Friday, April 19

பஜஹுரே மன ஸ்ரீ நந்த-நந்தன(கோவிந்த தாஸ் கவிராஜ்)

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

கீழே உள்ள பாடலை எளிதில் பாட இந்த ஆடியோவை “PLAY” செய்யவும்.

(1)
பஜஹுரே மன ஸ்ரீ-நந்த-நந்தன
அபய-சரணார விந்தரே
துர்லப மானப-ஜனம ஸத்-சங்கே
தரோஹோ ஏ பவ- ஸிந்து ரே

(2)
சீத ஆதவ பாத பரிஷண
ஏ தின ஜாமினீ ஜாகி ரே
பிபலே ஸேவினு க்ருபண துரஜன
சபல சுக-லப லாகி ரே

(3)
ஏ தன யெளபன புத்ர பரிஜன
இதே கி ஆசே பரதீதி ரே
கமல-தல-ஜல ஜீவன டலமல
பஜஹு ஹரி-பத நீதி ரே

(4)
ஸ்ரவண கீர்தன ஸ்மரண வந்தன
பாத-ஸேவன தாஸ்ய ரே
பூஜன சகீ-ஜன ஆத்ம-நிவேதன
கோவிந்த-தாஸ-அபிலாஷா ரே


1)

ஓ மனமே, நந்த மகராஜ குமாரனின் தாமரைப் பாதங்களை வணங்கு, அது ஒருவனை அச்சமற்றவனாக மாற்றும். கிடைப்பதற்கரிய இந்த மானுட பிறவியை அடைந்ததால், சாதுக்களின் தொடர்பின் மூலம் இந்த பிறவிக்கடலை கடந்துவிடு.

2)
காற்று, மழை, குளிர்ச்சி, வெப்பம் ஆகியவற்றினால் அவதிப்பட்டு, இரவு, பகல் உறக்கமில்லாமல் இருக்கிறேன். சிறிது நிலையற்ற இன்பத்திற்காக மோசமான, போக்கிரிதனம். கொண்ட மனிதர்களுக்கு உபயோகமற்ற சேவையை புரிகிறேன்.

3)
குடும்ப அங்கத்தினர்கள், குமாரர்கள், இளமை, செல்வம் போன்றவற்றில் உண்மையான மகிழ்ச்சிக்கு என்ன உத்தரவாதம்? இந்த வாழ்க்கை தாமரை இதழ் மேல் உள்ள ஒரு சொட்டு நீரைப் போல தடுமாற்றமானதாகும். ஆகவே எப்பொழுதும் பகவான் ஹரியின் தாமரைப் பாதங்களுக்கு சேவை செய்து,அதை வணங்கி வர வேண்டும்.

4)
கோவிந்ததாஸ் கவிராஜர் ஒன்பது வகையான பக்தித்தொண்டு முறையில் தன்னைத் தானே ஈடுபடுத்திக் கொண்டு, பேரானந்தம் அடைகிறார். அதாவது பகவான் ஹரியின் பெருமைகளை கேட்பது, பாடுவது, இடைவிடாமல் நினைத்திருப்பது, பகவான் ஹரியை ஸ்தோத்தரிப்பது, பிரபுவின் தாமரைப் பாதங்களுக்கு சேவை செய்வது, தன்னை ஒரு சேவகனாக எண்ணி பகவானுக்கு தொண்டு புரிவது, புஷ்பம், அகர்பத்தியுடன் அவரை வழிபடுவது, அவருக்கு ஒரு நண்பனாக சேவை செய்வது மற்றும் முழுவதும் தன்னையே பகவானிடத்தில் அர்ப்பணித்து விடுவது.

+7
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question