Sunday, July 6

ஏகாதசி

Deva Shayani (Padma) Ekadashi (Tamil) /தேவசயனி (பத்ம) ஏகாதசி

Deva Shayani (Padma) Ekadashi (Tamil) /தேவசயனி (பத்ம) ஏகாதசி

ஏகாதசி
இந்த ஏகாதசியின் மற்ற பெயர் : ஷயனி / மஹா / பத்ம / தேவ்போதி / அஷத    ஆஷாட மாதம், சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியை தேவசயனி (பத்ம) ஏகாதசியாக கொண்டாடுவர். தேவசயனி ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம். ஸ்ரீ மந் நாராயணன் சயனம் மேற்கொள்ளும் சுக்ல ஏகாதசி இதுவாகும். எல்லா ஏகாதசிகளும் புண்ணியத்தைத் தருவதாயினும் பகவான் நாராயணனுக்கு உகந்த இந்த ஏகாதசியை கடைபிடிப்பது மிகுந்த புண்ணியம் தரும்.தர்மத்தை எந்த சூழ்நிலையிலும் விடாது காக்கும் மஹாராஜா யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ணரிடம் - " ஒ! கேசவா, ஆஷாட மாதத்தின் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர், அன்றைய சுபதினத்தில் வழிபட வேண்டிய கடவுளர் யார். அன்று விரதம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதை பற்றி விரிவாக சொல்லுங்கள்" என்று கூறினார்.பிரபு ஸ்ரீ கிருஷ்ணர் பின் வருமாறு கூறத் தொடங்கினார்.- "ஒ! பூமியின் பாதுகாவலரே, ஒரு முறை பிரம்மதேவர் தன்னுடைய மக...
Yogini Ekadashi (Tamil) I யோகினி ஏகாதசி

Yogini Ekadashi (Tamil) I யோகினி ஏகாதசி

ஏகாதசி
( ஆனி - ஆஷாட மாதம் ,கிருஷ்ண பட்ச ஏகாதசி)ஆஷாட மாதம், கிருஷ்ண‌ பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை யோகினி ஏகாதசியாககொண்டாடுவர். யோகினி ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம். இந்த விரதத்தை இருந்தால் அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள் கிடைக்கும்.மஹாராஜா யுதிஷ்டிரர் கிருஷ்ண பரமாத்மாவை வணங்கி, "பரம் பொருளே, நிர்ஜலா ஏகாதசியின் அபார மகிமையப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆடி மாதத்தில். கிருஷ்ணபட்சத்தில் வரும் யோகினி ஏகாதசி, சுத்த ஏகாதசியைப் பற்றிய விவரம் அறிய விரும்புகிறேன். ஆகையால், மது என்னும் பெயர்கொண்ட அரக்கனை அழித்ததால் மதுசூதனன் என்னும் திருநாமம் பெற்ற கிருஷ்ணா, தயைகூர்ந்து விவரமாகசொல்லவும்" என்று கூறினார்.ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா யுதிஷ்டிரரை நோக்கி, ஹே மஹாராஜா, உபவாசம் இருக்கக்கூடிய நாட்களிலேயே மிகச்சிறப்பான நாள் ஏகாதசி திருநாள். அந்த ஏகாதசி நாட்களில் மிகவும் சிறப்பானது ஆஷாட மாதத்தின் க...
Apara Ekadashi (Tamil) /அபரா ஏகாதசி

