பகவான் நாராயணரின் மற்ற அவதாரங்களிலிருந்து வேறுபட்ட அவதாரம் நரஸிம்ம அவதாரம். உலக மக்களுக்காகவும் தேவர்களின் அபயக் குரலுக்காகவும், ஒரு தனி நபருக்காக, உண்மையான பக்திக்குப் பரிசாக எடுக்கப்பட்ட அவதாரம்.
“அஹோபிலம்” என்ற பெயர் எப்படி வந்தது ?
நாராயணரை நரஸிம்மராகத் தரிசிக்கும் ஆர்வத்துடன் கருட பகவான் இத்தலத்தில் அமர்ந்து கடும்தவம் செய்தார். கருடனின் தவத்தை மெச்சி அவருக்கு நரஸிம்மராகக் காட்சியளிக்க திருவுளம் கொண்டார் பரந்தாமன்.
சத்திய சொரூபமாக, மகாபுருஷராக, நெருப்பின் உக்கிரத்தோடு நரஸிம்மர் அம்மலைத் தொடரில் ஓர் உயரமான குகையில் அவருக்குக் காட்சியளித்தார்.
நவ நரஸிம்ம ஆலயம் இந்தியாவில், ஆந்திராவின் “நந்தியால்” என்ற இடத்திற்கு அருகில் அஹோபிலத்தில் அமைந்துள்ளது. நரஸிம்மரைக் குறிக்கும், வணங்கப்பட்ட வைணவ ஆலயங்களில் அஹோபிலம் ஒன்றாகும். கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் கம்பீரமான மலைகளுக்கு மத்தியில் ஆந்திராவின் கர்நூல் மாவட்டத்தில் அஹோபிலம் அமைந்துள்ளது. மலைகளின் உச்சியில் அமைந்துள்ள சன்னதி மேல் அஹோபிலம் , என்றும் கீழே கீழ் அஹோபிலம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
இந்த நவ நரஸிம்ம க்ஷேத்ரம் அஹோபில நரஸிம்மர், ஸ்ரீ வராஹ நரஸிம்மர், ஸ்ரீ மாலோல நரஸிம்மர், ஸ்ரீ யோக நரஸிம்மர், ஸ்ரீ பாவன நரஸிம்மர்,ஸ்ரீ கரஞ்சன நரஸிம்மர்,ஸ்ரீ சத்ர வட நரஸிம்மர், ஸ்ரீ பார்க்கவ நரஸிம்மர் மற்றும் ஸ்ரீ ஜ்வால நரஸிம்மர் போன்ற நரஸிம்ம பகவானின் ஒன்பது வடிவமாக எழுந்தருளி உள்ளார். இது தென்னிந்தியாவின் முக்கிய புனித யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாகும், இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இது “திரு சிங்கவேள்குன்றம் என்றும் அழைக்கப்படுகிறது.
I want nava narasimar moola vicraga picture
You can click the link of each button and you can see the each moola vigraha picture.