர்த்தப்பட்டனர். ஒருமுறை திரித முனி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். அவர் பலயாகங்களை ஏற்பாடு செய்யும் பணியை மேற்கொண்டிருந்தார். மாமுனிவர்களுள் ஒருவர்என்ற முறையில், மரணப் படுக்கையிலிருந்த பீஷ்மதேவருக்கு மரியாதை செலுத்த அவரும்வந்திருந்தார். வருணலோகத்திலுள்ள ஏழு ரிஷிகளில் அவரும் ஒருவராவார். அவர் உலகின்மேற்கு நாடுகளிலிருந்து வந்தவராவார். எனவே அவர் ஐரோப்பிய நாடுகளிலிருந்துவந்தவராக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அச்சமயத்தில் உலகம் முழுவதுமே ஒரேவேதப் பண்பாட்டின் கீழ் இருந்தது.- ஸ்ரீமத் பாகவதம் 1.9.7 (பொருளுரை) ...
Vasishtar (Tamil) / வஸிஷ்டர்

Vasishtar (Tamil) / வஸிஷ்டர்

Muni / முனிவர்கள்
பிராமணர்களுக்கு இடையில் மிகவும் புகழ்பெற்ற முனிவரான இவர்,பிரம்மரிஷி வஸிஷ்டதேவர் என்று பிரசித்தமானவராவார். இவர் இராமாயணமும்மகாபாரதமும் நிகழ்ந்த காலங்களில் பிரசித்தி பெற்றவராவார். பரம புருஷராகிய ஸ்ரீராமரின் முடிசூட்டு விழவை அவர் நடத்தி வைத்தார். குருட்சேத்திரப் போர்க்களத்தில்அவரும்கூட இருந்தார். அவரால் மேல் லோகங்களுக்கும், கீழ் லோகங்களுக்கும் செல்லமுடிந்தது. மேலும் அவரது பெயர் ஹிரண்யகசிபுவின் சரித்திரத்துடனும் சம்பந்தப்பட்டுள்ளது.அவருக்கும் விஸ்வாமித்திரருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. ஆசைகளைநிறைவேற்றக்கூடியதான வஸிஷ்டரின் காமதேனு எனும் பசுவை விஸ்வாமித்திரர் அடையவிரும்பினார். தமது காமதேனுவைக் கொடுக்க மறுத்ததால், வஸிஷ்ட முனிவரின் நூறுமகன்களையும் விஸ்வாமித்திரர் கொன்றார். பக்குவமடைந்த பிராமணரான அவர்விஸ்வாமித்திரரின் கோபமூட்டும் சொற்களையெல்லாம் பொறுத்துக்கொண்டார்.விஸ்வாமித்திரரின் கொடுமையைத் ...
Srila Vyasadev (Tamil)  / பாதராயணர் (வியாசதேவர்)

Srila Vyasadev (Tamil) / பாதராயணர் (வியாசதேவர்)

Muni / முனிவர்கள்
அவர் கிருஷ்ண, கிருஷ்ண-துவைபாயனர், துவைபாயனர்,சத்தியவதி-ஸூதர், பாராசர்யர், பராசராத்மஜர், பாதராயணர், வேதவியாசர் போன்றபெயர்களால் அறியப்படுகிறார். இவர், சந்தனு சத்தியவதிக்கு நிச்சயதார்த்தம் நடப்பதற்குமுன்பே, அவளுக்கும் பராசர மகாமுனிவருக்கும் பிறந்தவராவர். சந்தனு மகாராஜன்மிகச்சிறந்த தளபதியும், பாட்டானாருமான பீஷ்மதேவரின் தந்தையாவார். வியாசதேவர்நாராயணனின் சக்தி வாய்ந்த அவதாரமாவார். அவர் வேத ஞானத்தை உலகில் பரப்புகிறார்.இதனால் வேத நூல்களைப் படிக்கும் முன்பாக, முக்கியமாக புராணங்களைப் படிக்கும்முன்பாக முதலில் வியாசதேவர் வணங்கப்படுகிறார். சுகதேவ கோஸ்வாமி அவரது மகனாவார். மேலும் வைசம்பாயனரைப் போன்ற ரிஷிகள், வேதங்களின் வெவ்வேறுபிரிவுகளுக்குரிய அவரது சீடர்களாவர். மிகச்சிறந்த இதிகாசமாகிய மகாபாரதத்திற்கும்,மிகச்சிறந்த தெய்வீக இலக்கியமாகிய பாகவதத்திற்கும் அவரே ஆசிரியராவார். பிரம்மசூத்திரங்கள் (வேதாந்த ச...
Bragatasvar & Barathvajar (Tamil) /  பிருகதஸ்வர் & பரத்வாஜர்

