Saturday, September 19

ஸ்ரீவாஸ பண்டிதர்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻


பஞ்ச தத்துவத்தில் ஐந்தாவது ஸ்ரீவாஸ பண்டிதர், ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர், பிரபு நித்யானந்தர், ஸ்ரீ அத்வைதர், கதாதரர், ஸ்ரீவாஸாதி, கௌர பக்த பிருந்தர்கள். பகவான் சைதன்யரின் அவதாரத்திற்கு முன்பே நவதீபத்தில் வாழ்ந்து வந்தனர். ஸ்ரீவாஸர் தனது சகோதரர்களான ஸ்ரீ ராமர், ஸ்ரீ நிதி மற்றும் ஸ்ரீபதியை கிருஷ்ணரின் நாமங்களைப் பாடுதல், பகவானை வழிபடுதல் மற்றும் தினமும் மூன்று முறை கங்கையில் நீராடுதல் போன்ற அவர்களின் பக்தி வாழ்க்கையில் வழிநடத்தினார். ஸ்ரீ அத்வைத ஆச்சார்ய பிரபுவைச் சந்தித்த அவர்கள், பாகவதத்தைப் படித்தனர் மற்றும் முழுமுதற் கடவுளின் அவதாரத்திற்காகப் பிரார்த்தனை செய்தனர். அவர்கள் ஏன் பிரார்த்தனை செய்தார்கள்? ஏனென்றால், அந்த நேரத்தில் நதியாவில் (Nadia) தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த தீவிர நாத்திகர்கள், தர்க்கவாதிகள் மற்றும் கர்வம் கொண்ட பண்டிதர்களிடையே வைணவத்தை கிருஷ்ணரின் அவதாரத்தால் மட்டுமே மீண்டும் நிலைநிறுத்த முடியும் என்பதால் தான்.

ஸ்ரீவாஸரின் மனைவியான மாலினி, சச்சி தேவியின் உற்ற தோழியாக இருந்தார். அவர் நிமாய்க்கு ஒரு செவிலியராக சேவை செய்தார். பகவான் விஸ்வம்பரர் தோன்றியபோது, அனைத்து பக்தர்களின் இதயங்களும் பெற்றோரின் பாசத்தால் (வாத்ஸல்ய பாவம்) நிரம்பின. கௌரசந்திரர், மாலினி மற்றும் ஸ்ரீவாஸரை தனது இரண்டாவது தாய் தந்தையராக நேசித்தார்.

ஸ்ரீவாஸ அங்கன் (Shrivasa Angan), நிமாயின் வீட்டிலிருந்து அரநூறு அடி வடக்கே அமைந்திருந்தது. ஸ்ரீவாஸ பண்டிதரின் அரண்மனை போன்ற வீடானது, பெரிய வசதியான அறைகள், உயரமான பாதுகாப்பு மதில் சுவர் மற்றும் அடர்ந்த பசுமையான தோட்டங்களையும் தோப்புகளையும் கொண்டிருந்தது. ஒவ்வொரு இரவும் ஸ்ரீ கௌராங்க மஹாபிரபுவும் அவரது நெருங்கிய நண்பர்களும் இங்கு பரவசமூட்டும் கீர்த்தனைகளை அனுபவித்து, பிருந்தாவனத்தின் இனிமைகளை ருசிப்பார்கள்.

இங்கு தான், ஸ்ரீ கிருஷ்ணரின் சங்கீர்த்தன இயக்கத்தை நிறுத்துவதற்கான தனது முட்டாள்தனமான முயற்சியில், ஆத்திரமடைந்த முஸ்லீம் மன்னன் சாந்காசி புனிதமான மிருதங்கத்தை உடைத்தார். அதன்பிறகு, ஸ்ரீவாஸ அங்கன் ‘கோல் பங்க டங்கா’ (மிருதங்கம் உடைக்கப்பட்ட இடம்) என்று அழைக்கப்பட்டது.

சாந்காசி சங்கீர்த்தனத்தை தடை செய்து அவசர சட்டம் ஒன்றை இயற்றினார். இதை மீறுபவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்படுவார்கள் என்றும், அவர்களின் சொத்துக்களை இழக்க நேரிடும் என்றும் அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான நதியா வாசிகள் (நவதீபத்தின் குடியிருப்பாளர்கள்) இதைக் கண்டு பீதியடைந்தாலும், ஸ்ரீவாஸ பண்டிதர் இந்த வெறித்தனமான சட்டத்தைப் பார்த்து சிரித்தார்.

ஸ்ரீவாஸ அங்கனுக்குள் பகவான் கௌராங்க-சுந்தரர் தனது நித்திய சகாக்கள் அனைவருக்கும் தனது தெய்வீக ரூபத்தைக் காட்டினார். ஸ்ரீவாஸ பண்டிதரின் வீடு கௌராங்கரின் சங்கீர்த்தன இயக்கத்தின் தலைமையகமாகச் செயல்பட்டது. தினசரி பாகவத வகுப்புகள், இரவு நேரக் கீர்த்தனைகள் மற்றும் பகவான் கௌர ராயரின் பல ரகசியமான விரஜ (Vraja) லீலைகள் இங்குதான் நிகழ்ந்தன.

பிராமண சமூகத்தின் கற்றறிந்த தலைவர்களான ஸ்ரீவாஸ பண்டிதரும் ஸ்ரீ அத்வைத ஆச்சார்யரும், பகவானின் ஹரி-நாம சங்கீர்த்தன இயக்கத்திற்காகத் தங்கள் முழு ஆற்றலையும் அர்ப்பணித்தனர். அவர்கள் தங்கள் உடல்கள், மனங்கள், வீடுகள், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அனைத்து உடைமைகளையும் பகவான் கௌரரின் சேவைக்காகச் சரணடையச் செய்தனர். அவர்கள் வேறு எந்த தேவர்களையோ அல்லது தேவதைகளையோ அறிந்திருக்கவில்லை. ஸ்ரீவாஸ பண்டிதர் தனது குடும்பத்தை அவர்கள் தனது உறவினர்கள் என்பதற்காக அல்லாமல், அவர்கள் ஸ்ரீ சைதன்யரின் அன்பான சேவகர்கள் என்பதற்காகவே பேணி வந்தார்.

ஸ்ரீவாஸ பண்டிதர் ‘தடஸ்த ஜீவன்’ (marginal living entity) என்பதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஸ்ரீவாஸர் தலைமையிலான பக்தர்கள் பகவான் சைதன்யரின் சிறிய அங்கங்களாக (அவரது முகம், கண்கள், கைகள், சக்கரம் மற்றும் பிற ஆயுதங்கள்) விவரிக்கப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் ஸ்ரீ கௌரசுந்தரரின் லீலைகளில் பங்கேற்றனர். அவர்களுடன் இணைந்து பகவான் கௌராங்கர் சங்கீர்த்தன இயக்கத்தைப் பரப்பினார். ஸ்ரீவாஸ பண்டிதர் என்பவர் பிரபஞ்சங்களுக்கு இடையே உபதேசிக்கும் நாரத முனியும், பகவானின் தொடர்ச்சியான சகாவும் ஆவார். அவரது சமாதி 64 சமாதிகள் உள்ள பகுதியில் (64 Samadhis Area) அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.