Apara Ekadashi (Tamil) /அபரா ஏகாதசி

ஏகாதசி
 அபரா ஏகாதசி. இதனை அசலா ஏகாதசி என்றும் வழங்குவர்.    இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார்.     ஒ யுதிஷ்டிரா !! அபரா ஏகாதசி விரதம் மக்கள் அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய விரதம் ஆகும். இது மற்ற அனைத்து விரதங்களை விட ஸ்ரேஷ்டமானதும், உத்தமமானதும் ஆகும். இந்நாளில் அனைவரும் பக்தியுடன் பகவான் மகாவிஷ்ணுவை ஓங்கி உலகளந்த உத்தமனாகிய திரிவிக்ரமனாக வணங்க வேண்டும்.இந்த ஏகாதசி விரதம் ஒருவர் செய்த பாவங்கள் அனைத்தையும் அழிப்பதோடு, அவருக்கு அளவில்லா செல்வத்தை வாரி வழங்குவதால் இது இப்பெயர் பெற்றது. மேலும் இவ்விரதத்தை நம்பிக்கையோடு கடைபிடிப்பவர்கள் மக்களிடத்தில் பெரும் பேரும், புகழும் பெறுவர்.அதோடு இந்த அபரா ஏகாதசி விரத பிரபாவத்தால் பிரம்மஹத்தி, பிறரை நிந்திப்பது, போரில...
Mohini Ekadasi (Tamil) / மோஹினி ஏகாதசி

Mohini Ekadasi (Tamil) / மோஹினி ஏகாதசி

ஏகாதசி
https://youtu.be/vn0hpxEgJXw மோஹினி ஏகாதசியின் மகிமை  மோஹினி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி சூர்ய புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மகாராஜா யுதிஷ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். ஓ ஜனார்த்தனா ! மோஹினி ஏகாதசி கடை பிடிப்பது எப்படி? மேலும் இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன் என்ன? இவற்றைப்பற்றி எனக்கு விரிவாகக் கூறுங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ தர்மத்தின் மகனே! ஒருமுறை வசிஷ்டமுனிவர் பகவான் இராமச்சந்திரனிடம் கூறிய கதையைப் பற்றி கவனமாகக் கேள்.    நீண்ட காலத்திற்கு முன் ஒருமுறை பகவான் இராமச்சந்திரர் வசிஷ்ட முனிவரிடம் கேட்டார். ஓ மரியாதைக்குரிய முனிவரே! நான் ஜனகராஜரின் மகளான சீதையை விட்டு பிரிந்திருப்பதால் மிகவும் மனவருத்தத்துடன் இருக்கிறேன். தயவு செய்து ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும் மனவருத்தத்தையும் அழிக்கக்கூடிய ஒரு விரதத்தைப...
Varuthini Ekadashi (Tamil) / வருத்தினி ஏகாதசி

Varuthini Ekadashi (Tamil) / வருத்தினி ஏகாதசி

ஏகாதசி, ஆன்மீகப் பதிவு
ஏப்ரல் / மே மாதங்களில் தேய்பிறையில் தோன்றக்கூடிய வருத்தினி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மகாராஜா யுதிஸ்ட்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் கூறினார். ஓ! வாசுதேவா, எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன். தயவுசெய்து (ஏப்ரல்/மே) மாதங்களின் தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் பெருமைகளை பற்றியும் எனக்கு விளக்குங்கள்.பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார் என தருமை மன்னா, இந்த ஏகாதசியின் பெயர் வருத்தினி. இது ஒருவருக்கு இந்த வாழ்க்கையிலும் அதற்கு பிறகும் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் ஒரு ஜீவன் தன் பாவ விளைவுகளை குறைத்துக்கொண்டு, நிரந்தரமான ஆனந்தத்தை அடைந்து மிகுந்த பாக்கியசாலி ஆகிறான். இந்த விரதத்தை கடைப்பிடிப்...
Kamada Ekadasi (Tamil) / காமதா ஏகாதசி

