Saturday, April 20

கீதா மஹாத்மியம்

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 9 I Gita mahatmiya Chapter-9

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 9 I Gita mahatmiya Chapter-9

கீதா மஹாத்மியம்
பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை ஒன்பதாம் அத்தியாயத்தின் மஹிமை சிவபெருமான் கூறினார், எனதன்பு பார்வதியே, "ஸ்ரீமத் பகவத் கீதையின் ஒன்பதாம் அத்தியாயத்தின் மகிமைகளை நான் இப்போது கூறுகிறேன்".      நர்மதா நதிக்கரையில் மஹிஷ்மதி என்ற ஊரில், மாதவா என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் வேத சாஸ்திரங்களின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி, உயர்தர பிராமணராக விளங்கினார். கற்றறிந்த பிராமணர் என்ற காரணத்தினால், அவருக்கு நிறைய தானம் கிடைக்கும். தானத்தின் மூலம் கிடைத்த பொருட்களை வைத்து ஒரு பெரிய யாகம் செய்ய திட்டமிட்டார். யாகத்தின் ஆகூதிக்காக ஒரு ஆட்டை கொண்டு வந்தார் அவர். யாகத்திற்கு பலர் வந்திருந்தனர். யாகத்தின் போது அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக, ஆடு மிகவும் சப்தமாக சிறித்து விட்டு பேச துவங்கியது. அது, "ஓ பிராமணரே, நம் அனைவரையும் மீண்டும் மீண்டும் பிறப்பு ...
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 8 I Gita mahatmiya Chapter-8

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 8 I Gita mahatmiya Chapter-8

கீதா மஹாத்மியம்
பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை எட்டாம் அத்தியாயத்தின் மஹிமை சிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, ஸ்ரீமத் பகவத்கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் சிறப்புக்கள் பற்றி இப்போது கேட்டு ஆனந்தம் அடைவாயாக".      தெற்கே, அமர்த்கபூர் என்ற ஊரில், பவஷர்மா என்ற பிராமணன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு விலைமாதுவை திருமணம் செய்தான். அதோடு, மது அருந்துவது, மாமிசம் உண்பது, திருடுவது, வேட்டையாடுவது, பிறர் மனைவியரை அனுபவிப்பது போன்ற அனைத்து பாவகாரியங்களிலும் ஈடுபட்டான். ஒரு முறை விருந்திற்கு சென்ற பவஷர்மா மிகவும் அதிகமாக மது அருந்தினான். அதன் விளைவாக வயிற்றுக்கடுப்பால் மிகவும் அவதிப்பட்டான். மிகவும் துன்புற்ற அவன் ஒரு நாள் இறந்து போனான். அடுத்த பிறவியில் ஒரு பேரீச்ச மரமானான்.     ஒரு நாள் இரண்டு பிரம்மராட்சசர்கள் அந்த மரத்தடியில் ஓய்வெடுக்...
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 7 I Gita mahatmiya Chapter-7

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 7 I Gita mahatmiya Chapter-7

கீதா மஹாத்மியம்
பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை ஏழாம் அத்தியாயத்தின் மஹிமை சிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, இப்போது நான் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஏழாம் அத்தியாயத்தின் மஹிமையை பற்றி கூறப்போகிறேன். இதை கேட்பவர்கள், காதில் அமிர்தம் பாய்வது போல் உணர்வார்கள்".      பாடலிபுத்ரா என்னும் பெரும் நகரத்தில், சங்குகர்ணா என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் வணிகம் செய்து பெரும் செல்வதை ஈட்டிவைத்திருந்தார். ஆனால் பகவானுக்கு எந்தவித பக்தி தொண்டும் செய்ததில்லை; அதேபோல் மூதாதையர்களுக்கு எந்த தர்பணமும் செய்ததில்லை. ஆனால் பல மன்னர்களை தன் இல்லத்திற்கு அழைத்து வந்து உபசரிக்கும் அளவிற்கு மிகுந்த செல்வம் அவரிடம் இருந்தது.     ஒரு முறை அந்த பிராமணர், தன் குழந்தைகளுடனும் மற்ற உறவினர்களுடனும், தனக்கு நான்காவது திருமணம் ஏற்பாடு செய்வதற்காக புறப்பட்டனர். இர...
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 6 I Gita mahatmiya Chapter-6

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 6 I Gita mahatmiya Chapter-6

