Lord Balaram’s yatra (Tamil) /பகவான் பலராமரின் தீர்த்த யாத்திரை
பகவான் பலராமர் பல்வலனைக் கொன்று பிராமணர்களை மகிழ்வித்ததையும், பல்வேறு யாத்திரை ஸ்தலங்களில் அவர் நீராடியதையும், பீமசேனருக்கும், துரியோதனனுக்கும் யுத்தத்தைக் கைவிடும் படி அவர் புத்தி கூறியதையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது.
நைமிஷாரண்ய வனத்திலுள்ள முனிவர்களின் யாக அரங்கத்தில், வளர்பிறையன்று கடுமையான காற்று வீசத் துவங்கியது. அருவருப் பான சீழ்நாற்றத்தைப் பரவச்செய்த அக்காற்று, அனைத்தையும் புழுதி யால் மறைத்தது. பிறகு அசுரனான பல்வலன் தன் கையில் ஒரு சூலத்துடன் அங்கு தோன்றினான். அவனது பூதாகாரமான உடல் மையிருட்டாகவும், அவனது முகம் மிகவும் பயங்கரமாகவும் இருந்தன. அந்த அசுரனைத் தமது கலப்பையால் பற்றியிழுத்த பகவான் பலராமர், தமது கதையால் அவனது தலையில் கொடூரமாக அடித்து அவனைக் கொன்றார். முனிவர்கள் பகவான் பலராமரின் பெருமைகளைப் பாடி, அவ ருக்கு ஏராளமான சன்மானங்களை அளித்தனர்.
பகவான் பலரா...