Bragatasvar & Barathvajar (Tamil) / பிருகதஸ்வர் & பரத்வாஜர்

Muni / முனிவர்கள்
பிருகதஸ்வர்: இவர் யுதிஷ்டிர மகாராஜனை அவ்வப்போது சந்தித்து வந்த ஒரு பண்டைக் காலத்து முனிவராவார். யுதிஷ்டிர மகாராஜனை அவர் முதன்முதலாக காம்யவனத்தில் சந்தித்தார். நள மகாராஜனின் சரித்திரத்தை அவர் விவரித்தார். மற்றொரு பிருகதஸ்வரும் இருக்கிறார். அவர் இக்ஷ்வாகு வம்சத்தின் மகனாவார் (மகாபாரதம், வனபர்வம் 209.4-5) பரத்வாஜர்: சப்த ரிஷிகளில் ஒருவராவார். அர்ஜுனனின் பிறப்புச் சடங்கின்பொழுது அவர் அங்கிருந்தார். சக்தி வாய்ந்தவரான இந்த ரிஷி சில சமயங்களில் கங்கை நதிக் கரையில் கடுந்தவங்களை மேற்கொண்டார். அவரது ஆஷ்ரமம் பிரயாகதாமம் என்று இன்னமும் புகழப்பட்டு வருகிறது. ஒருநாள் இந்த ரிஷி கங்கையில் நீராடிக்கொண்டு இருக்கும்பொழுது, கிருதசீ எனப்படும் அழகிய ஸ்வர்க லோக பெண்ணொருத்தியை சந்திக்க நேர்ந்தது. அதன் விளைவாக வெளிப்பட்ட அவரது விந்து ஒரு மண் பாத்திரத்தில் வைத்து காப்பாற்றப்பட்டு, அதிலிருந்து துரோணர் பிறந்தா...
Tavumya Muni (Tamil) / தவும்ய முனி

Tavumya Muni (Tamil) / தவும்ய முனி

Muni / முனிவர்கள்
உத்கோசக தீர்த்தத்தில் கடும் தவமியற்றிய மாமுனிவராவார். அவர் பாண்டவ மன்னர்களின் ராஜ புரோகிதராக நியமிக்கப்பட்டார். பாண்டவர்களின் பல சமயச் சடங்குகளில் (ஸம்ஸ்கார) அவர் புரோகிதராக செயலாற்றினார். மேலும் திரௌபதியின் நிச்சயதார்த்தத்தின்பொழுது ஒவ்வொரு பாண்டவருடனும் அவர் இருந்தார். பாண்டவர்கள் நாடு கடத்தப்பட்டபொழுதும் கூட அவர் அங்கிருந்தார். மேலும் பாண்டவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தபோதெல்லாம் அவர்களுக்கு அவர் அறிவுரை கூறுவது வழக்கம். ஓராண்டு காலம் தலைமறைவாக வாழ்வதெப்படி என்று அவர்களுக்கு அவர் உபதேசித்தார். மேலும் அச்சமயத்தில் அவரது உபதேசங்களை பாண்டவர்கள் உறுதியாகப் பின்பற்றினர். குருட்சேத்திர யுத்தத்திற்குப் பின் நிறைவேற்றப்பட்ட பொதுவான ஈமச்சடங்குகளின் போது அவரது பெயரும் குறிப்பிடப்பட்டது. மகாபாரதத்தின் அனுஷாஸன-பர்வத்தில் (127.15-16), அவர் யுதிஷ்டிர மகாராஜனுக்கு மிகவும் விரிவான சமய உபதேசங்களை அ...
Narada Muni (Tamil) / நாரத முனிவர்