Videos, கீதா மஹாத்மியம்
https://youtu.be/UXuQdtKOnrI பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை ஆறாம் அத்தியாயத்தின் மஹிமை பகவான் விஷ்ணு கூறினார், "இப்போது நான் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஆறாம் அத்தியாயத்தின் சிறப்புக்கள் பற்றி கூறப்போகிறேன். யாரொருவர் இந்த விளக்கத்தை கேட்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக பௌதிக களங்கங்களிலிருந்து விடுதலை அடைவார்கள்".      கோதாவரி நதிக்கரையில் பிரதிஸ்தான்பூர் என்ற ஊர் உள்ளது. அங்கு நான் பிப்பலேசன் என்று அழைக்கப்படுகிறேன். அந்த ஊரின் அரசர் பெயர் ஞானஸ்ருதி; அவர் மிகவும் நர்குணங்கள் படைத்தவர். ஆகையால் மக்கள் அனைவருக்கும் அவரை மிகவும் பிடிக்கும். அவர் நாள்தோறும் பிரமாண்டமான யாகங்களை செய்வார். எவ்வளவு பிரமாண்டம் என்றால் யாககுண்டத்திலிருந்து எழும் புகையானது, தேவலோகத்தின் நந்தவனத்திலுள்ள கல்பவிருக்ஷ மரங்களை மூடி கறுப்பாக்கும். பார்ப்பதற்கு அந்த மரங்கள் மன்னர் ஞானஸ்ருதிக்கு மரியாத...
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 5 (பிங்களாவின் கதை) Gita mahatmiya Chapter-5 (Story of Pingala)

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 5 (பிங்களாவின் கதை) Gita mahatmiya Chapter-5 (Story of Pingala)

Videos, கீதா மஹாத்மியம்
https://youtu.be/9SeuHEg09K0 பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை ஐந்தாம் அத்தியாயத்தின் மஹிமை  பகவான் விஷ்ணு கூறினார், "எனதன்பு லட்சுமியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் ஐந்தாம் அத்தியாயத்தின் அளவிட முடியாத வர்ணனைகளை கூறப்போகிறேன். கவனமாக கேட்பாயாக".      மதரா என்னும் மாவட்டத்தில் புருகுட்சப்பூர் என்னும் ஊர் உள்ளது. அங்கு பிங்களன் என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். அவருடைய குழந்தை பருவத்திலிருந்தே அவருக்கு வேதங்களும் பல பிராமண பண்புகளும் கற்றுத்தரப்பட்டன. ஆனால் அதில் சிறிதும் ஆர்வம் காட்டாத அவர், இளமை பருவத்தை அடைந்ததும் பிராமண கலாச்சாரத்தை முழுவதுமாக உதறித்தள்ளிவிட்டு, இசை கருவிகள் வாசிப்பது, பாடுவது மற்றும் நடனம் ஆடுவது போன்றவற்றை கற்க துவங்கினார். படிப்படியாக அதில் பிரபலம் அடைந்தார். இதை கண்ட நாட்டு மன்னர், பிராமணரை அழைத்து, தன்னுடன் அரண்மனையிலேயே தங்கிவிடும்ப...
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 4 (பரதரின் கதை) Gita mahatmiya Chapter-4 (Story of Saint Bharata)

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 4 (பரதரின் கதை) Gita mahatmiya Chapter-4 (Story of Saint Bharata)

Videos, கீதா மஹாத்மியம்
https://youtu.be/LZ7o4ekJVJE பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தின் மஹிமை பகவான் விஷ்ணு கூறினார், "எனதன்பு லட்சுமியே, இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தின் வர்ணனை பற்றி கூறுகிறேன். கேட்பாயாக".      கங்கை நதிக்கரையிலுள்ள காசி (பனாரஸ்) என்னும் ஊரில் விஸ்வநாதர் கோவிலில், பரதர் என்னும் துறவி வாழ்ந்து வந்தார். மிகுந்த பக்தியுடன் தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தை படித்து வந்தார். முன்னொருநாளில் பரதர் பாதயாத்திரை சென்றபொழுது, தபோதன் என்னும் ஊரிலுள்ள பகவான் கிருஷ்ணரை தரிசிக்க சென்றார். தரிசனம் முடிந்ததும் சற்று ஓய்வெடுக்க எண்ணி அவர் இரண்டு வில்வ மரங்களை பார்த்தார். அதன் நிழலில் ஓய்வெடுக்கலானார். ஒரு மரத்தின் வேர்களை தன் தலைக்கு அடியிலும் இன்னொரு மரத்தின் வேர்களை தன் கால்களுக்கு அடியிலும் வைத்துக்கொண்டு உறங்கினார்...
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 3 (ஜடா வின் கதை) Gita mahatmiya Chapter-3 (Story of Jada)

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 3 (ஜடா வின் கதை) Gita mahatmiya Chapter-3 (Story of Jada)