Kamada Ekadasi (Tamil) / காமதா ஏகாதசி

ஏகாதசி
சித்திரை (சைத்ர) மாதம் - சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை காமதா ஏகாதசியாக ‌கொண்டாடுவர். காமதா ஏகாதசி விரத மகிமையை நாம் இப்போது காண்போம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அன்புக்குரிய தோழனான அர்ஜூனன், கிருஷ்ண பரமாத்மாவிடம்," ஹே மதுசூதனா! உனக்கு என்னுடைய அநந்த கோடி நமஸ்காரங்கள். பிரபு, தாங்கள் தயைகூர்ந்து சித்திரை மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் மஹாத்மியத்தை வர்ணிக்க வேண்டுகிறேன். அந்த ஏகாதசியின் பெயர், அன்று ஆராதனை செய்ய வேண்டிய தெய்வம், அவ்விரதத்தை கடைப்பிடித்து மேன்மை பெற்றவர்கள் மற்றும் அவ்விரதம் அனுஷ்டிப்பதால் எவ்வித நற்பலன்கள் கிட்டுகின்றன ஆகிய அனைத்தையும் விஸ்தாரமாக வர்ணித்துக் கூற வேண்டுகிறேன்." என்றான். ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு," ஹே ! பார்த்தா, ஒரு சமயம் குரு வசிஷ்டரிடம் ராஜா திலீபனும் இதே கேள்வியைக் கேட்டான். ஆகையால் அவர்கள் இருவரிடையே நடந்த சம்வாதத்தை (உரையாடல்) உனக்கு அப்படிய...
Papamochani Ekadashi (Tamil) / பாபமோசனி ஏகாதசி

Papamochani Ekadashi (Tamil) / பாபமோசனி ஏகாதசி

ஏகாதசி
பாபமோசனி ஏகாதசி விரத மகிமையை நாம் இப்போது காண்போம்.அர்ஜூனன், பரமாத்மா கிருஷ்ணரிடம்," மதுசூதனா ! ஒவ்வொரு ஏகாதசி விரத மஹாத்மிய கதைகளைக் கேட்டு, மனம் ஆனந்தத்தால் உற்சாகம் அடைவதுடன் மற்ற ஏகாதசி மஹாத்மிய கதைகளையும் அறிந்து கொள்ள ஆவல் மேலிடுகிறது.ஸ்ரீ கிருஷ்ண கோபாலா!, தாங்கள் கிருபை புரிந்து சித்திரை (சைத்ர) மாதம், கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி விரத மஹாத்மியத்தை பற்றி கூற வேண்டுகிறேன். அந்த ஏகாதசி, எந்தப் பெயரால் அழைக்கப்படுகின்றது, அன்று எந்த தெய்வத்திற்கு பூஜை ஆராதனை செய்ய வேண்டும், விரதம் அனுஷ்டிப்பதற்கான விதிமுறை, இவற்றைப் பற்றி தாங்கள் கருணையுடன் விஸ்தாரமாக எடுத்துரைக்க வேண்டும்," என்று வேண்டி நின்றான்.பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜூனனின் வேண்டுகோளுக்கு இணங்கி," பாண்டு நந்தனா! ஒரு சமயம் ப்ருத்வியை (பூமி) ஆண்ட ராஜா மாந்தாதா, ரிஷி லோமசரிடம் இதே கேள்வியை கேட்டான். ராஜனின் கேள்விக்கு லோமச ரிஷி அளி...
Amalaki Ekadasi (Tamil) / ஆமலாகீ ஏகாதசி (நெல்லிக்கனி ஏகாதசி)

Amalaki Ekadasi (Tamil) / ஆமலாகீ ஏகாதசி (நெல்லிக்கனி ஏகாதசி)