Narada Muni (Tamil) / நாரத முனிவர்

Muni / முனிவர்கள்
புராண வரலாறுகளுடன் தவிர்க்க இயலாதபடி சம்பந்தப்பட்டுள்ளார். பாகவதத்தில் அவர் விவரிக்கப்படுகிறார். முற்பிறப்பில் அவர் ஒரு வேலைக்காரியின் மகனாக இருந்தார். ஆனால் தூய பக்தர்களுடன் கொண்ட நல்லுறவினால் பக்தித் தொண்டைப் பற்றிய அறிவை அவர் பெற்றார். மேலும் அவரது அடுத்த பிறப்பில் நிகரற்ற ஒரு பூரண மனிதராக அவர் மாறினார். அவர் தேவரிஷிகளில் தலைமையானவராவார். மகாபாரதத்தில் அவரது பெயர் பல இடங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவர் பிரம்மதேவரின் மகனும், சீடருமாவார். அவர் மூலமாக பிரம்மாவின் சீடப்பரம்பரை பரப்பப்பட்டு உள்ளது. பிரகலாத மகாராஜனுக்கும், துருவ மகாராஜனுக்கும், பகவானின் மற்றும் பல புகழ்பெற்ற பக்தர்களுக்கும் அவர் தீட்சை வழங்கினார். வேத இலக்கியங்களின் ஆசிரியரான வியாசதேவருக்கும் கூட அவர் தீட்சை வழங்கினார். வியாசரிடமிருந்து மத்வாச்சாரியர் தீட்சைப் பெற்றார். இவ்வாறாக கௌடீய சம்பிரதாயத்தையும் உள்ளடக்கியதான ...
Parvata Muni (Tamil) / பர்வத முனி

Parvata Muni (Tamil) / பர்வத முனி

Muni / முனிவர்கள்
வயது முதிர்ந்த முனிவர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவர் எப்பொழுதுமே நாரத முனிவருடனேயே இருப்பவராவார். அவர்கள் எந்த வாகனத்தின் உதவியும் இல்லாமல் காற்றில் பிரயாணம் செய்யும் தகுதியுடைய விண்வெளி யாத்திரீகர்களாவர். நாரதரைப் போலவே பர்வத முனியும் கூட ஒரு தேவரிஷி, அல்லது தேவர்களுக்கு இடையிலான சிறந்த ரிஷியாவார். பரீட்சித்து மகாராஜனின் புதல்வரான ஜனமேஜய மகாராஜனின் யாகச் சடங்கில் அவரும் நாரதருடன் இருந்தார். இந்த யாகத்தில் உலகிலுள்ள எல்லா பாம்புகளும் கொல்லப்படுவதாக இருந்தது. பர்வத முனிவராலும், நாரத முனிவராலும் பகவானின் பெருமைகளைப் பாடிக் கொண்டு காற்றில் பிரயாணம் செய்ய முடியும் என்பதால் அவர்கள் கந்தவர்கள் என்றுகூட அழைக்கப்பட்டனர். அவர்களால் காற்றில் பிரயாணம் செய்ய முடியும் என்பதால், ஆகாயத்தில் இருந்துகொண்டே திரௌபதியின் சுயம்வர சடங்கை அவர்கள் கவனித்தனர். நாரத முனிவரைப் போலவே பர்வத முனிவரும் கூட ஸ்வ...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question