Videos, கீதா மஹாத்மியம்
https://youtu.be/w0W-QRqbnpk பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை மூன்றாவது அத்தியாயத்தின் மஹிமை பகவான் விஷ்ணு கூறினார், " எனதன்பு லட்சுமியே, ஜனஸ்தான் என்ற ஊரில் ஜடா என்ற கௌஷிக்க வம்சத்தில் பிறந்த பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் பிராமணர்களுக்கு என்று சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட எந்த செயலையும் செய்யாமல் பல அதர்ம காரியங்களை செய்து வந்தார். மது அருந்துவது, சூதாடுவது, பெண்கள் மற்றும் மிருகங்களை வேட்டையாடுவது என அனைத்திலும் ஈடுபட்டு, தன் செல்வத்தை வீணாக்கினார். ஆகையால் வட நாட்டிற்கு சென்று செல்வம் ஈட்டி வரலாம் என்று எண்ணி அவ்வாறே செய்தார். சில காலம் கழித்து தான் ஈட்டிய செல்வத்துடன் ஜனஸ்தான் திரும்ப எண்ணினார்.        வெகு தூரம் பயணம் செய்ததால் மிகவும் களைப்படைந்த ஜடா சிறிது ஓய்வெடுக்க எண்ணினார். சூரியன் அஸ்தமிக்கும் வேளையில், பாலைவனம் போல் இருந்த அந்த இடத்திலிருந்த ஒரு...
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 2 (தேவாஷ்யாமா வின் கதை) Gita mahatmiya Chapter-2 (Story of Devashayama)

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 2 (தேவாஷ்யாமா வின் கதை) Gita mahatmiya Chapter-2 (Story of Devashayama)

Videos, கீதா மஹாத்மியம்
https://youtu.be/Jwk1K-3xtW0 பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் இரண்டாம் அத்தியாயத்தின் மஹிமை பகவான் விஷ்ணு, " எனதன்பு லட்சுமியே, இதுவரை ஸ்ரீமத் பகவத் கீதையின் முதல் அத்தியாயம் பற்றிய சிறப்புகளை கேட்டறிந்தாய். இப்பொழுது, நான் பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயத்தின் சிறப்புகளை பற்றி வர்ணிக்கப்போகிறேன். இதையும் கவனமாக கேட்பாயாக", என்று கூறினார்.     தென்னிந்தியாவிலுள்ள பந்தர்பூர் என்னும் ஊரில், தேவாஷ்யாமா என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் அனைத்து விதமான யாகங்களை செய்யக்கூடியவராகவும், தன் இல்லத்திற்கு வரும் அனைவரையும் நன்கு உபசரிக்க தெரிந்தவராகவும் இருந்தார். இதனால் அனைத்து தேவர்களையும் திருப்திப்படுத்தவும் செய்தார். ஆனால் தன் மனதளவில் நிம்மதியும் சந்தோஷமும்     இல்லாமல் இருந்தார். அவருக்கு தன் ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இடையே உள்ள உறவை பற்றிய ஞானத்தை அறிந்துகொள்ள வேண்டும...
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 1 (சுஷர்மா வின் கதை) Gita mahatmiya Chapter-1 (Story of Shusarma)

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 1 (சுஷர்மா வின் கதை) Gita mahatmiya Chapter-1 (Story of Shusarma)

Videos, கீதா மஹாத்மியம்
https://youtu.be/IBDUzOF6oxs பத்ம புராணத்திலிருந்து - பகவத் கீதை அத்தியாயம் 1 பற்றிய வர்ணனை பார்வதி தேவி கூறினார், "என் பிரியமான கணவரே, நீர் அணைத்து ஆன்மீக உண்மைகளையும் அறிந்தவர். உம்முடைய கருணையால் நான், முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றிய சிறப்புகள் அனைத்தையும் கேட்டறிந்தேன். இப்பொழுது ஸ்ரீமத் பகவத் கீதையை பற்றிய சிறப்புகளை பற்றி கேட்க மிகவும் ஆவலாக உள்ளேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் உரைக்கப்பட்ட பகவத் கீதையையும் அதன் சிறப்புகளையும் கேட்பதால் ஒருவருக்கு பகவான் கிருஷ்ணரின் மீதுள்ள பக்தி அதிகரித்துக்கொண்டேயிருக்கும்”.      சிவபெருமான் கூறினார், "யாருடைய உடல் கார்மேக வண்ணத்தில் உள்ளதோ, யாருடைய வாகனம் பறவைகளின் தலைவனோ, யார் ஆயிரம் தலைகள் கொண்ட அனந்த சேஷன் மீது துயில் கொண்டுள்ளாரோ, யாருடைய வர்ணனை எல்லைக்கு அப்பாற்பட்டதோ, அந்த பகவான் விஷ்ணுவை நான் வழிபடுகிறேன...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question