ஏகாதசி, ஆன்மீகப் பதிவு
பால்குண மாதம் - சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை ஆமலாகீ ஏகாதசியாக கொண்டாடுவர். ஆமலாகீ ஏகாதசிவிரத மகிமையை நாம் காண்போம். 80,000 ,ரிஷி முனிவர்கள் சூத முனிவரின் உபன்யாசத்தைக் கேட்பதற்காக கூடியிருந்த பொழுது சூதர் "முனிவர்களே,முன்பொரு முறை நடந்த சம்பவம் இது. மஹான் ராஜா மாந்தாதா வசிஷ்டரிடம் கேட்டார்," பிரம்மரிஷி வசிஷ்டரே, தாங்கள் என்னை ஆசீர்வதிக்க நினைத்தால், மங்களமான நன்மை அளிக்கும் விரதம் ஏதாவது உண்டென்றால், அந்த விரதத்தைப் பற்றிய கதை, அதன் மஹிமை இவற்றைப் பற்றி கூறிஅருளுங்கள்." என்றார். மஹரிஷி வசிஷ்டர்," ராஜன், உத்தமமானதும், மோட்சப்பிராப்தியை அளிக்கக் கூடியதும் ஆன ஆமலாகீ ஏகாதசி விரதம் அனைத்து விரதங்களிலும் மேலானது ஆகும்." என்றார்.ராஜா மாந்தாதா வசிஷ்டரிடம், "வேதங்களில் பாண்டித்யம் பெற்ற முனி சிரேஷ்டரே, அமலாகீ விரதம் உருவானகதை, விரதம் அனுஷ்டிக்கும் விதிமுறை இவற்றைப் பற்றி கருணையுடன் விஸ்தாரம...
Vijaya Ekadashi (Tamil) / விஜய ஏகாதசி

Vijaya Ekadashi (Tamil) / விஜய ஏகாதசி

ஏகாதசி
மாசிமாதம் - கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை விஜய ஏகாதசியாக ‌கொண்டாடுவர். விஜய ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.ஏகாதசிவிரத மஹாத்மிய கதைகள் அர்ஜூனனின் மனதிற்கு அளவில்லாத ஆனந்தம் அளித்தாலும், திருப்தி அடையாமல், ஜெயா ஏகாதசி விரத மஹிமையை கேட்டு முடித்தவுடன், ஸ்ரீகிருஷ்ணரிடம், " ஹே மதுசூதனா! தாங்கள் கிருபை புரிந்து, பால்குண மாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர், விரதம் அனுஷ்டிக்கும் விதி, இவற்றைப்பற்றி விஸ்தாரமாக கூற வேண்டுகிறேன்." என்றான். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், "ஹே பார்த்தா! மாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி, விஜய ஏகாதசி என்னும் பெயரால்அழைக்கப்படுகிறது. இவ் விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பிரபாவத்தால் அனைத்திலும் வெற்றி கிட்டுகிறது. மிகவும் மேன்மை வாய்ந்த இவ்விரத மஹாத்மியகதையைக் கேட்பதாலும், படிப்பதாலும் அனைத்து பாபங்களும் அழியப் பெறுகின்றன....
Sat-Tila Ekadashi (Tamil) / சத்தில ஏகாதசி

Sat-Tila Ekadashi (Tamil) / சத்தில ஏகாதசி

ஆன்மீகப் பதிவு, ஏகாதசி
ஒரு முறை நாரத முனி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் இந்த சத்தில ஏகாதசியின் மகிமையைப்பற்றி கேட்க, அதற்கு பகவான் கூறினார்.            முன்பு ஒரு காலத்தில் ஒரு பிராமணப் பெண் ஒருத்தி என்னை அன்புடன் பூஜித்து வந்தாள். விரதங்களை (ஏகாதசி, கோகுலாஷ்டமி, இராம நவமி…முதலியன) தவறாமல் அனுசரித்தும், வேண்டியவர்களுக்கு தானங்களை கொடுத்தும், எந்த வித பலனையும் எதிர்பாராமல் என்னையும் பூஜித்தும் வந்தாள். ஆனால், அவளிடம் ஒரு பழக்கம் உண்டு. உணவை பிராமணர்களுக்கோ மற்ற தேவர்களுக்கோ அளிக்க மாட்டாள். இதை நானும் எண்ணிக் கொண்டிருந்தேன். இவள் தன் கடும் விரதங்களாலும், பூஜைகளாலும் என் உலகை அடையத்தகுந்தவள் என்றாலும் நான் அவளை சோதிக்க எண்ணி, மண்டை ஓடு மாலை அணிந்த சிவணடியார் வேடம் பூண்டு அவளிடம் சென்றேன். அவளிடம் நான் பிச்சை கேட்க, அவள் கோபமுடன் சேற்றை (களிமண்) என் பிச்சை பாத்...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.